search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ration card"

    • இதனால் பொதுமக்கள் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவியது.

    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சி 14 வார்டுக்கு உட்பட்ட காடம்பாடி சவேரியார் கோவில் தெரு பகுதியில் சுமார் 1000 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள 5-ம் எண் அரசு நியாய விலைக்கடையில் வழங்கபடும் அரிசி தரமற்று உணவிற்கு பயன்படுத்த முடியாத நிலையில் வழங்கபடுவதாக கூறப்படுகிறது.

    மேலும் பழுத்த சிவப்பு நிற கலர்களில் வண்டுகள் மொய்த்து துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் சமைத்து உண்ணும் போதும் துர்நாற்றம் வீசுவதாகவும் தங்கள் குழந்தைகள் உணவை சாப்பிட முடியவில்லை என்றும் இந்தஅரிசியை வாங்க வேண்டும் என ஊழியர்கள் பொதுமக்களை நிர்பந்தி பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதனால் பொதுமக்கள் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவியது.

    எனவே தங்கள் பகுதிக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண்கள் பெயர் இடம்பெறுவது அவசியம்.
    • திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாவில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 ரேஷன் கார்டுகள் உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் முன்னுரிமை பெற்ற 2 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண்கள் பெயர் இடம்பெறுவது அவசியம். அதற்காக பெண் பெயர்களில் மாற்றம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாவில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதன் மூலமாக 21 லட்சத்து 83 ஆயிரத்து 449 பேர் ரேஷன் பொருட்களை பெற்று பயன் அடைந்து வருகிறார்கள். முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுகள் 2 லட்சத்து 50 ஆயிரத்து 769 கார்டுகள் உள்ளன. முன்னுரிமை இல்லாத கார்டுகள் 5 லட்சத்து 23 ஆயிரத்து 814 இருக்கிறது.

    மத்திய அரசின் உத்தரவுப்படி, முன்னுரிமை பெற்ற கார்டுகளில் பெண்களே குடும்ப தலைவராக இருக்க வேண்டும். தமிழகத்தில் பி.எச்.எச். என்ற முன்னுரிமை பெற்ற கார்டுகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஓய்.) கார்டுகளில் பெண் குடும்ப தலைவர் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி குடும்ப தலைவர் மாற்ற வேண்டிய கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகளிலும் முன்னுரிமை பெற்ற கார்டுகளில் பெண் குடும்ப தலைவர் மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் முன்னுரிமை பெற்ற கார்டுகளில் குடும்ப தலைவராக பெண் இருக்கும் வகையில் திருத்தம் செய்யும் பணி நடக்கிறது. பி.எச்.எச். என்று கார்டு வைத்துள்ள குடும்பங்களில் தலைவராக பெண் இடம் பெற வேண்டும். ஆண்கள் தலைவராக இருந்தாலும் ரேஷன் கடைகளில், அந்த குடும்பத்தின் தலைவியாக உள்ள பெண் புகைப்படத்தை கொடுத்து மாற்றி அமைக்க வேண்டும். பி.எச்.எச். மற்றும் ஏ.ஏ.ஓய். கார்டுகள் என 2 லட்சத்து 86 ஆயிரம் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் அறிவிக்கும்போது பெண்கள் அதிகம் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
    • மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் - சிறுமியர் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில், கூட்டுறவு சங்கம் சார்பில் 22 கடைகள், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 773 முழு நேரம் மற்றும் 326 பகுதி நேர கடைகள், மகளிர் குழுவினர் நடத்தும் 14 கடைகள், 77 நகரும் ரேஷன் கடைகள் என 1,135 ரேஷன் கடைகள் உள்ளன.மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 769 முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுகள்,5லட்சத்து 23 ஆயிரத்து 814 முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள் என, 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் மூலம் 21 லட்சத்து 83 ஆயிரத்து 449 பேர் பயன்பெற்று வருகின்றனர்.

    பொது வினியோக திட்டத்தில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள, அனைவரும்ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். குழந்தைகள் இருந்தாலும் பிறப்பு சான்றிதழை கொண்டு, பெயர் சேர்த்துவிடலாம். ஆனால் அடுத்த ஓராண்டுக்குள், ஆதார் பதிவு செய்து ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் - சிறுமியர் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கிறது. விரைவில் ஆதார் இணைக்காதபட்சத்தில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயர்கள் ரத்தாகும் அபாயம் உருவாகியுள்ளது.

