search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sarkar"

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் வசூல் சர்கார் வசூலை முந்தியுள்ளது. #2Point0 #2Point0BoxOfficeCollection #2Point0Record
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. சுமார் ரூ.550 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் வசூலில் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரிலீசான பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

    2.0 படம் சென்னையில் மட்டும் ரூ. 2.64 கோடி வசூல் செய்துள்ளது. இது சர்கார், மெர்சல், விவேகம், காலா ஆகிய படங்களைவிட அதிகம். இதன்மூலம் சர்காரின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 முறியடித்துள்ளது. விஜய் நடித்த சர்கார் படம் சென்னையில் முதல் நாள் ரூ. 2.37 கோடி வசூலித்தது.



    சென்னையில் ரிலீசான அன்றே அதிகம் வசூல் செய்த படமாக சர்கார் இருந்தது. அந்தப்படம் தீபாவளி அன்று ரிலீஸாகி அதிகம் வசூலித்தது. 2.0 பண்டிகை இல்லாத வார நாளில் வெளியாகி அந்த சாதனையை முறியடித்துவிட்டது.

    2.0 படம் இந்தியில் சுமார் ரூ. 25 கோடி வரை வசூலித்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ரிலீசான இரவு 10 மணி வரை ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளது. நியூசிலாந்தில் ரூ. 11.11 லட்சமும், ஆஸ்திரேலியாவில் ரூ. 58.46 லட்சமும் வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்களில் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    உலகம் முழுவதும் சுமார் 10,000 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. மொத்தமாக கணக்கிட்டால் முதல் நாள் வசூல் பல கோடிகளை தாண்டும் என்கின்றனர். தோராயமாக ரூ.60 முதல் ரூ.65 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கக் கூடும் என கணக்கிடுகின்றனர்.

    2.0 படம் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்து இருப்பதால் குழந்தைகளை அதிகமாக கவருகிறது. எனவே, படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் குடும்பத்துடன் பார்ப்பதற்காக டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    அடுத்த சில நாட்களுக்கான முன்பதிவும் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே முடிந்துவிடுகிறது. #2Point0 #2Point0BoxOfficeCollection #2Point0Record

    விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணையவிருக்கும் தளபதி 63 படப்பிடிப்புக்கான செட் அமைக்கும் பணிகள் துவங்கிவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. #Vijay63 #Thalapathy63 #Vijay
    விஜய் நடிப்பில் மெர்சல், சர்கார் திரைப்படங்கள் அடுத்தடுத்து இரண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகி வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது அட்லி இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படமும் தீபாவளியைக் குறிவைத்து உருவாகி வருகிறது.

    படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கெனவே ஆரம்பமான நிலையில் நேற்று முக்கிய பணி பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் படங்கள், முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து கலை இயக்குநர் முத்துராஜ் ஒப்பந்தமாகி வருகிறார்.

    ‌ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் கலை இயக்கப் பணிகளை இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய அவர், தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்தின் கலை இயக்கப் பணியை தொடங்கி உள்ளார். ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் நேற்று சென்னை பின்னி மில்லில் படப்பிடிப்புக்காக அரங்கு அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இந்தத் தகவலை முத்துராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அட்லி இயக்கத்தில் உருவான ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய மூன்று படங்களுக்கும் முத்துராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றி உள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, விவேக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணுவும் சண்டை வடிவமைப்பாளராக அனல் அரசுவும் பணியாற்றுகின்றனர். விவேக் பாடல்களை எழுத, ரூபன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். #Vijay63 #Thalapathy63 #Vijay

    சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சை காட்சிகளுக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கமல் தெரிவித்துள்ளார். #Sarkar #KamalHaasan
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் சர்கார். இந்த படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    இந்த காட்சிகளையும், ஜெயலலிதா தொடர்பான வசனங்களையும் நீக்கக் கோரி அ.தி.மு.க.வினர் சர்கார் வெளியாகியிருந்த பல திரையரங்குகளுக்குள் புகுந்து அந்தப் பட பேனர்களைக் கிழித்து ரகளையில் ஈடுபட்டனர்.

