search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ration card"

    • ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காத நபர்களை நேரிடையாக வங்கியில் சென்று இணைத்திட உரிய அறிவுரைகள் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும்.
    • தொடர்ந்து எந்த பொருட்களும் விநியோகம் செய்யாமல் கடை திறக்காமல் உள்ள நியாய விலைக்கடைகளை கண்காணித்து கடை திறந்து விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ராஜா ராமன் காணொலி காட்சி மூலம் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:-

    நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் வேட்டி/சேலைகள் பி.ஓ.எஸ். இயந்திரம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

    நியாய விலைக்கடைகளில் எக்காரணத்தை கொண்டும் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகிக்காமல் இருக்க கூடாது.

    நியாய விலைக்கடை திறக்கப்பட வேண்டிய நாட்களில் சரியாக காலை 9 மணிக்கு திறந்து பொருட்கள் விநியோகம் செய்வதை வட்ட வழங்கல் அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காத நபர்களை நேரிடையாக வங்கியில் சென்று இணைத்திட உரிய அறிவுரைகள் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும்.

    தொடர்ந்து எந்த பொருட்களும் விநியோகம் செய்யாமல் கடை திறக்காமல் உள்ள நியாய விலைக்கடைகளை கண்காணித்து கடை திறந்து விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்குதல் கூடாது.

    நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் என்.எப்.எஸ்.ஏ. மற்றும் மாநில ஒதுக்கீடு குடும்ப அட்டைகளுக்கு தனித்தனியாக பில் போடுவதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

    ஒரே நபர் வெளிமாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் குடும்ப அட்டை வைத்திருந்து பொருட்களை பெறும் நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதனை கள விசாரணை செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 11-ந் தேதி ரேசன்கார்டு குறைதீர்க்கும் முகாம்கள் நடக்கிறது.
    • குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 11-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம் வட்டம்-அம்மன்கோவில் (ரேசன் கடை), ராமேசுவரம் வட்டம்-பாம்பன் (ஊராட்சி ஒன்றிய கட்டிடம்), திருவாடானை வட்டம்-கல்லூர் (ரேசன் கடை), பரமக்குடி வட்டம் - சிரகிக்கோட்டை (ரேசன் கடை), முதுகுளத்தூர் வட்டம்-கண்டிலான் (ரேசன்கடை), கடலாடி வட்டம்-பீ.கீரந்தை (ரேசன்கடை), கமுதி வட்டம்-செங்கற்படை (ரேசன்கடை), கீழக்கரை வட்டம்-களரி (ரேசன்கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்-அழகர்தேவன் கோட்டையில் (ரேசன்கடை) முகாம்கள் நடைபெறுகிறது.

    இதில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும் ரேசன் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகா ரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறைதீர் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் 11-ந்தேதி (சனிக்கிழமை) வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

    செங்கல்பட்டு-கொளத்தூர், செய்யூர்-பொலம்பாக்கம், மதுராந்தகம்-மங்கலம், திருக்கழுக்குன்றம்-புலிக்குன்றம், திருப்போரூர்-திருநிலை, வண்டலூர்- குமிழி.

    மேற்படி நடைபெறவுள்ள குறைதீர் முகாம்களில் ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன்கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் ரேசன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை அரசு செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே கப்பலூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் உள்ள அரசு நெல் சேமிப்பு கிடங்கில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு வரை திறந்தவெளியில் தார்பாய்கள் மூடப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் பரவலாக காணப்பட்டது. இதுபோன்று நிலைமை இருக்கக்கூடாது என்ப தற்காக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    அதன்படி, 18 மாதங்களில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 213 இடங்களில் சுமார் 2.86 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவிற்கு ரூ. 238 கோடி மதிப்பில் சேமிப்பு கிடங்கு அமைக்க ஆணை வெளியிட்டது. மேலும் தற்போது உள்ள 18000 மெட்ரிக் டன் கொள்ளளவு கப்பலூர் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 213 இடங்களில் 106 பகுதிகளில் 105 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிவு பெற்று தயார் நிலையில் உள்ளது.

    நியாய விலைக் கடை ரேஷன் கார்டுகளை பொறுத்தவரை 3 வகையான கார்டுகள் உள்ளன. இதில் ஒரு கோடியே 14 லட்சம் அட்டைகள் முன்னுரிமையாக அந்தியோதயா திட்டத்தை உள்ளடக்கிய அட்டைகள், 1.04 லட்சம் முன்னுரிமையற்ற அட்டைதாரர்களும் அரிசி கேட்கிறார்கள்.

    சர்க்கரை அட்டை தாரர்கள் 3.82 லட்சம் பேர் உள்ளனர். பொருட்கள் எதையும் வாங்காமல் 60,000 அட்டைதாரர்கள் உள்ளனர். மொத்தத்தில் 2.23 கோடி ரேசன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளது. இதில் முன்னுரிமை அட்டைகளில் மாற்றுத்திறனாளிகள் 6.6 லட்சம் பேர் சேர்த்துள்ளோம்.

    இதேபோல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 2 வாரத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் ரேசன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக மே-2021 முதல் தற்போது வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 132 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புவழங்கப்பட வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
    • பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வழங்கி தொடங்கி வைத்தார்.

    கடையநல்லூர்:

    தமிழகத்தில் வருகிற 15-ந் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அரிசி வாங்கும் குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசான கரும்பு, பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 வழங்கப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்

    அதன்படி கடையநல்லூர் நகராட்சி அட்டைக் குளம் தெரு பகுதியில் உள்ள உள்ள ரேஷன்கடையில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதுபோன்று கடையநல்லூர் நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ், அந்தந்த பகுதி வார்டு செயலாளர் மற்றும் நகர் மன்ற வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள்.

    • மதுரை மாவட்டத்தில் 70 ஆயிரம் பேர் ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்கவில்லை.
    • உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை- எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரசின் பணப்பலன்கள் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமும் சென்ற டைவதற்கான ஏற்பாடு களை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி மாநில உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதிலும் ரேஷன் அட்டைதாரர்களிடம் வங்கி கணக்குகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவை உடனுக்குடன் மாநில உணவு பொருள் வழங்கல் இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கார்டு தாரர்களின் வங்கி கணக்கு தொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். இதில் தமிழகம் முழுவதிலும் 14,86,000 பேரிடம் வங்கி கணக்கு இல்லை என்பது தெரிய வந்தது.

    அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி-1029, மதுரை வடக்கு தாலுகா- 11,004, மதுரை வடக்கு- 7744, மதுரை மேற்கு- 11742, மதுரை மத்தி-7144, மதுரை கிழக்கு-7909, மதுரை மேலூர்- 6139 பேரையூர்- 4188, திருமங்கலம்- 3188, உசிலம்பட்டி-4763, வாடிப்பட்டி- 5618 ஆகிய பகுதிகளில் வசிக்கும் மேற்கண்ட ரேஷன் கார்டுதாரர்கள் வங்கி கணக்கை சமர்ப்பிக்க வில்லை என்பது தெரிய வந்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 70 ஆயிரத்து 468 பேர் வங்கி கணக்கு ஒப்படைக்க வில்லை. எனவே ரேஷன் கார்டு அலுவலகத்தில் வங்கி கணக்கு சமர்ப்பிக்காத வாடிக்கையாளரிடம் கேட்டு பெறுவது, இல்லாத வர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மூலம் 'ஜீரோ பேலன்ஸ்' அடிப்படையில் புதிய கணக்கு தொடங்கி அதன் விவரங்களை சென்னை சேப்பாக்கம் அலுவ லகத்திற்கு சமர்ப்பிக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக அரசின் பணப் பலன்கள் ரேசன் கார்டு மூலம் வாடிக்கையாளரை சென்றடைய வேண்டும் என்பதற்காக, வங்கி கணக்கு விவரங்கள் இணைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    • 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை.
    • வங்கிகளில் ’ஜீரோ பாலன்ஸ்’ வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. இவர்களில் பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் நம்பரை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.

    இவர்களில் யாராவது ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அதன் விவரங்களை பெறவும், கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 'ஜீரோ பாலன்ஸ்' (பணமில்லாத) வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. வங்கிக் கணக்கு எண் இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு விவரக் குறிப்புகள் அடங்கிய தாளுடன் சேர்த்து, அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை நேரில் அணுகி 'ஜீரோ பாலன்ஸ்'கணக்கை தொடங்க வேண்டும்.

