search icon
என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • வங்காளதேச நாட்டின் தென்மேற்கு மாவட்டமான மகுரா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக வெப்பம் அலை வீசுவதால், மக்கள் வெளியில் நடமாட நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி கடுமையான வெப்ப அலை வீசுகிறது. கடந்து இரண்டு வாரங்களில் வெப்பம் தாங்க முடியாமல் 15 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 11 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வங்காளதேச நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள மகுரா மாவட்டத்தில்தான் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் வெப்பநிலை 43.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

    கடந்த சில வருடங்களாக இல்லாத வகையில் வங்காளதேசத்தின் பெரும்பாலான இடத்தில் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப அலை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், மதராஸ், தொழிநுட்ப கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்குள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

    சீரற்ற மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரும் ஆண்டுகளிலும் வங்காளதேசத்தில் அதிக வெப்ப அலை வீசும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    • மகுரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது.
    • விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து குல்னாவுக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. மகுரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

    இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    • வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
    • இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி இரண்டு இடம் முன்னேறியது.

    துபாய்:

    வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர்.

    இந்நிலையில், இந்த தொடர் நிறைவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டது.

    புதிய பட்டியலின் படி 6-வது இடத்தில் இருந்த இலங்கை வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் 50 சதவீதத்துடன் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    இலங்கைக்கு எதிராக தோல்வி கண்ட வங்காளதேசம் தென் ஆப்பிரிக்காவுடன் சேர்ந்து 7-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

    68.51 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்திலும், 62.50 சதவீதத்துடன் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், 50 சதவீதத்துடன் நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளது.

    36.66 சதவீதத்துடன் பாகிஸ்தான் 5வது இடத்திலும், 33.33 சதவீதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் 6வது இடத்திலும் உள்ளது.

    • வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 318 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இதன்மூலம் 192 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது.

    சட்டோகிராம்:

    வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய வங்காளதேசம் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜாகீர் ஹசன் 54 ரன்கள் அடித்தார்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்னண்டோ 4 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமாரா, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 157 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. மேத்யூஸ் 56 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து, 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி தனது 2-வது இன்னிங்சில் களமிறங்கியது.

    அந்த அணியின் மொமினுல் ஹக் அரை சதம் விளாசி அவுட் ஆனார். லிட்டன் தாஸ் 38 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 36 ரன்னும் எடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மெஹிதி ஹசன் மிராஸ் பொறுப்பாக ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் எடுத்துள்ளார்.

    இறுதியில், வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 318 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 192 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றதுடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இலங்கை சார்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டும், கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கமிந்து மெண்டிஸ் பெற்றார்.

    • இந்திய பொருட்களை புறக்கணிக்கவும் என எதிர்க்கட்சிகள் பிரசாரம்.
    • எதிர்க்கட்சி தலைவர்களின் மனைவிகள் இந்தியாவுக்கு செல்லும்போது சேலை வாங்கி, வங்காளதேசத்தில் விற்பனை செய்தார்கள்.

    வங்காள தேசத்தில் இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் (boycott of Indian products) என்ற எதிர்ப்பு பிரசாரம் தற்போது கிளம்பி வருகிறது. சமூக ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் (influencers) மட்டும் எதிர்க்கட்சியின் சில தலைவர்கள் இவ்வாறு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    அவாமி லீக் கட்சியின் தலைவரும், வங்காளதேச பிரதமருமான ஷேக் ஹசீனா இதற்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது:-

    இந்திய தயாரிப்பு பொருட்களை எதிர்க்க வேண்டும் என சொல்பவர்களுக்கு என்னுடைய ஒரே கேள்வி, எவ்வளவு இந்திய சேலைகள் உங்களுடைய மனைவிகள் வைத்துள்ளார்கள். அந்த சேலைகளை ஏன் உங்கள் மனைவியிடம் இருந்து வாங்கி இன்னும் தீ வைத்து எரிக்காமல் உள்ளீர்கள் என்பதுதான்.

    கரம் மசாலா, வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் அனைத்து வாசனை திரவியங்கள் இந்தியாவில் இருந்து வருகிறது. இவைகள் அனைத்தும் வங்காளதேசம் தேசிவாத கட்சி தலைவர்களின் வீட்டின் சமையலறையில் பார்க்கக்கூடாது.

    வங்காளதேசம் தேசியவாத கட்சி ஆட்சியில் இருந்தபோது மந்திரிகள் மட்டும் அவர்கள் மனைவியர் இந்தியாவிற்கு சென்றபோது அங்கிருந்து சேலைகளை வாங்கி வங்காள தேசத்தில் விற்பனை செய்தார்கள்.

    இவ்வாறு ஷேக் ஹசீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

    வங்காளதேசத்தின் பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவதற்கு துணை செய்ததாகவும், ஷேக் ஹசீனா பிரதமராவதை இந்தியா விரும்புவதாகவும் வங்காளதேச எதிர்க்கட்சி குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பொருட்களை புறக்கணிக்கவும் என்பதை ஊக்குவிக்கும் தொடர்பாக வங்காளதேசம் தேசிவாத கட்சி தலைவர் ருகுல் கபீர் ரிஸ்வி காஷ்மீர் சால்வே-ஐ சாலையில் தூக்கி எறிந்த நிலையில் ஷேக் ஹசீனா இவ்வாறு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்தது.
    • இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் உள்பட 6 பேர் அரை சதமடித்தனர்.

