search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 9 கிராமங்களில் ரேஷன் கார்டு குறைகள் தீர்க்கப்பட்டன
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 9 கிராமங்களில் ரேஷன் கார்டு குறைகள் தீர்க்கப்பட்டன

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை ரேஷன் கார்ட்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    • குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை ரேஷன் கார்ட்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர் வட்டம் அரும்பாக்கம் நியாய விலைக்கடை, ஊத்துக்கோட்டை வட்டம் பருத்திமேனி குப்பம் நியாய விலைக்கடை, பூந்தமல்லி வட்டம் கொரட்டூர் நியாய விலைக்கடை அருகிலும், திருத்தணி வட்டம் ராமகிருஷ்ணாபுரம் நியாய விலைக்கடை, பள்ளிப்பட்டு வட்டம் ஈச்சம்பாடி நியாய விலைக்கடை, பொன்னேரி ஆரணி-1 வட்டம் கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்பு, கும்மிடிப்பூண்டி வட்டம் குருவாட்டுச்சேரி நியாய விலைக்கடை, ஆவடி வட்டம் திருநின்றவூர் 'அ' கிராமம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஆர்.கே.பேட்டை, ஜனகராஜ குப்பம் நியாய விலைக்கடை ஆகிய இடங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெற்றனர்.

    Next Story
    ×