என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
அன்று ரசிகன், இன்று வீரன்: ஷ்ரேயாஸ் அய்யர் நெகிழ்ச்சி
- அரையிறுதியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
- இந்தத் தொடரில் இரண்டு சதங்கள் அடித்து முத்திரை பதித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்றும் வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் அரையிறுதி ஆட்டங்கள் முடிவடைந்தன. நாளைமறுதினம் (19-ந்தேதி) குஜராத் மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்திய அணியில் 4-வது வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ஷ்ரேயாஸ் அய்யர் கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி லீக் ஆட்டத்தில் சதம், அரையிறுதியில் சதம் என அசத்தியுள்ளார்.
இறுதிப் போட்டி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ''நான் மும்பை வான்கடே மைதானத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நண்பர்களுடன் சென்று நேரில் பார்த்து ரசித்தேன். அப்போது என் நண்பர்களிடம் நானும் ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று கூறினேன். தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறேன். இதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. இது மிகப்பெரிய பெருமை'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்