search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் கார்டு"

    • சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
    • ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைப்போம்.

     அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கூக்கல்தொரை ஊராட்சியில் உள்ளது ஜீவா நகர். இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் சாலை, குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த பகுதியானது வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளது. இரவு நேரங்களில் தெரு விளக்குகள் இல்லாதால், வனவிலங்குகள் வருவது தெரியாது. இதனால் சில சமயங்களில் வனவிலங்குகள் தாக்கும் சம்பவமும் நிகழ்கிறது.

    தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு, பொதுமக்கள் ஊர் தலைவர் அய்யப்பன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். ஆனால் மனு அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கேட்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆகியவற்றை திரும்ப ஒப்படைக்க போவதாகவும், இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் முறையிட உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

    • மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.
    • வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவி ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.

    இதற்காக நடப்பு ஆண்டில் ஒரு கோடி பெண்களுக்கு உதவித் தொகை வழங்க ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் மூலம் இதனை செயல்படுத்த முடிவு செய்து விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் குறித்த நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

    விண்ணப்ப படிவங்கள் 20-ந்தேதி முதல் வீடுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைக்கு உட்பட்ட தகுதி உள்ளவர்களுக்கு படிவங்கள் வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் மூலம் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவது குறித்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரையில் குடும்ப அட்டை பெறாதவர்கள் இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதே போல ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்கள் கூட்டாக வசித்து வருபவர்களும் இத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பலனை பெற தீவிரமாக உள்ளனர். இதனால் கூட்டு குடும்பங்களாக உள்ளவர்கள் தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கம் அதிகரித்து வருவதாகவும், புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் தினமும் கூடி வருவதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பதிவாகின்றன. ஏற்கனவே உள்ளவர்களுக்கே ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதில் அரசுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதால் உணவு பாது காப்பு துறை சம்பந்தட்ட தாலுகா வழங்கல் அலுவலர், உதவி ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை தற்போது மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் ஆர்வமாக உள்ளதால் புதிய குடும்ப அட்டைக்கு அதிகளவில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் கள ஆய்வு தற்போது செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளோம்.

    வருவாய் ஆய்வாளர்கள், தாலுகா வழங்கல் அலுவலர்கள் இதற்கான தொடர் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தில் இதுவரையில் குடும்ப உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கிடைக்கும். புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு உடனடியாக உதவித் தொகை கிடைக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் ஒரு கார்டு கேட்டும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர்.
    • உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத நிலவரப்படி 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த மே 2021 முதல் கிட்டத்தட்ட 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது.

    இப்போது பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆதரவற்றோர், முதியோர், கூலி வேலை பார்ப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், மீன் விற்பவர்கள் என பலர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்.

    இதற்கான பட்டியலை அரசு தயாரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அதிலும் ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் ஒரு கார்டு கேட்டும் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர்.

    இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதை அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்கின்றனர்.

    அதன் பிறகு சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு சென்று வீட்டை ஆய்வு செய்கின்றனர். சமையலறை ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா, அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு சிலிண்டரா? 2 சிலிண்டரா? என்பதை நேரில் சென்று பார்க்கின்றனர்.

    புதிதாக திருமணம் ஆனவர்கள் என்றால் பழைய கார்டில் இருந்து பெயரை நீக்கி விட்டு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது திருமண பத்திரிகைகளையும் இணைத்திருக்க வேண்டும்.

    இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே புதிய ரேஷன் கார்டுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்கிறார்கள். இந்த ஆய்வுப் பணியை முடிப்பதற்கு இப்போது காலதாமதம் ஆவதால் புதிய கார்டு கிடைப்பதில் 3 மாதம் தள்ளிப்போகிறது.

    இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி கூறுகையில், தகுதியான நபர்களுக்கு புதிய கார்டு வழங்குவதில் எந்த பிரச்சினையும் எழவில்லை.

    ஆனால் 2 பேருக்கு ஒரு கார்டு வேண்டும் என்பதற்காகவே தாய்-தந்தையர் பெயரில் பலர் இப்போது விண்ணப்பிக்கத் தொடங்கி விட்டனர்.

    அதனால்தான் சமையலறை எத்தனை உள்ளது? எத்தனை சிலிண்டர் இருக்கிறது? யார் பெயரில் சிலிண்டர் உள்ளது? என்ற விவரங்களை சரிபார்க்க சொல்லி உள்ளோம்.

    இந்த ஆய்வுப் பணிக்கு ஊழியர்கள் சென்று வருவதால் விசாரித்து முடித்த பிறகே புதிய ரேஷன் கார்டு அச்சிடப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை ரேஷன் கார்ட்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    • குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை ரேஷன் கார்ட்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர் வட்டம் அரும்பாக்கம் நியாய விலைக்கடை, ஊத்துக்கோட்டை வட்டம் பருத்திமேனி குப்பம் நியாய விலைக்கடை, பூந்தமல்லி வட்டம் கொரட்டூர் நியாய விலைக்கடை அருகிலும், திருத்தணி வட்டம் ராமகிருஷ்ணாபுரம் நியாய விலைக்கடை, பள்ளிப்பட்டு வட்டம் ஈச்சம்பாடி நியாய விலைக்கடை, பொன்னேரி ஆரணி-1 வட்டம் கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்பு, கும்மிடிப்பூண்டி வட்டம் குருவாட்டுச்சேரி நியாய விலைக்கடை, ஆவடி வட்டம் திருநின்றவூர் 'அ' கிராமம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஆர்.கே.பேட்டை, ஜனகராஜ குப்பம் நியாய விலைக்கடை ஆகிய இடங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெற்றனர்.

    • உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
    • நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 2 கிலோ கேழ்வரகு வருகிற மே மாதம் முதல் வழங்கப்படும்.

    சென்னை:

    தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை இணைந்து மாணவர்கள், விவசாயிகள் இடையே சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை தொடர்பாகவும், சிறுதானியங்கள் மற்றும் வீட்டு தோட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் நேற்று நடத்தியது. இதனை, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து, அவர் பேசும்போது, "தமிழ்நாட்டில் பொது வினியோக திட்டத்தின் கீழ் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் (ரேஷன் கார்டு) தலா 2 கிலோ கேழ்வரகு வருகிற மே மாதம் முதல் வழங்கப்படும். சிறுதானிய வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இன்றைய நிகழ்வின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறி வீட்டு தோட்டங்கள் வளர்த்து, சிறுதானியங்களின் விளைச்சல் பெருகி அதனை உட்கொண்டு ஆரோக்கியமான வளமான, நலமான, வலிமையான தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உருவாக்கிடுவோம்" என்றார்.

    தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் தலைவர் (சென்னை) அச்சலேந்தர் ரெட்டி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.
    • பள்ளி மாணவி தந்தை மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.

    கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சிதம்பரம் அக்ரமங்கலம் சிறுகாலூரை சேர்ந்த நிரஞ்சனா என்ற மாணவி பள்ளி சீருடையுடன் தனது தாயுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். பின்னர் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது தந்தை மற்றும் தாய் ஆகியோருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக நான் எனது பாட்டி வீட்டில் வசித்து வருகின்றன. தற்போது 12-ம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பு மேற்கொள்ள உள்ளேன். இந்த நிலையில் எனது தந்தை மற்றும் தாய்க்கு ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தாய் மற்றும் எனது பெயரை ரேஷன் கார்டில் இருந்து தந்தை நீக்கிவிட்டார். இதன் காரணமாக மேற்படிப்பு படிக்க வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் பெற முடியவில்லை .ஆகையால் அடிப்படை தேவைகளை பெறுவதற்கு ரேஷன் கார்டில் எனது பெயரை சேர்த்து சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    பள்ளி மாணவி தந்தை மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜனவரி மாதத்தில் இருந்து மாவட்ட தலைநகரிலேயே புதிய ரேஷன் கார்டு அச்சிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.
    • புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாவட்ட தலைநகரிலேயே புதிய ரேஷன் கார்டு அச்சிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிலுவையில் இருந்த விண்ணப்பங்களை பரிசீலித்து கலெக்டர் ஒப்புதலுடன் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரமாக பிப்ரவரி மாதம் வரை நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் அச்சிட்டு தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலர்கள் கூறியதாவது:- 4 மாதம் நிலுவையில் இருந்த விண்ணப்பங்களை பரிசீலித்து புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க மாவட்டத்திலேயே கார்டு அச்சிடும் வசதி செய்யப்பட்டு ள்ளது.விண்ணப்பங்களை பரிசீலித்து ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் இடைவெளியில் நிர்வாக ஒப்புதல் பெற்று புதிய கார்டுகளை அச்சிட்டு வழங்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நிலுவை விண்ணப்பம் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் துவங்கி உடனுக்குடன் கார்டு அச்சிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருமணமாகி ஒரே குடும்பமாக வசிப்பவர்கள், தனியாக ரேஷன் கார்டு பெறக்கூடாது. பழைய கார்டில் பெயர் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். கூட்டுக்குடும்பமாக வசிப்பவர் கார்டு பெறுவதை தடுக்கவே புதிய கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போது கட்டாயம் கியாஸ் இணைப்பு வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். பலகட்ட சரிபார்ப்புக்கு பிறகே பயனாளிகளாக தேர்வு செய்து கலெக்டர் ஒப்புதலுடன் கார்டு அச்சிட்டு வழங்குவதாக குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காத நபர்களை நேரிடையாக வங்கியில் சென்று இணைத்திட உரிய அறிவுரைகள் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும்.
    • தொடர்ந்து எந்த பொருட்களும் விநியோகம் செய்யாமல் கடை திறக்காமல் உள்ள நியாய விலைக்கடைகளை கண்காணித்து கடை திறந்து விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ராஜா ராமன் காணொலி காட்சி மூலம் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:-

    நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் வேட்டி/சேலைகள் பி.ஓ.எஸ். இயந்திரம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

    நியாய விலைக்கடைகளில் எக்காரணத்தை கொண்டும் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகிக்காமல் இருக்க கூடாது.

    நியாய விலைக்கடை திறக்கப்பட வேண்டிய நாட்களில் சரியாக காலை 9 மணிக்கு திறந்து பொருட்கள் விநியோகம் செய்வதை வட்ட வழங்கல் அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காத நபர்களை நேரிடையாக வங்கியில் சென்று இணைத்திட உரிய அறிவுரைகள் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும்.

    தொடர்ந்து எந்த பொருட்களும் விநியோகம் செய்யாமல் கடை திறக்காமல் உள்ள நியாய விலைக்கடைகளை கண்காணித்து கடை திறந்து விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்குதல் கூடாது.

    நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் என்.எப்.எஸ்.ஏ. மற்றும் மாநில ஒதுக்கீடு குடும்ப அட்டைகளுக்கு தனித்தனியாக பில் போடுவதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

    ஒரே நபர் வெளிமாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் குடும்ப அட்டை வைத்திருந்து பொருட்களை பெறும் நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதனை கள விசாரணை செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறைதீர் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் 11-ந்தேதி (சனிக்கிழமை) வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

    செங்கல்பட்டு-கொளத்தூர், செய்யூர்-பொலம்பாக்கம், மதுராந்தகம்-மங்கலம், திருக்கழுக்குன்றம்-புலிக்குன்றம், திருப்போரூர்-திருநிலை, வண்டலூர்- குமிழி.

    மேற்படி நடைபெறவுள்ள குறைதீர் முகாம்களில் ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன்கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் 70 ஆயிரம் பேர் ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்கவில்லை.
    • உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை- எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரசின் பணப்பலன்கள் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமும் சென்ற டைவதற்கான ஏற்பாடு களை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி மாநில உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதிலும் ரேஷன் அட்டைதாரர்களிடம் வங்கி கணக்குகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவை உடனுக்குடன் மாநில உணவு பொருள் வழங்கல் இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கார்டு தாரர்களின் வங்கி கணக்கு தொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். இதில் தமிழகம் முழுவதிலும் 14,86,000 பேரிடம் வங்கி கணக்கு இல்லை என்பது தெரிய வந்தது.

    அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி-1029, மதுரை வடக்கு தாலுகா- 11,004, மதுரை வடக்கு- 7744, மதுரை மேற்கு- 11742, மதுரை மத்தி-7144, மதுரை கிழக்கு-7909, மதுரை மேலூர்- 6139 பேரையூர்- 4188, திருமங்கலம்- 3188, உசிலம்பட்டி-4763, வாடிப்பட்டி- 5618 ஆகிய பகுதிகளில் வசிக்கும் மேற்கண்ட ரேஷன் கார்டுதாரர்கள் வங்கி கணக்கை சமர்ப்பிக்க வில்லை என்பது தெரிய வந்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 70 ஆயிரத்து 468 பேர் வங்கி கணக்கு ஒப்படைக்க வில்லை. எனவே ரேஷன் கார்டு அலுவலகத்தில் வங்கி கணக்கு சமர்ப்பிக்காத வாடிக்கையாளரிடம் கேட்டு பெறுவது, இல்லாத வர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மூலம் 'ஜீரோ பேலன்ஸ்' அடிப்படையில் புதிய கணக்கு தொடங்கி அதன் விவரங்களை சென்னை சேப்பாக்கம் அலுவ லகத்திற்கு சமர்ப்பிக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக அரசின் பணப் பலன்கள் ரேசன் கார்டு மூலம் வாடிக்கையாளரை சென்றடைய வேண்டும் என்பதற்காக, வங்கி கணக்கு விவரங்கள் இணைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரேஷன் அட்டையில் இடம் பெற்றுள்ள நபர் வந்துதான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும்.
    • ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்காதது ஏன்? அவை போலி கார்டுகளா? என்பது பற்றி விசாரிக்க உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 2 கோடியே 60 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ஆதார் எண் விவரம் மற்றும் கைரேகை பதிவு மூலம் இவை கணினி மயமாக்கப்பட்டு செல்போன் எண்களும் இணைக்கப்பட்டுள்ளன.

