search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவி பிஸ்னோஸ்"

    • முதல் மூன்று போட்டிகளில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    முதல் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாத்திலும், 2-வது போட்டியில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.

    கடந்த 3 போட்டியில் விளையாடாத ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய 2 ஆட்டத்திலும் விளையாடுகிறார். துணை கேப்டனாக பணியாற்றும் அவரது வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுழற்பந்து வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஷ்ரேயாஸ் அய்யரின் வருகை கடைசி 2 போட்டிகளில் பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் சிறந்த நிலையில் இருக்கிறார். அணியில் உள்ள மூத்த வீரர்களில் ஒருவரான அவரின் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும். உலகக் கோப்பையில் அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கேப்டன் பதவியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுகிறார். வீரர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார்.

    இவ்வாறு பிஷ்னோய் கூறியுள்ளார்.

    23 வயதான பிஷ்னோய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். 19 ஆட்டத்தில் 31 விக்கெட் சாய்த்துள்ளார். 16 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். இந்த தொடரில் அவர் 3 போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

    ×