search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sacrifice"

    • திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • .இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

     திருப்பூர்:

    திருப்பூர்-வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு இடையே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் மஞ்சள், நீல நிற கட்டம் போட்ட முழுக்கை சட்டை, காப்பி நிற பேண்ட் அணிந்துள்ளார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • தொழிலாளி உள்பட 3 பேர் பலியாகினார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே வாடிப்பட்டி குமரம் பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையன் மகன் சரவணன் (24). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.இவர் பாலமேடு-மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் சரவணன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    இது குறித்து அவருடைய தாய் சரஸ்வதி அலங்கா நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வரு கின்றனர்.

    திருமங்கலம் மேலக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (47). கொத்தனாரான இவர் திண்டுக்கல்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கட்டுப் பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் அவருக்கு பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து முருகன் மனைவி ராமுத்தாய் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை-திருமங்கலம் நான்கு வழி சாலை கப்பலூர் சர்வீஸ் ரோட்டில் ஒருவர் சாலையோரம் அடிபட்டு மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் மறவன்குளம் கிராம நிர்வாக அதிகாரி ஆனந்த் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    பின்னர் இது குறித்து அவர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சாலையோரம் அடிபட்டு கிடந்த அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் சிகிச்சை பலனனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவை கணபதியைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 63) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • அவிநாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அவிநாசி பாளையம், சுங்கம் அருகே நேற்று இரவு கோவையிலிருந்து திருச்சி நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டூரிஸ்ட் காரின் மீது மோதியது. இதில் கோவை கணபதியைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 63) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிலர் காயம் அடைந்தனர். இது குறித்து அவிநாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சமையல் செய்த 2 பெண்கள் உடலில் தீ பிடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
    • வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 32). இவர் கடந்த 24-ந் தேதி வீட்டுக்கு வெளியே அடுப்பில் மண் எண்ணெய் ஊற்றி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்எஎண்ணெய் தனலட்சுமி அணிந்திருந்த நைட்டியில் விழுந்து எதிர் பாராத விதமாக தீப்பிடித்த தில் பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று தன லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    மதுரை மாவட்டம் வில்லூர் போலீஸ் சரகம் எம். போத்த நதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி பாண்டித்தாய் (வயது 65). பிள்ளை களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வரு கின்றனர்.

    பாண்டித்தாய் தனியாக குடியிருந்து வருகிறார் பாண்டித்தாய் வீட்டில் கரண்ட் இல்லாததால் மண் எண்ணெய் விளக்கு வைத்து அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென மண்எண்ணெய் விளக்கு தவறி கீழே விழுந்து தீப்பிடித்ததில் பாண்டி தாய்க்கு சேலையில் தீப் பிடித்து காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தி னர் உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டித்தாய் உயிர் இழந்தார்.

    இச்சம்பவம் குறித்து மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இங்கு 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் வைத்தும், கோசாலை அமைத்தும் பராமரிக்கப்படுகிறது.
    • உலக நன்மை வேண்டி ஆறுபடை வீடு முருகப்பெருமானின் மகாயாகம் நடைபெற உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா காரைமேடு சித்தர் புரத்தில் ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்கள் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர்..மேலும் இங்கு 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் வைத்தும் , கோசாலை அமைத்தும் பராமரிக்கப்படுகிறது .

    ஒளிலாயத்தை நிர்மானித்த மறைந்த ராஜேந்திரா சுவாமிகளின் 6-வது ஆண்டு குருபூஜை விழா மற்றும் உலக நன்மை வேண்டி ஆறுபடை வீடு முருகப்பெருமானின் மகாயாகம் ஆகியவை நாளை ( ஞாயிற்றுக்கிழமை )காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி,

    மாவட்ட மகளிர் அணி செயலாளர் சக்தி ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடக்கி வைக்கின்றனர்.

    தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    இதில் பக்தர்கள் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று இறையருள பெற சத்குரு ஒளிலாய பீடம் நாடி. செல்வமுத்துக்குமரன், நாடி .செந்தமிழ் செல்வன், நாடி.மாமல்லன், நாடி.பரதன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    • சம்பவத்தன்று இவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார்.
    • சிகிச்சை பலனின்றி மதலைமேரி இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கடுவெளி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த அமலதாஸ் மனைவி மதலைமேரி (வயது 83). சம்பவத்தன்று இவர் மாடு முட்டி பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதலைமேரி இறந்தார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார்.
    • கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கால சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துண்டி (வயது 53) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குரால் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வன் நிலத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தவரை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து தூக்கிப் பார்த்த போது துண்டி இறந்து விட்டார் என தெரியவந்தது. இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கி 1 கி.மீ. தூரம் இழுத்து சென்றதால் பரபரப்பு
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொஞ்ச மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் ஒழுந்தியாம்பட்டு பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சேகரின் மகன் சுதாகர் (வயது 26) விவசாயி. நேற்று இரவு சுதாகர் கிளியனூர் பகுதியை சேர்ந்த தனது நண்பர் அசோக் (27) என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஒழுந்தியாம்பட்டில் வேலை பார்க்கும் தனது தந்தை சேகரை பார்க்க சென்றனர். பின்னர் ஒழுந்தியாம்பட்டு அருகே சாலை ஒரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி லாரி ஒன்று வந்தது. 

    இதனையடுத்து லாரி ஒழுந்தியாம்பட்டு பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த சுதாகர், இவரது நண்பர் அசோக் மீது வேகமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் லாரி மோதி 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் சிதறி விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலே சுதாகர் துடிதுடித்து இறந்தார். அசோக் பலத்த படுகாயம் அடைந்தார். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரி டிரைவர் தொடர்ந்து அங்கு இருந்து லாரியை ஓட்டி சென்றார். அப்போது சுதாகர், அசோக் வந்த மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கி கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. இதில் மோட்டார் சைக்கிள் சாலையில் வேகமாக உறசி பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த பயங்கர சத்தத்தை கேட்டு பதறினர். பின்னர் அவர்கள் சாலையில் தறிகெட்டு வந்த லாரியை மடக்கி டிரைவரை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவ ண்ணன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விப த்தில் உயிரிழந்த சுதாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடை ந்த அசோகை மீட்டு சிகிச்சை க்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த விகத்தை நடத்திய தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த முத்துபாண்டி (40) லாரி டிரைவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் நின்று பேசிக்கொண்டி ருந்தபோது லாரி மோதி விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பாவாடை சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவாடை(48 )விவசாயி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆவட்டியில் இருந்து வெங்கனூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் போது ஆந்திராவில் இருந்து கேரளா நோக்கி சென்ற கார் இவரது இரு சக்கர வாகனத்தில் மோதியதில் 200 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு பாவாடை சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காணை போலீசார் விசாரணை
    • உடல் இன்று அதிகாலையில் மாம்ப ழப்பட்டு ஏரிக்கரையில் மிதந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 37). பூக்கடையில் பூக்களை மாலையாக கட்டும் பணிசெய்து வந்தார். திருமணமாகாதவர். இவரது உடல் இன்று அதிகாலையில் மாம்ப ழப்பட்டு ஏரிக்கரையில் மிதந்துள்ளது. அருகில் சென்று பார்த்தவர்கள், சுந்தரமூர்த்தி இறந்து கிடந்ததை உறுதி செய்து, காணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால் கழுவ சென்ற போது தவறி விழுந்தாரா, மதுபோதையில் தவறி விழுந்தாரா, யாரேனும் ஏரியில் தள்ளிவிட்டனரா என்பன போன்ற கோணங்களில் காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 18 சித்தர்கள் ஒளிலாய பீடத்தில் பவுர்ணமி யாகம் நடந்தது
    • விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்யப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா காரைமேடு சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 18 சித்தர்கள் ஒளிலாய பீடத்தில் பௌர்ணமி மகாயாகம் நடைபெற்றது. யாகத்தில் சந்திராயன் 3 நிலவில் செல்ல காரணமாக இருந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி செலுத்தியும்,விவசாயம் செழித்து வளரவும், சிறப்பு பிரார்த்தனை செய்ய ப்பட்டது.

    இதில் நாடி செல்வ முத்துக்குமரன், பள்ளி தாளாளர் லெனின்,நாடி குணசேகரன், பொறியாளர் கதிரவன் தொழிலதிபர் ராகேஷ் குமார் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    • நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கசாமியான் தெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சித்திக் (வயது23). கடந்த ஏப்ரல் மாதம் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுங்காயங்களுடன் சென்னை இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×