என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
ஆஸ்திரேலியா தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாதது உலக கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும்- பாண்ட்யா
- இது உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- அவர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்து விட்டால் எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.
மும்பை:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மேலும் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆடவில்லை. 4-வது டெஸ்ட் போட்டியின் போது முதுகுவலி காரணமாக அவர் களம் இறங்கவில்லை. இதன் காரணமாகவே ஒருநாள் தொடரில் இருந்தும் அவர் விலகி உள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாதது உலக கோப்பைக்கான இந்திய அணியை தயார் செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
முதுகில் ஏற்பட்ட காயத்தால் நான் நீண்ட நாட்கள் அவதிப்பட்டேன். இதன் காரணமாக இந்திய அணியில் நீண்ட நாட்கள் என்னால் இடம்பெற முடியாமல் போனது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாதது கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்து விட்டால் எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.
ஆனால் அவர் அணியில் இடம்பெற முடியாவிட்டால் அந்த தருணத்தில் என்ன செய்ய போகிறோம் என்பது குறித்து அவர் சிந்திக்க வேண்டும்.
முதுகு வலியினால் அணியில் இடம்பெறாமல் இருக்கும் நட்சத்திர வேகப்பந்து வீரர் உலக கோப்பைக்கு தேர்வு செய்வார் என்று நம்புகிறேன். அவர் அணியில் இடம்பெறாதது அணிக்கு பின்னடைவாக இருந்தாலும் மற்ற பந்து வீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர்.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்