    அந்த விபரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து 4 நாட்களுக்குள் அந்தந்த ரேசன் கடைகளில் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட ரேசன் கடைப் பணியாளர் அவர்களது பகுதியின் கீழ் வரும் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, அவர்களின் வங்கி கணக்கு எண், பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் அவற்றுடன் ரேசன் அட்டை நம்பர், குடும்பத் தலைவர் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கும்படி அவர்களை அறிவுறுத்தி, அந்தத் தகவல்களை கேட்டுப் பெறவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரேசன் கார்டில் தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம்.
    • அதிகாரிகள் செய்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீகாந்தி தத்தா வேதனை

    கொல்கத்தா:

    நாட்டில் அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் ஆவணங்களில் எழுத்துப்பிழை வருவது சகஜம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு, தவறை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால், சில நேரங்களில் சிறிய எழுத்துப்பிழைகூட மக்களின் கோபத்தையும், போராட்டத்தையும் தூண்டிவிடுவதாக அமைந்துவிடுகிறது. அவ்வாறு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர், தனது ரேசன் கார்டில் உள்ள எழுத்துப்பிழையை சரிசெய்யாத அதிகாரிகளை கண்டித்து வித்தியாசமான முறையில் எதிர்ப்பை பதிவு செய்தார்.

    ஸ்ரீகாந்தி தத்தா என்ற என்ற நபர், ரேசன் கார்டில் தன் பெயரை தவறுதலாக பிரின்ட் செய்யப்பட்டதை சரிசெய்யும்படி, அரசு அதிகாரியின் வாகனத்தை துரத்திச் சென்று நாய் போன்று குரைத்தார். தனது புகாரை ஏற்று பெயரை சரிசெய்யும்படி அந்த அதிகாரியிடம் கூறுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    ஸ்ரீகாந்தி தத்தாவின் பெயரில் உள்ள தத்தா என்பதற்கு பதில் குத்தா என பிரின்ட் செய்யப்பட்டதுதான் கோபத்திற்கு காரணம். குத்தா என்றால் இந்தியில் நாய் என்று பொருள். அதனால்தான் ஆத்திரத்தில் நாய் போன்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் குரைத்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், "பெயரை திருத்துவதற்காக மூன்று முறை விண்ணப்பித்தேன். கடைசியாக விண்ணப்பித்தபோது ஸ்ரீகாந்தி குத்தா என பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. அதிகாரிகள் செய்த இந்த தவறால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மீண்டும் விண்ணப்பிக்க சென்றபோது, வட்டார வளர்ச்சி இணை அதிகாரியைப் பார்த்ததும் அவர் முன்னால் நாயைப் போல் குரைக்க ஆரம்பித்தேன். அவர் என் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. எங்களைப் போன்ற சாமானியர்கள் வேலையை விட்டுவிட்டு இதுபோன்று பெயரை திருத்தம் செய்வதற்காக எத்தனை முறைதான் அலைவது?" என கேள்வி எழுப்பினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரேஷன் அட்டையில் இடம் பெற்றுள்ள நபர் வந்துதான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும்.
    • ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்காதது ஏன்? அவை போலி கார்டுகளா? என்பது பற்றி விசாரிக்க உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2 கோடியே 60 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ஆதார் எண் விவரம் மற்றும் கைரேகை பதிவு மூலம் இவை கணினி மயமாக்கப்பட்டு செல்போன் எண்களும் இணைக்கப்பட்டுள்ளன.

    ரேஷன் அட்டையில் இடம் பெற்றுள்ள நபர் வந்துதான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும். மற்றவர்களிடம் ரேஷன் கார்டை கொடுத்து அனுப்பி இப்போது பொருட்கள் வாங்க இயலாது.

    அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது போலி ரேஷன் கார்டுகளை ஓரளவு கண்டுபிடிக்க முடிகிறது. குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி பொங்கல் இலவச பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டு எல்லா வீடுகளிலும் உள்ளது.

    இந்த கார்டுகளுக்கு ஒரு சில குடும்பத்தில் பொருட்கள் வாங்குவது கிடையாது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர் கடந்த 3 மாதமாக ரேஷன் பொருட் கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

    எனவே இந்த கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்காதது ஏன்? அவை போலி கார்டுகளா? என்பது பற்றி விசாரிக்க உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் கடைசி 3 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கு போன் செய்து என்ன காரணத்தினால் பொருட்கள் வாங்கவில்லை என்று விசாரித்து பதிவு செய்து அதை மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர்.

    இதுபற்றி ரேஷன் கடைக்காரர்கள் கூறுகையில், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எதற்காக பொருட்கள் வாங்க வரவில்லை என்று விசாரிப்பதன் நோக்கம், அந்த கார்டு போலி ரேஷன் கார்டா? என்பதை கண்டறிவதற்குதான்.