    அதைத் தொடர்ந்து சர்கார் படக்குழு, குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை நீக்கி வெளியிட்டது.

    இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். டைரக்டர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இனி அரசை விமர்சித்து தனது படத்தில் காட்சி வைக்க மாட்டேன் என உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    ‘‘சர்கார், முறைப்படி தணிக்கைத் சான்றிதழ் பெற்று வெளியான ஒரு திரைப்படம். மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கும் அரசின் செயல்பாடு சரியல்ல.

    இது ஜனநாயகத்திற்கு எதிரானது. பாசிசமானது ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட ஒன்று, தற்போது மீண்டும் தோற்கடிக்கப்படவுள்ளது”.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Sarkar #KamalHaasan #Vijay

    ‘சர்கார்’ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், வசூல் விவரங்களை தாக்கல் செய்ய கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Sarkar #Vijay #MaduraiHighCourt
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திரபாண்டி மதுரை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நவம்பர் 6-ந்தேதி தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் மதுரையில் 5-க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியானது.

    ஆன்லைனில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.500 முதல் 1000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தேன். ஆனால் அரசு விதிகளை பின்பற்றாமல் பலமடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

    ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. ஆகவே அது தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.



    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதி கேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தனி நபர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி விதிக்குட்பட்ட கட்டணத்தை வசூலித்து அந்த நபர்கள் மூலம் பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு சுமார் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சட்ட விரோதமாக இதுபோல கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘சர்கார்’ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் நவம்பர் 6 முதல் 16-ந் தேதி வரையில் மதுரை மாவட்ட திரையரங்குகளின் தினசரி கட்டண வருவாய் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #Sarkar #Vijay #MaduraiHighCourt

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 63 படத்தின் மூலம் பிரபல காமெடி நடிகர் ஒருவர் மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். #Vijay63 #Thalapathy63 #Vijay
    தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் - அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணையவிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

    இந்த நிலையில், நடிகர் யோகிபாபுவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யோகி பாபு மெர்சல், சர்கார் உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி 63 படத்தில் யோகி பாபு இணையும் பட்சத்தில் விஜய்யுடன் யோகி பாபு இணையும் மூன்றாவது படம் இதுவாகும்.



    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்களையும் படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா அல்லது சமந்தா நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay63 #Thalapathy63 #Vijay #YogiBabu

    விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணையும் தளபதி 63 படத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63 #Vivekh
    தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் - அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணையவிருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். விவேக் கடைசியாக விஜய்யுடன் இணைந்து குருவி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அடுத்த தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு தளங்களை படக்குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர். 

    தொடர்ந்து படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்களையும் படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா அல்லது சமந்தா நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay63 #Thalapathy63 #Vivekh

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 63 படத்தில் யார் நாயகியாக நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ரசிகரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார். #Thalapathy63 #Raashmika
    ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம் இது.

    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது.



    அடுத்த தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, சமந்தா ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வருகின்றன. விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ தெலுங்கு படத்தில் நடித்தவர் ராஷ்மிகா. தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார்.


    ராஷ்மிகாவின் ரசிகர் ஒருவர் ராஷ்மிகா தான் ‘தளபதி 63’ படத்தின் ஹீரோயின் என டுவிட்டரில் பதிவிட்டு, அதில் அட்லீ, விஜய் ஆகியோரையும் இணைத்துள்ளார். ராஷ்மிகா அந்த டுவீட்டுக்கு கீழே, ‘டேய்... எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா...’ என நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார். #Thalapathy63 #Vijay #RaashmikaMandana

    சர்கார் திரைப்படம் தமிழ் நாட்டில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தற்போது கேரளாவிலும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. #Sarkar #Vijay #ThalapathyVijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது. விஜய் சிகரெட் பிடிக்கும் தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்கு தமிழக அரசின் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்தது. 

    இந்த புகைப்படம் புகையிலை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் என்றும், எனவே அதை அகற்ற வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் விஜய்யின் புகைப்பிடிக்கும் தோற்ற படத்தை ட்விட்டரில் இருந்து பட நிறுவனம் நீக்கியது. படம் திரைக்கு வந்த பிறகு அரசை விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அ.தி.மு.க தொண்டர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விஜய்யின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் வீசி எரிக்கும் காட்சிகளை பட நிறுவனம் நீக்கியது. 

    பின்னர் படத்தை மறுதணிக்கை செய்து தியேட்டர்களில் திரையிட்டு உள்ளனர். இப்போது கேரளாவிலும் சர்கார் படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. திருச்சூரில் உள்ள தியேட்டரில் விஜய் புகைப்பிடிக்கும் பேனர் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருச்சூர் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்து விஜய் மற்றும் கேரள விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
    சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பது குறித்து சில வதந்திகள் பரவி வருகிறது. #Thalapathy63 #Vijay
    அரசியல் சர்ச்சைகளுக்கு நடுவே விஜய் நடித்துள்ள சர்கார் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே விஜய் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

    மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்கவிருப்பதாகவும், ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாகவும் முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா அல்லது சமந்தா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

    சிவகார்த்திகேயன், அட்லி, நெல்சன், திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் தீபாவளிக்கு விக்னேஷ் சிவன், நயன்தாரா வீட்டில் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும் அதன்மூலம் பல்வேறு வதந்திகளும் வெளிவந்தன.

    இந்த நிலையில், தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதே நேரத்தில் விஜய் ஜோடியாக நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



    சமந்தா ஏற்கனவே அட்லி இயக்கிய தெறி, மெர்சல் படங்களில் விஜய் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது அனிருத் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Thalapathy63 #Vijay

    புதிய உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் தேர்வு முறையாக நடைபெறும் என்று கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். #ADMK #KPMunusamy #Sarkar #Vijay #ARMurugadoss #TTVDhinakaran #18MLAs
    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தஞ்சையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு நலத் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன் அடைந்துள்ளனர். அவரது வழியிலேயே தற்போது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அறிவிக்கும் திட்டங்களும் மக்கள் பயன் பெறும் வகையில் சென்றடைகிறது.

    மேலும் இந்த அரசு புதிய புதிய திட்டங்களை மக்களுக்கு கொண்டு வருவதால் சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    கடந்த ஓராண்டாக தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் எத்தனை தங்கும் விடுதிகளில் தங்கியிருந்தார்கள். கடைசியில் குற்றாலத்தில் தங்கியிருந்து சொகுசு வாழ்க்கையை அனுபவித்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் மக்களை நினைத்து பார்க்காமல் தற்போது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் நோக்கில் தினகரன் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து நாடகம் நடத்துகிறார்.

    அ.ம.மு.க. என்பது ஒரு கட்சியே இல்லை. தினகரன் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர் . அவருக்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    கட்சியில் புதியதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. மீண்டும் இதில் புதுப்பித்து கொண்டால் மட்டுமே அவர்கள் கட்சியில் உறுப்பினராக இருக்க முடியும். இந்த புதிய உறுப்பினர் சேர்ப்பில் சசிகலா உறுப்பினராகவில்லை. எனவே அவர் கட்சியில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே கட்சியிலேயே இல்லாத ஒருவர் எப்படி பொதுச் செயலாளர் பதவி வகிக்க முடியும்.?

    ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் டோக்கன் கொடுத்து வாக்குகள் வாங்கினார் என்றால், அப்போது மக்கள் ஏமாந்தார்கள். தங்களை தினகரன் ஏமாற்றி விட்டார் என்று விரட்டி அடித்தார்களே அது நாடு முழுக்க தெரிந்தது. ஆகவே இந்த தேர்தலில் அ.ம.மு.க. 20 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்.