    இந்நிலையில்குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்து, அந்த விவரங்களை பொது வினியோக திட்டத்தில் இணைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் கடையிலும் ஆதார் எண் இணைக்கப்படாத சிறுவர் -சிறுமியர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வெகுவிரைவாக ஆதார் விவரங்களை இணைக்காவிட்டால் பெயர்கள் ரத்தாகும் அபாயம் உருவாகியுள்ளது.

    இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் 15 ஆயிரம் சிறுவர் -சிறுமியர் ஆதார் இல்லாமல்ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ளனர். 7 வயது வரையில் பெற்றோரின் 'பயோமெட்ரிக்' அடிப்படையில் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறலாம். அதற்கு பிறகு குழந்தைகளின் 'பயோமெட்ரிக்' பதிவு செய்யப்படும்.இதுவரை விடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் உள்ள ஆதார் மையத்தில் சிறுவர் -சிறுமியருக்கு ஆதார் பதிவு செய்து ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றனர்.

    எந்த இடத்திலும் ஒருநபர் கார்டுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்படாது என்று சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #TNAssembly #MinisterKamaraj
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது விஜயதரணி (காங்) எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநபர் ரேசன் கார்டு பலருக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் கஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். நாங்கள் தொகுதியில் ஆய்வு செய்தபோது ஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்கள் பெரும்பாலானோர் தனியாக வசிக்கும் பெண்களாக உள்ளனர்.

    அவர்களுக்கு கணவர் இல்லை. குழந்தைகள் ஆதரவு இல்லை. எனவே ஒருநபர் கார்டுகளுக்கு முகவரியை உறுதி செய்து பொருட்கள் வழங்குங்கள். ஆதார் அட்டையை கூட சரி பார்த்துக் கொள்ளலாம். இவர்களுக்கு ரேசன் கடையில் பொருட்கள் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே ஒரு நபர் கார்டை ரத்து செய்யாதீர்கள் என்றார்.

    இதற்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநபர் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை என்று கூறுவது சரியான செய்தி இல்லை.

    தமிழகத்தில் ஒருநபர் கார்டு அதிகரித்ததால் முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 33 ஆயிரம் கார்டுகள் மட்டும் ஒருநபர் கார்டு என கண்டறியப்பட்டது. அனைத்து பொருட்களை தனியாக பெறுவதற்காக இந்த கார்டை வாங்கியதாக தெரிகிறது.

    ஆனாலும் ஒரு நபர் கார்டுக்கு 5 கிலோ அரிசி மட்டும் கிடைக்கும். எனவே எந்த இடத்திலும் ஒருநபர் கார்டுக்கு ரேசன் பொருட்கள் நிறுத்தப்படாது.

    அவ்வாறு எங்கேனும் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #TNAssembly #MinisterKamaraj
    பொங்கல் பரிசாக ரூ.1,000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்குவதை தடை செய்யும்படி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #Pongalgift #Rationshops
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



    கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருமானம் உள்ளிட்ட எந்த ஒரு பாகுபாடின்றி, ரூ.1000-த்தை பொங்கல் பரிசாக வழங்குகிறது. ஏற்கனவே, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்காத நிலையிலும், அதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலையிலும், இதுபோல பொதுமக்கள் அனைவரும் ரொக்கப்பரிசு வழங்கினால், அது தேவையில்லாத நிதி சுமையை அரசுக்கு ஏற்படுத்தும். நலத்திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கலாம். அதுகூட பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே உருவாக்க வேண்டும். அதற்காக அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்குவது ஏற்க முடியாது.

    மேலும், தமிழக அரசுக்கு வரி உள்ளிட்ட பிற வகைகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 616 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், செலவு உள்ளிட்டவை ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடியாக உள்ளது. இதுபோக தமிழக அரசு ரூ.43 ஆயிரம் 962 கோடி கடன் வாங்கியுள்ளது. எனவே, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று அல்லது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #Pongalgift #Rationshops
    அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் அறிவித்தார். #TNAssembly #Governor #PongalGift
    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் காலை வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி சட்டப்பேரவையில் உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    எளிமையான வாழ்க்கை வாழுங்கள், இதுவே எனது செய்தி. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும். திருவாரூர் தொகுதி தவிர மற்ற பகுதிகளுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும்.

    ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’ மற்ற மாநில வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.  சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் விரைவில் மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை விளங்குகிறது.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கஜா புயல் மறுசீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும். 

    இவ்வாறு கவர்னர் உரையில் குறிப்பிட்டுள்ளார். #TNAssembly #Governor #PongalGift
    ரேசன் கார்டு கேட்டு குழந்தையுடன் பெண் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #Rationcard

    சென்னை:

    சென்னையில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், தர்ணா என்றால் நூறு பேராவது திரண்டு இருப்பதைத்தான் பார்க்க முடியும்.

    ஆனால் மைலாப்பூரில் இளம்பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்து அந்த பெண்ணை அப்புறப்படுத்துவதற்காக போலீசார் விரைந்து வந்தனர்.

    தர்ணாவில் ஈடுபட்ட அந்த பெண்ணின் பெயர் மனோன்மணி (34). நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்தவர்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனோன்மணி அதே பகுதியில் வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

    இதையடுத்து தனது ரே‌ஷன் கார்டை புதிய முகவரிக்கு மாற்றித் தரும்படி கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். அதற்கு தேவையான ஆவணங்கள், ஆதார் கார்டு எல்லாவற்றையும் சமர்ப்பித்து இருக்கிறார். அதிகாரிகளும் அதை சரி பார்த்து விட்டு விரைவில் கார்டு வந்து விடும் என்று கூறி இருக்கிறார்கள்.

    ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கி சாப்பிடும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மனோன்மணி ரேசன் கார்டு கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டுள்ளார். பலமுறை குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்துக்கு அலைந்துள்ளார். ஒவ்வொரு முறையும் மழுப்பலான பதிலே கிடைத்துள்ளது.

    சில தினங்களுக்கு முன்பு சென்று கேட்டபோது இன்னும் கார்டு தயாராகவில்லை என்று கூறி இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணி இ.சேவை மையத்துக்கு சென்று கார்டு நிலவரத்தை விசாரித்துள்ளார். அப்போது கார்டு தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    எல்லா தகவல்களும் சரியாக கொடுத்த பிறகும் ஏன் முடக்கி வைத்துள்ளார்கள் என்று புரியாமல் மனோன்மணி தவித்து இருக்கிறார்.

    ஏற்கனவே மனோன்மணி விண்ணப்பித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரும் விண்ணப்பித்து இருக்கிறார். அவர் இடைத்தரகர் ஒருவர் மூலம் ரூ.14 ஆயிரம் கொடுத்து உடனடியாக கார்டு பெற்றது தெரிய வந்தது.

    தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாததால்தான் மனோன்மணி இந்த தர்ணாவை கையில் எடுத்துள்ளார். தனது 3 வயது குழந்தையை எடுத்து மடியில் வைத்தபடி நடுரோட்டில் அமர்ந்து விட்டார்.

    நிலைமை விவகாரம் ஆன பிறகு விரைவில் கார்டு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்து இருக்கிறார்கள். #Rationcard

    ரேசன்கார்டில் திருத்தங்கள் செய்தால் 20 ரூபாய்க்கு மாற்று ரேசன் கார்டு வழங்கப்படும் என்று உணவு வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளார். #RationCard
    சென்னை:

    தமிழ்நாட்டில் 1 கோடியே 97 லட்சம் குடும்பங்களுக்கு ‘ஸ்மார்ட் ரேசன் கார்டுகள்’ வழங்கப்பட்டுள்ளன. ஆதார் எண் விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

    ரேசன் கார்டில் குடும்ப தலைவர், மகன், மகள் பெயர்களில் பிழைகளை திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும் பொது வினியோக திட்ட இணையதளத்தில் பலர் திருத்தம் செய்து வருகின்றனர்.


    இந்த கார்டுகளை நகல் எடுப்பதற்கு அரசு இ-சேவை மையங்களில் மாற்று ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டன. இதற்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    ஆனால் சேவை மைய ஊழியர்கள் மாற்று கார்டு வழங்க அதிக பணம் வசூலித்ததால் கார்டு வழங்குவதை சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி விட்டனர்.

