search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahane"

    இங்கிலாந்துக்கு எதிரான டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND #ViratKohli #Rahane
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. காலையில் லேசாக மழை பெய்ததால் ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. ரிஷப் பந்த், அஸ்வின் களம் இறங்கினார்கள்.



    92-வது ஓவரை பிராட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரிஷப் பந்த் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பிராட் வீசிய 94-வது ஓவரில் அஸ்வின் ஸ்டம்பை பறிகொடுத்தார். அஸ்வின் 17 பந்தில் 14 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஷமியை 3 ரன்னிலும், பும்ராவை டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேற்ற இந்தியா முதல் இன்னிங்சில் 94.5 ஓவரில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    2-வது இன்னிங்சில் விராட் கோலி 4-வது வீரராக களம் இறங்காததற்கு தொடக்க ஜோடி நீண்ட நேரம் நிற்காததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ஆண்டர்சனின் (5) அபார பந்து வீச்சால் 107 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இங்கிலாந்து நேற்றைய 3-வது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கியது. கிறிஸ் வோக்ஸ் (120 நாட்அவுட்), பேர்ஸ்டோவ் (93) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்னுடனும், சாம் குர்ரான் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சாம் குர்ரான் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவ்வப்போது பீல்டிங் செய்யாமல் ஓய்வு எடுத்துக் கொண்டார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகத்தான் அவர் வெளியில் இருக்கிறார் என்று கூறப்பட்டது. இன்றைய ஆட்டம் தொடங்கியதும் விராட் கோலி பீல்டிங் செய்யவில்லை. ரகானேத்தான் கேப்டனாக செயல்பட்டார்.



    இங்கிலாந்து டிக்ளேர் செய்ததும் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது ஓவரில் முரளி விஜயும், 7-வது ஒவரில் லோகேஷ் ராகுலும் ஆட்டமிழந்தனர். இரண்டு விக்கெட்டுக்கள் வீழந்த பின்னர் விராட் கோலிதான் களம் இறங்குவார். ஆனால் ரகானே களம் இறங்கினார்.

    இதனால் விராட் கோலி முகுது வலி காரணமாகத்தான் களம் இறங்கியவில்லை என்று கருதப்பட்டது. ஆனால், இன்று அவர் இங்கிலாந்து பேட்டிங் செய்யும்போது கடைசி 37 நிமிடங்கள் பீல்டிங் செய்யவில்லை. இதனால் 37 நிமிடங்கள் கழித்துதான் களம் இறங்க முடியும்.

    முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் 28 நிமிடத்திற்குள் ஆட்டமிழந்தனர். இன்னும் 9 நிமிடங்கள் இருந்ததால் அவரால் களம் இறங்க முடியவில்லை. இதனால் ரகானே களம் இறங்கியதாக கூறப்படுகிறது.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 2-வது நாள் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 53 நாட்அவுட். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.

    இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார்.

    பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 9 ரன்னுடனும், ரகானே 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரகானே 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் பென் ஸ்டோக்ஸ் கைப்பற்றி இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார்.

    6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 2-வது நாள் தேனீர் இடைவேளைக்கு சற்றுமுன் ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். விராட் கோலி - ஹர்திக் பாண்டியா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது.

    ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தாலும் விராட் கோலி மறுமுனையில் அரைசதம் அடித்தார். 7-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். தேனீர் இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 53 ரன்னுடனும், அஸ்வின் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க இருக்கையில், இந்திய அணியின் துணைக் கேப்டன் ரகானே அளித்த பேட்டியின் முழுவிவரம் கொடுக்கப்பட்டுள்ளது. #ENGvIND #Rahane
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரகானே பேட்டியளித்தார்.

    ரகானேயின் முழுப்பேட்டி பின்வருமாறு:-

    இங்கிலாந்து மண்ணில் விளையாடும்போது திறமையை விட, மனநிலைதான் மிகமிக முக்கியமானது. இங்கிலாந்து மண்ணிற்கு ஏற்றபடி மாறிக் கொள்வது, சூழ்நிலையை உடனடியாக கையாள்வது என்பதெல்லாம் உங்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்துதான் அமையும். ஆகவே, உங்களுடைய திறமையை பற்றி சிந்திப்பதை விட இது முக்கியமானது.

