search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salem news"

    ஆன்லைன் வழியில் கிராம நிர்வாக அலுவலர் இடமாறுதல் நடைபெற உள்ளது.
    சேலம்:

    கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாறுதலை, ஆன்லைன் வழியே நடத்த வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று இந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியே இடமாறுதல் கேட்போரிடம் விண்ணப்பங்கள் பெற்று, உரிய ஆணை வழங்க, அரசு அனுமதித்துள்ளது.
    இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் சித்திக் கடிதம் எழுதி உள்ளார்.

    மாறுதல் கோரும் கிராம நிர்வாக அலுவலர்கள் 
    cra.tn.gov.in/vaotransfer என்ற இணையதளத்தில், ஜூன் 1 முதல் 15-ம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
    சேலத்தில் போலீசாருக்கு டிமிக்கி காட்டிய தக்காளி திருடனை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 26). இவர் பெருமாகவுண்டம்பட்டி, சஞ்சீவிராய பெருமாள் கோவில் அருகே காய்கறி கடை வைத்துள்ளார். இவருக்கு தக்காளி பார்சல் இறக்குபவர்கள் 26-ந்தேதி அதிகாலையில் 60 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக்காளி பெட்டி இறக்கி வைத்துள்ளனர். 

    இந்நிலையில் கடை உரிமையாளர் சங்கர், வழக்கம்போல் காலையில் கடையை திறக்க வந்த போது ஒரு கிரேடு தக்காளி பெட்டி மட்டுமே வெளியே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

    இதையடுத்து சிசிடிவி கேமராவை பார்த்த போது ஒருவர் மொபட்டில்  தக்காளி பெட்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது. அந்த நபர் , மொபட்டில் வந்து கடை முன்பு நின்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தக்காளியை கிரேடுடன் எடுத்து, கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. அந்த சி.சி.டி.வி வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 

     இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சங்கர், புகார் கொடுத்தார். புகாரின் பேரில் எஸ். ஐ. ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து தக்காளி திருடனை தேடிவந்தனர். அந்த மர்ம நபர்   போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி காட்டி வந்தார்.இதனிடையே இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு போனதும், இதனால் சிறு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதும் தெரியவந்தது.

    சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்த வண்டி நம்பரை வைத்து விசாரணை செய்ததில், அவர் வெண்ணந்தூர் தங்கசாலை வீதி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்ராஜ் (வயது32) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே செவ்வாய்ப்ேபட்டை பகுதியில் ஆப்பிள் பெட்டி திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில்  வெளியே வந்த நிலையில், மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைப் பகுதியில் தக்காளி திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. 

    இதனை அடுத்து தக்காளி திருடிய சின்ராஜை போலீசார் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.
    ஆட்டையாம்பட்டி:
     
    சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் சாமி கோவிலில் சுக்கிர வாரம் தேய்பிறை பிரதோஷ தினத்தை ஒட்டி பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி கரபுரநாதர், நந்திகேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை பூஜையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. 

    தொடர்ந்து பிரதோஷ நாயனார் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கோவிலைவலம் வந்தனர். இதில் ஆட்டையாம்பட்டி, சேலம் குகை கொண்டலாம்பட்டி நெய்க்காரப்பட்டி அரியானூர், வீரபாண்டி, சூளைமேடு சமத்துவபுரம் உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    வீரகனூர், கெங்கவல்லியில் கன மழை பெய்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு   மழை பெய்தது.

    கன மழை  
    குறிப்பாக வீரகனூர், கெங்கவல்லி பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் வயல் வெளிகள் மற்றும் தாழ்வான பகுதி–களில் தண்ணீர் தேங்கியது.  கோடை காலத்தில்   பெய்த மழை   விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால்விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

    சேலம் மாநகரில் நேற்றிரவு 9  மணியளவில்  தொடங்கிய மழை  லேசான தூறலுடன்  நின்று போனது. இதனால் மழை வரும் என்று எ திர்பார்த்த  மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  ஆனாலும் குளிர்ந்த காற்று வீசியது . இதனால் பொது   மக்கள் நிம்மதியாக  தூங்க முடிந்தது.
      
    மாவட்டத்தில்  அதிக பட்சமாக வீரகனூரில் 48 மி.மீ.  மழை பெய்துள்ளது. கெங்கல்லி 15, தம்மம்பட்டி 10, பெத்தநாயக்கன்பாளையம் 5, சங்ககிரி 1.2, ஆத்தூர், சேலத்தில் 1 மி.மீ.  என மாவட்டம் முழுவதும் 81.2 மி.மீ. மழை பெய்தது. இன்று காைல மாவட்டம் முழுவதும் வெயில அடித்த படி இருந்தது.
    ஏற்காடு கோடை விழாவுக்கு சென்ற மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த கோடை விழாவிற்காக தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். 

    இந்த நிலையில் மகுடஞ்சாவடியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் நண்பர் நியாசுடன் ஏற்காடு கோடை விழாவிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவாக–வுண்டனூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ஏற்காடு நோக்கிச் சென்றனர்.

    சேலம் மாவட்ட கலெக்டர் பங்களா அருகே வேன் வரும்போது திடீரென கரும்புகை எழுந்தது. இதை அறிந்த டிரைவரான சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் மாருதி வேனை ஓரமாக நிறுத்தி விட்டு வெளியே வந்துவிட்டனர். இதனை அடுத்து கார் மளமளவென தீ பிடித்து தீப்பற்றி எரிந்தது.

    இதனால் சாலையில் சென்றவர்கள்  இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மற்றும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

    எனினும் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தாரமங்கலம் அருகே விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலியானார்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே கடந்த 26-ந்தேதி இரவு 2 மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த கொத்தனார் சந்திரசேகரன் (40) என்பவர் பலியானார். 

    இந்த விபத்தில்  மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரன்  மகன் சிவா (வயது21) என்பவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடனே அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஏற்காடு கோடைவிழா மலர்கண்காட்சியில் 5 லட்சம் பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 2 வருடங்களாக கொரானா ஊரடங்கு காரணமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடத்தப்பட்டால் இருந்தது. இந்த ஆண்டு கடந்த 25-ந் தேதி 45-வது கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

    இங்குள்ள அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி காட்சி படுத்தப்பட்டுள்ளுது. இதற்காக இங்குள்ள கண்ணாடி மாளிகையில் வண்ணமிகு மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அண்ணா பூங்காவிலும் ஏறி பூங்காவிலும் உள்ள செயற்கை நீரூற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கோடை விழா மலர் கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மேட்டூர் டேம், மகளிருக்கான இலவச பேருந்து .விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டி, குழந்தைகளை குதூகலமாக சின்-சான் பொம்மை, வள்ளுவர் கோட்டம், போன்ற உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    சுற்றுலா பயணிகள் அமர 2 குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செயது மகிழ்கின்றனர்.

    மேலும் சுற்றுலா குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கிறார்கள்.கோடை விழா மலர் கண்காட்சிக்காக கூடுதலாக பேருந்துகளை மாவட்ட நிர்வாகம் இயக்கியுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக இன்றும் நாளையும் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒரு வழி பாதையாக செய்யப்பட்டுள்ளது. . 4-வது நாளான இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
    தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 40).  கட்டிட தொழிலாளி

    இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு ஓமலூரில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.  

    சிக்கம்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது எதிரே வந்த மற்றோரு மோட்டார் சைக்கிளில் வந்த பெரியாகடம்பட்டியை சேர்ந்த சிவா (21) என்பவர்  பலமாக மோதியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர் .அவர்களை   மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

     வழியிலேயே சந்திரசேகரன்  பரிதாபமாக இறந்தார்.  சிவா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி சந்திரசேகரனின் மனைவி உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் டெம்போ டிரைவரை மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
    சேலம்:

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் 5 பேர் நேற்றிரவு ஒகேனக்கல்லுக்கு காரில் புறப்பட்டனர். அந்த கார் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
    அப் போது முன்னால் சென்று கொண்டிருந்த டெம்போ கார் மீது உரசியதாக கூறி அதனை வழி மறித்தனர். 

    பின்னர் காரில் இருந்த 5 பேர் கும்பல் டெம்போ டிரைவரிடம் ரூ.10 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறிய நிலையில் அவரிடம் இருந்து 1000 ரூபாயை பறித்து விட்டு சேலம் நோக்கி காரில் வந்தனர்.

    இதனையறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தெரிவித்தனர். சீலநாயக்கன்பட்டியில் காரை போலிசார் மறித்த போது கார் அங்கிருந்த மின்னல் வேகத்தில் பெங்களுரு சாலையில் சென்றது. இதையடுத்து போலீசார் காரை துரத்தி சென்றனர். 

    மேலும் மைக்கிலும் அறிவித்து ரோந்து போலீசாரை உசார்படுத்தினர்.  ஆனால் அதற்குள்  கார் குரங்குசாவடியை தாண்டி சென்றது. பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு சந்திற்குள்  காரை  ஒதுக்கி நிறுத்தி வைத்தனர். அததனை கவனித்த ரோந்து போலீசார் போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர். 

    இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காரை மடக்கி பிடித்து காருக்குள்  இருந்த 5 பேரையும் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் புதுச்சத்திரம்  போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த கும்பலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வாழப்பாடி அருகே கார் விபத்தில் சேலம் புரோகிதர் பலியானார்
    வாழப்பாடி:

    சேலம் அருகே நிலவாரபட்டி பகுதியை சேர்ந்தவர் புரோகிதர் பாஸ்கரன் (56). இவரது மனைவி சாரதாம்பாள் (50).  இவரது உறவினர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி காரில் நேற்று இரவு சென்றனர். 

    சென்னையை சேர்ந்த சங்கர் என்பவர் காரை ஓட்டினார். கார் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை  அப்பகுதியினர் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  வழியிலேயே பாஸ்கரன்  பரிதாபமாக உயிரிழந்தார். 

    சாரதாம்பாள், பாலசுப்பிரமணி, கார் டிரைவர் சங்கர் உள்ளிட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பாஸ்கரன் உறவினர் ராஜாராமன் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சேலம் வழியாக சென்ற தன்பாத் ரெயிலில் 4 கிலோ கஞ்சா சிக்கியது.
    சேலம்:

    சேலம் வழியாக சென்ற தன்பாத் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் ரெயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    சங்ககிரி-ஆனங்கூர் இடையே வந்தபோது ரெயில் கழிவறையில் ஒரு பை கிடப்பதை பார்த்தனர். அதை சோதனை செய்தபோது அந்த பையில் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கிடந்தன.  

    போலீசார் அதை கைப்பற்றி கஞ்சா கடத்தி வந்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அயோத்தியாப்பட்டணத்தில் உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை

    அயோத்தியாப்பட்டணத்தில் உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    காலி பணியிடங்களை நிரப்பதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் ரெயில்வே பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

    ரெயில்வே துறையில் ஆட்குறைப்பு செய்ய வேண்டாம், காலியிடங்களை குறைக்கக் கூடாது, தெற்கு ரெயில்வே முழுவதும் உள்ள 20 ஆயிரம் காலியிடங்களை நிரப்பி வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கிளை செயலாளர்கள் ஜெகன், நெடுஞ்செழியன், அருண், ஜோன் நவீன்,  முத்து சுப்பிரமணி, எல்.ஆர்.எஸ் கோட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட எஸ்ஆர்எம்யூ  தொழிற்சங்கத்தை சேர்ந்த ெரயில்வே தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×