    தற்போது மாற்று கார்டுகள் கேட்டு ஏராளமானோர் உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்துக்கும், வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இதனால் 20 ரூபாய்க்கு மாற்று ஸ்மார்ட் கார்டுகள் வழங்க ஏற்பாடு நடந்து வருவதாக உணவு வழங்கல் துறை அதிகாரி தெரிவித்தார். #RationCard
    ஆத்தூர் தாலுகாவில் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பிழை திருத்தும் பணி நடைபெறாததால் சுமார் 1500 ரேசன் கார்டுகள் ரத்தாகி விடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    ஆத்தூர்:

    தமிழகம் முழுவதும் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 14 லட்சம் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 10-ல் இருந்து 15 ஆயிரம் வரை ரேசன் கார்டுகளில் பிழை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சில இடங்களில் குடும்ப தலைவர் படத்திற்கு பதிலாக சாமி படங்கள், நடிகர் நடிகைகள் படம் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனால், இப்பிரச்னையை கம்ப்யூட்டர் பதிவேற்றத்தில் ஏற்பட்ட பிழை என அதிகாரிகள் சமாளித்தனர். ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நுற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு, இதுவரை ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வினியோகிக்கப்படவில்லை.

    புதிதாய் விண்ணப்பித்த பலரும், பல ஆண்டுகளாக தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து வருகின்றனர். அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை என்ற புகார் கூறுகின்றனர்.

    ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். பிழை இருந்தாலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை பொது மக்களுக்கு வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கான பணிகளிலும் சுணக்கம் நீடிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 14 மாதங்களுக்கு மேலாக, இது குறித்து பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இ-சேவை மையங்களிலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பிழை திருத்தும் பணி நடைபெறவில்லை. எனவே சுமார் 1500 ரேசன் கார்டுதாரர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக ரேசன் பொருட்கள் வாங்கவில்லை. இதன் காரணமாக தங்கள் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் ரத்தாகி விடுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை உடனே பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    நிலக்கோட்டை தாலுகாவில் 1500 ரேசன் கார்டுகள் ரத்தாகி விட்டதோ என குடும்பத்தினர் கலக்கமடைந்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் ரேசன் அட்டை தாரர்களுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டு வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 14 லட்சம் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 10-ல் இருந்து 15 ஆயிரம் வரை ரேசன் கார்டுகளில் பிழை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    ஒரு சில இடங்களில் குடும்ப தலைவர் படத்திற்கு பதிலாக சாமி படங்கள், நடிகர்-நடிகைகள் படம் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கணினி பிழை ஏற்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை நிலக்கோட்டை உள்பட மாவட்டத்தில் உள்ள 7 தாலுகாவிலும் வினியோகம் செய்யவில்லை.

    இதனால் பொதுமக்கள் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்து வந்தனர். இது குறித்து அவர்கள் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிழை இருந்தாலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை பொது மக்களுக்கு வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டது. ஆனால் அதற்கான பணிகளை அதிகாரிகள் மேற் கொள்ளாமல் அலட்சியமாகவே உள்ளனர்.

    கடந்த 1 வருடமாகவே நிலக்கோட்டை தாலுகாவில் சுமார் 1500 ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இ-சேவை மையங்களிலும் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பிழை திருத்தும் பணி நடைபெறவில்லை. எனவே இந்த கார்டுதாரர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக ரேசன் பொருட்கள் வாங்க வில்லை. இதன் காரணமாக தங்கள் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் ரத்தாகி விடுமோ? என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை உடனே பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ரே‌ஷன் கார்டில் ஆதார் விவரங்களை பதிவு செய்யாதவர்கள் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். #Aadhaar #Rationcard
    சென்னை:

    போலி ரே‌ஷன் கார்டுகளை தடுப்பதற்காக ரே‌ஷன் கார்டுகளில் ஆதார் கார்டு எண் இணைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

    2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் ரே‌ஷன் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. இதில் உள்ள விவரங்கள் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    ஆதார் அட்டையில் தனி நபரின் விழி, விரல் ரேகை ஆகியவை பதிவாகி உள்ளன. எனவே ரே‌ஷன் கார்டில் ஆதார் எண் இணைக்கப்பட்டதன் மூலம் போலி ரே‌ஷன் கார்டுகள் தடுக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் முன்பு 2.01 கோடி ரே‌ஷன் கார்டுகள் இருந்தன. அதில் 6 கோடியே 77 லட்சம் உறுப்பினர்கள் விபரம் இடம் பெற்றிருந்தன. தற்போது 1 கோடியே 96 லட்சம் ரே‌ஷன் கார்டுகள் உள்ளன. இதில் 6 கோடியே 48 லட்சம் உறுப்பினர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    ஆதார் கார்டு இருந்தும் பலர் ரே‌ஷன் கார்டுகளுடன் அதை இணைக்கவில்லை. ஒரு ரே‌ஷன் கார்டில் 6 உறுப்பினர்கள் இருந்தால் அதில் 3 அல்லது 4 பேர் மட்டுமே ஆதார் எண் பதிவு செய்துள்ளன.

    ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண்களை இணைத்தவர்கள் பெயர்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. விரைவில் விரல் ரேகை பதிவு செய்து ரே‌ஷன் பொருட்களை வழங்கும் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

    எனவே ரே‌ஷன் கார்டில் குடும்பத்தில் உள்ள அனைவருடைய பெயர்களும் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே ரே‌ஷன் கார்டில் ஆதார் விவரங்களை பதிவு செய்யாதவர்கள் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ரே‌ஷன் கடைகளில் ஒட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Aadhaar #Rationcard
    நியாய விலை கடைகளில் 3 மாதம் பொருள் வாங்காவிட்டாலும் ரே‌ஷன் கார்டு ரத்து இல்லை என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. (தி.மு.க) பேசுகையில், டெல்லியில் நடைபெற்ற உணவு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஒரு செய்தியை வெளியிட்டதாக அறிகிறேன்.

    3 மாதங்களுக்கு மேல் உணவு பொருட்கள் வாங்காத ரே‌ஷன் அட்டைகளை ரத்து செய்ய மாநில அரசு முனைய வேண்டும் என்று கூறி இருக்கிறார். கட்டிட தொழிலாளர்கள், சாலை பணியாளர்கள், நூற்பாலை தொழிலாளர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் வேலைக்கு செல்பவர்கள், 2, 3 மாதம் கழித்துதான் மீண்டும் சொந்த கிராமத்துக்கு செல்கிறார்கள்.

    மத்திய மந்திரி அறிவிப்பால் இதுபோன்ற தொழிலாளர்கள் ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடும். 1 கோடியே 96 லட்சம் குடும்ப அட்டை கொண்ட பொது வினியோக திட்டத்துக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவே மத்திய அரசின் இந்த உத்தரவை மாநில அரசு பின்பற்ற கூடாது என்றார்.

    இதற்கு அமைச்சர் ஆர்.காமராசு பதில் கூறியதாவது:-

    ரே‌ஷன் கார்டு பற்றி மத்திய மந்திரி கூறியது ஒரு அறிவுரையாகதான் கூறி இருக்கிறாரே தவிர அது கொள்கை முடிவு அல்ல. தமிழ்நாட்டை பொறுத்தவரை 3, 4, 5 மாதங்கள் ரே‌ஷனில் பொருட்கள் வாங்காவிட்டாலும், அந்த கார்டுகள் நிறுத்தப்படுவது கிடையாது. எப்போது வந்தாலும் பொருட்கள் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.



    வெளியூர் சென்றவர்கள் திரும்பி வரும்போது மறுபடியும் நாங்கள் ஊருக்கு வந்துவிட்டோம் என்று ரிஜிஸ்டர் செய்து கொண்டால் அவர்களுக்கு பொருட்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைதான் வருங்காலத்திலும் தமிழக அரசு பின்பற்றும் என்றார்.

    மா.சுப்பிரமணியம்:- சைதாப்பேட்டை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பகுதியில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு அதே பகுதியில் நியாய விலை கடை அமைக்கப்படுமா? என்றார்.

    இதற்கு அமைச்சர் ஆவனம் செய்யப்படும் என்றார். #MinisterKamaraj #RationCard

    ×