search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி உள்பட 3 பேர் பலி
    X

    தொழிலாளி உள்பட 3 பேர் பலி

    • தொழிலாளி உள்பட 3 பேர் பலியாகினார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே வாடிப்பட்டி குமரம் பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையன் மகன் சரவணன் (24). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.இவர் பாலமேடு-மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் சரவணன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    இது குறித்து அவருடைய தாய் சரஸ்வதி அலங்கா நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வரு கின்றனர்.

    திருமங்கலம் மேலக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (47). கொத்தனாரான இவர் திண்டுக்கல்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கட்டுப் பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் அவருக்கு பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து முருகன் மனைவி ராமுத்தாய் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை-திருமங்கலம் நான்கு வழி சாலை கப்பலூர் சர்வீஸ் ரோட்டில் ஒருவர் சாலையோரம் அடிபட்டு மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் மறவன்குளம் கிராம நிர்வாக அதிகாரி ஆனந்த் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    பின்னர் இது குறித்து அவர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சாலையோரம் அடிபட்டு கிடந்த அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அவர் சிகிச்சை பலனனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×