    தற்போது அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது. இந்த பணி தொண்டர்களிடம் முழுமையாக சென்றடைந்த பிறகு தலைமை முடிவு செய்து பொதுச்செயலாளர் தேர்வு முறையாக நடைபெறும்.

    சந்திரபாபு நாயுடுவை மு.க.ஸ்டாலின் சந்திப்பது அவர்கள் மாநிலத்திற்கு தேவை என்பதாலும், மு.க.ஸ்டாலினுக்கும் வேறு வழியில்லை என்பதாலும் அவர் சந்தித்தார். ஆனால் அ.தி.மு.க. தமிழக மக்களிடையே வலுவான கட்சி என்பதால் நாங்கள் யாரையும் சந்திக்க அவசியம் இல்லை.

    சர்கார் படத்தில் இலவசங்களை விமர்சித்து காட்சிகள் வந்தது. அந்த படத்தை இயக்கிய முருகதாஸ் அரசு எந்த அடிப்படையில் இலவசங்கள் வழங்கியது என்று தெரியாமல் எடுத்துள்ளார்.

    இந்த படத்தை கொண்டு வந்தது மாறன் சகோதரர்கள். அரசியலில் ஆதாயம் தேடுவதற்காகவும், மு.க.ஸ்டாலினை திருப்தி படுத்துவதற்காகவும் இது போன்று படத்தை கொண்டு வந்துள்ளார்கள். இதில் முருகதாசும், நடிகர் விஜய்யும் பலிகடா ஆகி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #KPMunusamy #Sarkar #Vijay #ARMurugadoss #TTVDhinakaran #18MLAs
    கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் `சர்கார்' படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் வெற்றியை மிக்ஸி, கிரைண்டருடனான கேக் வெட்டி படக்குழு வெற்றியை கொண்டாடியுள்ளனர். #Sarkar #SarkarSuccessParty
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `சர்கார்'. 
    படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுக-வை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயிட்டு கொழுத்துவது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்ததால் எதிரிப்பு கிளம்பியது.

    அரசை தாக்குவதுபோல் இருக்கும் காட்சிகள் மற்றும் கருத்துகளை நீக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்ததுடன், சர்கார் பட பேனர்களும் கிழிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், 6 நாட்களில் சர்கார் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளது.



    இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு சந்திப்பு நடந்தது. இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது படக்குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர். அந்த கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் வடிவம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. #Sarkar #SarkarSuccessParty #SarkarSuccessMeet

    சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TamilRockers
    தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படும் ஒரு இணையதளம், தமிழ் ராக்கர்ஸ். புதிய தமிழ் படங்கள் திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. பல வருடங்களாக முயற்சித்தும் இந்த தளத்துக்கு பின்னால் செயல்படுபவர்களை பிடிக்கவோ, தளத்தை முடக்கவோ முடியவில்லை.

    சமீபத்தில், விஜய் நடித்து வெளிவந்த ‘சர்கார்’ படத்தை ‘ரிலீஸ்’ அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில், ஒரு சவால் விடப்பட்டது. சொன்ன மாதிரியே ‘சர்கார்’ படம் ரிலீஸ் அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது, தமிழ் பட உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதேபோல் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் ‘2.0’ படத்தையும் ரிலீஸ் அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் சவால் விடப்பட்டு இருக்கிறது. இது, தமிழ் பட உலகில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில், தங்கள் பெயரை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது. தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    ‘‘டுவிட்டரிலோ மற்ற சமூக வலைதளங்களிலோ நாங்கள் இல்லை. சமூக வலைதளங்களில் எங்களின் பெயரை பயன்படுத்தி யாராவது பதிவிட்டால், அது போலியே. அதுபோன்ற ஐ.டி.க்களையும், அவர்கள் பரப்பும் வதந்திகளையும் நம்பாதீர்கள்’’ என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
    ×