    ரேஷன் அட்டையில் இடம் பெற்றுள்ள நபர் வந்துதான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும். மற்றவர்களிடம் ரேஷன் கார்டை கொடுத்து அனுப்பி இப்போது பொருட்கள் வாங்க இயலாது.

    அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது போலி ரேஷன் கார்டுகளை ஓரளவு கண்டுபிடிக்க முடிகிறது. குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி பொங்கல் இலவச பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டு எல்லா வீடுகளிலும் உள்ளது.

    இந்த கார்டுகளுக்கு ஒரு சில குடும்பத்தில் பொருட்கள் வாங்குவது கிடையாது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர் கடந்த 3 மாதமாக ரேஷன் பொருட் கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

    எனவே இந்த கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்காதது ஏன்? அவை போலி கார்டுகளா? என்பது பற்றி விசாரிக்க உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் கடைசி 3 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கு போன் செய்து என்ன காரணத்தினால் பொருட்கள் வாங்கவில்லை என்று விசாரித்து பதிவு செய்து அதை மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர்.

    இதுபற்றி ரேஷன் கடைக்காரர்கள் கூறுகையில், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எதற்காக பொருட்கள் வாங்க வரவில்லை என்று விசாரிப்பதன் நோக்கம், அந்த கார்டு போலி ரேஷன் கார்டா? என்பதை கண்டறிவதற்குதான்.

    ரேஷன் கார்டில் உள்ளவர்கள் அந்த முகவரியில் தான் உள்ளார்களா? அல்லது வீடு மாறி சென்று விட்டார்களா? அல்லது குடும்பத்தலைவர் யாரேனும் இறந்து விட்டார்களா? என்று விசாரிக்கிறோம்.

    இதில் ஓரளவு போலி ரேஷன் கார்டடை கண்டறிய முடியும். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

    • 2 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண்கள் பெயர் இடம்பெறுவது அவசியம்.
    • திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாவில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 ரேஷன் கார்டுகள் உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் முன்னுரிமை பெற்ற 2 லட்சத்து 86 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண்கள் பெயர் இடம்பெறுவது அவசியம். அதற்காக பெண் பெயர்களில் மாற்றம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகள் திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாவில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதன் மூலமாக 21 லட்சத்து 83 ஆயிரத்து 449 பேர் ரேஷன் பொருட்களை பெற்று பயன் அடைந்து வருகிறார்கள். முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுகள் 2 லட்சத்து 50 ஆயிரத்து 769 கார்டுகள் உள்ளன. முன்னுரிமை இல்லாத கார்டுகள் 5 லட்சத்து 23 ஆயிரத்து 814 இருக்கிறது.

    மத்திய அரசின் உத்தரவுப்படி, முன்னுரிமை பெற்ற கார்டுகளில் பெண்களே குடும்ப தலைவராக இருக்க வேண்டும். தமிழகத்தில் பி.எச்.எச். என்ற முன்னுரிமை பெற்ற கார்டுகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஓய்.) கார்டுகளில் பெண் குடும்ப தலைவர் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி குடும்ப தலைவர் மாற்ற வேண்டிய கார்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகளிலும் முன்னுரிமை பெற்ற கார்டுகளில் பெண் குடும்ப தலைவர் மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் முன்னுரிமை பெற்ற கார்டுகளில் குடும்ப தலைவராக பெண் இருக்கும் வகையில் திருத்தம் செய்யும் பணி நடக்கிறது. பி.எச்.எச். என்று கார்டு வைத்துள்ள குடும்பங்களில் தலைவராக பெண் இடம் பெற வேண்டும். ஆண்கள் தலைவராக இருந்தாலும் ரேஷன் கடைகளில், அந்த குடும்பத்தின் தலைவியாக உள்ள பெண் புகைப்படத்தை கொடுத்து மாற்றி அமைக்க வேண்டும். பி.எச்.எச். மற்றும் ஏ.ஏ.ஓய். கார்டுகள் என 2 லட்சத்து 86 ஆயிரம் கார்டுகளில் குடும்ப தலைவராக பெண் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் அறிவிக்கும்போது பெண்கள் அதிகம் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×