    ரேஷன் கார்டில் உள்ளவர்கள் அந்த முகவரியில் தான் உள்ளார்களா? அல்லது வீடு மாறி சென்று விட்டார்களா? அல்லது குடும்பத்தலைவர் யாரேனும் இறந்து விட்டார்களா? என்று விசாரிக்கிறோம்.

    இதில் ஓரளவு போலி ரேஷன் கார்டடை கண்டறிய முடியும். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

    • விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான அங்கீகார படிவங்கள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்

    நெல்லை:

    விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

    இந்த ஆய்வு கூட்டத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட வழங்கல் அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்கள், கூட்டுறவு துணை பதிவாளர்கள், சமூகநலத்துறை அலுவலர்கள், சத்துணவு திட்ட அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சமூகத்தில் பின் தங்கிய நிலையிலுள்ள திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கி அவர்களது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

    நெல்லை மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர், திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்க மாநில உணவு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நியாய விலைக் கடைகளுக்கு நேரில் வர இயலாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான அங்கீகார படிவங்கள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, மாநில உணவு ஆணைய உறுப்பினர் கணேசன், இணை பதிவாளர் அழகிரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரா்க ளுக்கு சரியான நேரத்தில், அத்தியாவசிய, சிறப்பு அத்தியாவசிய பொருட்களை வழங்கப்படுகிறது.
    • மொத்த ரேசன் கார்டு எண்ணிக்கை 11 லட்சத்து 794 ஆக அதிகரித்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தி யாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சா்க்கரை, மண்எண்ணைய் மற்றும் பருப்பு, சமையல் எண்ணைய் போன்றவை ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. அத்தியாவசியமான பொருட்களின் விலை உயா்வில் இருந்து ஏழை ,எளிய மக்களை பாதுகாக்கவும், நுண்ணூட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்க வும், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரா்க ளுக்கு சரியான நேரத்தில், அத்தியாவசிய, சிறப்பு அத்தியாவசிய பொருட்களை வழங்கப்படுகிறது. புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி இணையதளம் வாயிலாக பதியப்படும் மனுக்களின் மீது வட்ட வழங்கல் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலா்கள் தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டு புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சிட்டு ரேசன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது.

    அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் 955 புது ரேசன் கார்டு வரப்பெற்று 14 தாலுகா அலுவலகத்துக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சம் வாழப்பாடி தாலுகாவுக்கு 113 ரேசன் கார்டுகள் வரப்பெற்றுள்ளன. சேலம் - 110, மேட்டூர்-94, ேசலம் மேற்கு-88, காடையாம்பட்டி-75, ஓமலூர்-74, சேலம் தெற்கு-71, சங்ககிரி -64, எடப்பாடி-62, குறைந்தபட்சம் ஏற்காடு-8 என வரப்பெற்ற ரேசன் கார்டுகள் அந்தந்த தாலுகாவுக்கு தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளன.

    விண்ணப்பித்த பயனாளி கள், சம்பந்தப்பட்ட தாலு காவுக்கு சென்று, புது ரேசன் கார்டை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். நடப்பாண்டு இதுவரை 18 ஆயிரத்து 895 புது ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் சேர்த்து தற்போது மாவட்டத்தில் மொத்த ரேசன் கார்டு எண்ணிக்கை 11 லட்சத்து 794 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சொந்த வீடு இல்லாத எங்களுக்கு பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழிவகை செய்ய வேண்டும்.
    • போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஆரிய நாட்டு கிழக்குத் தெரு சேர்ந்த பொதுமக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நிறைவேற்றாவிட்டால் ரேசன் கார்டுகள் ஒப்படைக்கப்படும் என ஒப்படைப்பதற்கு வந்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 288 அடுக்குமாடி தொகுப்பு வீடுகள் அரிய கோஷ்டி கிராமத்தில் தற்போது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகளுக்கு பயனாளி தேர்வில் முறைகேடு நடந்துள்ள நிலையில் தற்போது கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுதியற்ற சில பயனாளிகளை நீக்கினர். இதன் காரணமாக பல வீடுகள் நிலுவையில் உள்ள நிலையில் சொந்த வீடு இல்லாத எங்களுக்கு பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு ஒப்படைக்க வந்த மக்களால் பரபரப்பாக காணப்பட்டது.

    ×