    சட்டோகிராம்:

    வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும், கருணரத்னே 86 ரன்னும், தனஞ்செய டி சில்வா 70 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும், நிஷான் மதுஷ்கா 57 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, வங்காளதேசம் முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

    • சுரங்கபாதையின் மேற்பகுதியில் உள்ள இரும்பு கம்பிகள் மீது மோதி விடாமல் இருப்பதற்காக வாலிபர் குனிந்தும், நிமிர்ந்தும் செல்வது போன்று காட்சிகள் உள்ளது.
    • வீடியோ வைரலாகி 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சில வாலிபர்கள் பொது இடங்களில் சாகசங்கள் செய்து அதனை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இதில் சில வீடியோக்கள் விபரீதமாக உள்ளது. அதுபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    அதில், வங்காளதேசத்தில் ஒரு வாலிபர் ஓடும் ரெயிலில் மேற்கூரையில் நின்றவாறு சாகசம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரெயிலின் மேற்கூரையில் அந்த வாலிபர் ஆபத்தான முறையில் நிற்கிறார். அப்போது ரெயில் ஒரு சுரங்கபாதை வழியாக செல்கிறது. அந்த சுரங்கபாதையின் மேற்பகுதியில் உள்ள இரும்பு கம்பிகள் மீது மோதி விடாமல் இருப்பதற்காக வாலிபர் குனிந்தும், நிமிர்ந்தும் செல்வது போன்று காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ வைரலாகி 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • முதலில் ஆடிய வங்காளதேசம் 286 ரன்கள் எடுத்துள்ளது.
    • அடுத்து ஆடிய இலங்கை 287 ரன்களை எடுத்து வென்றது.

    சட்டோகிராம்:

    இலங்கை, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. ஹிருடோய் 96 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சவுமியா சர்க்கார் 68 ரன்னும், ஷாண்டோ 40 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், மதுஷனகா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ டக் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 16 ரன்னும், சமரவிக்ரமா ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் பொறுப்புடன் ஆடிய பதும் நிசங்கா சதமடித்து அசத்தினார். அவருக்கு அசலங்கா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. அசலங்கா அரை சதம் கடந்தார்.

    4வது விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 114 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசலங்கா 91 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இலங்கை 47.1 ஓவரில் 287 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வங்காளதேசம் 286 ரன்கள் எடுத்துள்ளது.

    சட்டோகிராம்:

    இலங்கை அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் இலங்கை 2-1 என கைப்பற்றியது. நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, வங்காளதேசம் முதலில் களமிறங்கியது. முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சவும்யா சர்க்கார், ஷாண்டோ ஜோடி நிதானமாக ஆடியது.

    2வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த நிலையில் ஷாண்டோ 40 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுமையுடன் ஆடிய சவுமியா சர்க்கார் அரை சதம் கடந்து 68 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய தவ்ஹித் ஹிருடோய் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்து அரை சதம் கடந்தார்.

    இறுதியில், வங்காளதேசம் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. ஹிருடோய் 96 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், மதுஷனகா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறஙகுகிறது.

    • ரெஸ்டாரன்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து கட்டடம் முழுவதும் பரவியது.
    • 22 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் ரெஸ்டாரன்ட் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ரெஸ்டாரன்டில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது. அந்த கட்டத்தில் மேலும் சில ரெஸ்டாரன்ட்கள், துணிக்கடைகள் செயல்பட்டு வந்துள்ளனர்.

    35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் சிக்கித் தவித்த 75 பேரை மீட்டனர். அதில் 42 பேர் மயக்க நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 22 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    • 5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்றது.
    • நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

    டாக்கா:

    5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை எதிர்கொண்டது.

    மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் போட்டி முடிவை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதல் 5 பெனால்டி வாய்ப்புகளையும் இரு அணியினரும் கோலாக மாற்றியதால் 5-5 என்ற கணக்கில் சமநிலை நிலவியது. இதையடுத்து, சடன்டெத் முறை அமலுக்கு வந்தது.

    இதிலும் இரு அணியினரும் வாய்ப்புகளை தவறவிடாமல் கோல் அடித்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை நீடித்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் 11-11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தபோது, ஆட்டத்தை நிறுத்திய நடுவர்கள் வெற்றியாளரை முடிவு செய்ய 'டாஸ்' முறையை கொண்டு வந்தனர்.

    டாஸ் போடப்பட்டதில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத வங்காளதேச வீராங்கனைகள் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், மைதானத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். சிலர் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசினர். இதனால் அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது.

    அதன்பின் போட்டி அதிகாரிகள், நடுவர்கள் இருதரப்பினரையும் கலந்து ஆலோசித்து இந்தியா, வங்காளதேசத்தை கூட்டு சாம்பியன்களாக அறிவித்தனர். இரு அணியின் கேப்டன்களும் கோப்பையை கூட்டாகப் பெற்றுக் கொண்டனர்.

    • தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும்- எதிர்க்கட்சி
    • ஆளும் அவாமி லீ கட்சி தலைமையிலான அரசாங்கம் அதனை ஏற்கவில்லை.

    வங்காளதேசம் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

    இதனால் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காளதேச நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.

    300 இடங்களில் 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டபோது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதன் கூட்டணி கட்சியான ஜதியா கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

    இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் மொத்தம் 350 தொகுதிகள் உள்ளன. இதில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே 300 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும். ஆனால் ஒரு வேட்பாளர் மரணம் அடைந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும். அதன் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆளும் அவாமி லீ கட்சி தலைமையிலான அரசாங்கம் அதனை ஏற்கவில்லை.

    இதனால் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவருமான கலீதா ஜியா (வயது 78) வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பள்ளிக்கூடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது.

    இந்த பதற்றத்துக்கு மத்தியில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. எனவே தேர்தலை அமைதியான முறையில் நடத்த நாடு முழுவதும் போலீசார், ராணுவத்தினர் என சுமார் 7½ லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ×