search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    வீரகனூர், கெங்கவல்லியில் கன மழை

    வீரகனூர், கெங்கவல்லியில் கன மழை பெய்தது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு   மழை பெய்தது.

    கன மழை  
    குறிப்பாக வீரகனூர், கெங்கவல்லி பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் வயல் வெளிகள் மற்றும் தாழ்வான பகுதி–களில் தண்ணீர் தேங்கியது.  கோடை காலத்தில்   பெய்த மழை   விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால்விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

    சேலம் மாநகரில் நேற்றிரவு 9  மணியளவில்  தொடங்கிய மழை  லேசான தூறலுடன்  நின்று போனது. இதனால் மழை வரும் என்று எ திர்பார்த்த  மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  ஆனாலும் குளிர்ந்த காற்று வீசியது . இதனால் பொது   மக்கள் நிம்மதியாக  தூங்க முடிந்தது.
      
    மாவட்டத்தில்  அதிக பட்சமாக வீரகனூரில் 48 மி.மீ.  மழை பெய்துள்ளது. கெங்கல்லி 15, தம்மம்பட்டி 10, பெத்தநாயக்கன்பாளையம் 5, சங்ககிரி 1.2, ஆத்தூர், சேலத்தில் 1 மி.மீ.  என மாவட்டம் முழுவதும் 81.2 மி.மீ. மழை பெய்தது. இன்று காைல மாவட்டம் முழுவதும் வெயில அடித்த படி இருந்தது.
    Next Story
    ×