search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கார் விபத்தில் சேலம் புரோகிதர் பலி

    வாழப்பாடி அருகே கார் விபத்தில் சேலம் புரோகிதர் பலியானார்
    வாழப்பாடி:

    சேலம் அருகே நிலவாரபட்டி பகுதியை சேர்ந்தவர் புரோகிதர் பாஸ்கரன் (56). இவரது மனைவி சாரதாம்பாள் (50).  இவரது உறவினர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி காரில் நேற்று இரவு சென்றனர். 

    சென்னையை சேர்ந்த சங்கர் என்பவர் காரை ஓட்டினார். கார் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த  சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை  அப்பகுதியினர் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  வழியிலேயே பாஸ்கரன்  பரிதாபமாக உயிரிழந்தார். 

    சாரதாம்பாள், பாலசுப்பிரமணி, கார் டிரைவர் சங்கர் உள்ளிட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பாஸ்கரன் உறவினர் ராஜாராமன் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×