search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன்கார்டு"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 11-ந் தேதி ரேசன்கார்டு குறைதீர்க்கும் முகாம்கள் நடக்கிறது.
    • குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 11-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம் வட்டம்-அம்மன்கோவில் (ரேசன் கடை), ராமேசுவரம் வட்டம்-பாம்பன் (ஊராட்சி ஒன்றிய கட்டிடம்), திருவாடானை வட்டம்-கல்லூர் (ரேசன் கடை), பரமக்குடி வட்டம் - சிரகிக்கோட்டை (ரேசன் கடை), முதுகுளத்தூர் வட்டம்-கண்டிலான் (ரேசன்கடை), கடலாடி வட்டம்-பீ.கீரந்தை (ரேசன்கடை), கமுதி வட்டம்-செங்கற்படை (ரேசன்கடை), கீழக்கரை வட்டம்-களரி (ரேசன்கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்-அழகர்தேவன் கோட்டையில் (ரேசன்கடை) முகாம்கள் நடைபெறுகிறது.

    இதில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும் ரேசன் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகா ரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×