search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீப்பிடித்தல்"

    • சமையல் செய்த 2 பெண்கள் உடலில் தீ பிடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
    • வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 32). இவர் கடந்த 24-ந் தேதி வீட்டுக்கு வெளியே அடுப்பில் மண் எண்ணெய் ஊற்றி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்எஎண்ணெய் தனலட்சுமி அணிந்திருந்த நைட்டியில் விழுந்து எதிர் பாராத விதமாக தீப்பிடித்த தில் பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று தன லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    மதுரை மாவட்டம் வில்லூர் போலீஸ் சரகம் எம். போத்த நதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி பாண்டித்தாய் (வயது 65). பிள்ளை களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வரு கின்றனர்.

    பாண்டித்தாய் தனியாக குடியிருந்து வருகிறார் பாண்டித்தாய் வீட்டில் கரண்ட் இல்லாததால் மண் எண்ணெய் விளக்கு வைத்து அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென மண்எண்ணெய் விளக்கு தவறி கீழே விழுந்து தீப்பிடித்ததில் பாண்டி தாய்க்கு சேலையில் தீப் பிடித்து காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தி னர் உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டித்தாய் உயிர் இழந்தார்.

    இச்சம்பவம் குறித்து மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெய்வேலி அருகே நடுரோட்டில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.
    • கீழூர் சாலையில் வந்த போது, காரில் இருந்து திடீரென புகை வந்தது.

    கடலுார்:

    கடலுார் மாவட்டம், நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியை சேர்ந்தவர் குருசாமி, (வயது58) அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர், தனது மகன் எழிலுடன் மயிலாடுதுறையில் இருந்து மாருதிகாரில் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.காரை குருசாமி ஒட்டினார். நெய்வேலி அருகே கீழூர் சாலையில் வந்த போது, காரில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காரை நிறுத்திவிட்டு, குருசாமி, எழில் ஆகியோர் கீழே இறங்கி ஓடியதால் காயமின்றி தப்பினர். தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையஅலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர் கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுதும் எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரிக்கின்றனர்.

    ×