search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி
    X

    கோப்புபடம். 

    ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

    • திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • .இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர்-வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு இடையே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் மஞ்சள், நீல நிற கட்டம் போட்ட முழுக்கை சட்டை, காப்பி நிற பேண்ட் அணிந்துள்ளார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×