என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 154661"

    ஏற்காடு கோடை விழாவுக்கு சென்ற மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த கோடை விழாவிற்காக தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். 

    இந்த நிலையில் மகுடஞ்சாவடியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் நண்பர் நியாசுடன் ஏற்காடு கோடை விழாவிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவாக–வுண்டனூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ஏற்காடு நோக்கிச் சென்றனர்.

    சேலம் மாவட்ட கலெக்டர் பங்களா அருகே வேன் வரும்போது திடீரென கரும்புகை எழுந்தது. இதை அறிந்த டிரைவரான சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் மாருதி வேனை ஓரமாக நிறுத்தி விட்டு வெளியே வந்துவிட்டனர். இதனை அடுத்து கார் மளமளவென தீ பிடித்து தீப்பற்றி எரிந்தது.

    இதனால் சாலையில் சென்றவர்கள்  இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மற்றும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

    எனினும் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மாருதி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2018 எர்டிகா கார் அறிமுக தேதி மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Maruti #Ertiga



    மாருதி சுசுகி நிறுவனம் சமீத்தில் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்சமயம், மாருதி நிறுவனம் புதிய எர்டிகா 2018 ஃபேஸ்லிஃப்ட் மாடலை நவம்பர் 21ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செயய்ப்படலாம் என தெரிகிறது. பண்டிகை காலத்தில் புதிய வாகனம் விரும்புவோருக்கு எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் நல்ல தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எர்டிகா ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய எர்டிகா நெக்சா பிரீமியம் விற்பனை மையங்கள் இன்றி, அரீனா விற்பனை நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய மாடல் வெளியாக இருக்கும் நிலையில், முதல் தலைமுறை எர்டிகா மாடல் தொடர்ந்து டூர் பேட்ஜிங் உடன் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.



    வெளிப்புறத்தில் மாருதி எர்டிகா மாடலில் முன்புறம் புதிய கிரில், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக புதிய எர்டிகா பிரீமியம் தோற்றத்தில் தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது அழகாக காட்சியளிக்கிறது.

    பக்கவாட்டில் மிதப்பது போன்ற ரூஃப் வடிவமைப்பு மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. புதிய எர்டிகா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் சியாஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ×