என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில்  விபத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் பலி
    X

    திண்டிவனத்தில் விபத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் பலி

    • நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கசாமியான் தெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது சித்திக் (வயது23). கடந்த ஏப்ரல் மாதம் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுங்காயங்களுடன் சென்னை இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×