    எங்களை பொறுத்தவரையில் போட்டியின் முடிவைவிட, சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சென்று கொண்டிருக்கிறோம். ஏனென்றால், சில நேரத்தில் முடிவை நோக்கி நாம் சென்றால், அதுவே நமக்கு நாமே நெருக்கடியை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடும். இந்த முறை நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். ஒவ்வொரு வீரர்களும் அவர்களது திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    தனிப்பட்ட முறையில் நான் எப்போதுமே இதுபோன்ற சவால்கள் மற்றும் வெளிநாட்டு தொடரை மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன். என்னுடைய மனநிலை எப்போதுமே நிகழ்காலத்தில்தான் இருக்கும். இந்த நேரத்தில் ஒரு டெஸட், ஒரு போட்டி என்ற நினைப்பில்தான் களம் இறங்குவேன். இங்கிலாந்தில் பந்து ஸ்விங் ஆகும். ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ் இருக்கும். நியூசிலாந்தில் ஸ்விங் இருக்கும். இது எல்லோருக்கும் தெரியும். இந்த தொடரை நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    இங்கிலாந்தில் உள்ள சீதோசன நிலையில் கம்யூனிகேசன் மிகவும் முக்கியமானது. நீங்கள் பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது உங்களது பார்ட்னர் களத்தில் இருப்பார். அப்போது இருவரும் சிறந்த முறையில் பேசிக் கொள்ள வேண்டும்.

    யாராவது ஒரு பேட்ஸ்மேன் 70 அல்லது 80 ரன்கள் எடுத்திருக்கும்போது, சீதோசன நிலை மாறினால், அவர்கள் ரன்குவிப்பதை விட, நிலைத்து நின்று விளையாட முடிவு செய்ய வேண்டும். சூழ்நிலை மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஏனென்றால், ஒரு பந்து வீச்சாளருக்கு ஒரு ஸ்பெல் சிறப்பாக அமைந்து விட்டால், அதன்பின் அந்த அணி சிறப்பான நிலையை எட்டிவிடும். பேட்டிங் யுனிட் அவர்களுக்கு கண்டிப்பாக மரியாதை கொடுக்க வேண்டும். இதை ஏற்றுக் கொள்வது முக்கியமானது.



    இங்கிலாந்தில் பொறுமை என்பதுதான் முக்கியமானது. இது வெதரை சார்ந்தது. சூரியன் நன்றாக பிரகாசித்தால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். ஆனால், மேகமூட்டமாக காணப்பட்டால் பந்து வீச்சாளர்கள் அசத்துவார்கள்.

    தவான் மற்றும் புஜாரா பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இருவரும் குவாலிட்டி வீரர்கள். ஒரு இன்னிங்சில் விளையாடி விட்டால், அவர்களது ரிதத்தை பெற்று விடுவார்கள். நாங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறோம். இறுதியாக யார் யாருக்கெல்லாம் இடம் என்பதை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர்தான் முடிவு செய்வார்கள்.

    யாரெல்லாம் விளையாடுவார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், குல்தீப் யாதவ் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அதேபோல் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரையும் மறந்து விடக்கூடாது. அவர்கள் நமக்காக டெஸ்ட் போட்டியில் அபாரமான சாதனைகளை படைத்துள்ளனர்.



    இங்கிலாந்து எப்போதும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், அது பந்து வீச்சாளர்களுக்கு ஈசியாக இருக்கும் என்பது அர்த்தம் கிடையாது. அவர்களுக்கு பொறுமை தேவை. சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டும். இரண்டு முனைகளிலும் இருந்து விக்கெட் வீழ்த்த முயற்சி செய்வதை விட தங்களது சொந்த திறமை மீது உறுதியாக இருக்க வேண்டும்.

    தென்ஆப்பிரிக்கா தொடரின்போது மூன்று போட்டிகளிலும் 60 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுபோல், இந்த தொடரிலும் ஒவ்வொரு போட்டியில் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்த பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா தொடரில் நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்துவோம் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

    அதேசமயத்தில் ஒவ்வொரு பந்து வீச்சாளரும் தங்களுக்குள் நெருக்கடியை ஏற்படுத்திவிடக் கூடாது. அதை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பந்து வீச்சு உலகின் தலைசிறந்தது என்று நம்ப வேண்டும்.



    எங்களது பந்து வீச்சாளர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். முகமது ஷமி, உமேஷ் யாதவ் 2014 தொடரில் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் 60 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    எங்களது பந்து வீச்சால் எதிரணிக்கு கொடச்சல் கொடுக்க முடியும். ஆனால், பொறுமையாக, சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வது அவர்களுக்கு சவாலாக இருக்கும்.

    இவ்வாறு ரகானே கூறினார்.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார் என்று ரஹானே நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Rahane #KuldeepYadav
    பர்மிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நாளை தொடங்கும் நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே நேற்று அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான சவாலுக்கு இந்திய அணி நன்றாக தயாராகி இருக்கிறது. போட்டி முடிவு குறித்து அதிகம் கவலைப்பட்டு நெருக்கடிக்கு ஆளாவதை விடுத்து சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் இந்திய அணி அதிகம் கவனம் செலுத்தும். எங்கள் அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார். அவர் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் சிறப்பாக பந்து வீசினார். அதற்காக அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவை நாங்கள் மறக்கவில்லை. அவர்கள் எங்கள் அணிக்காக கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி நம்மை விரைவாக மாற்றி கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

    இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் அலஸ்டயர் குக் அளித்த ஒரு பேட்டியில், ‘கடந்த 18 மாதங்களில் அடில் ரஷித் நல்ல முதிர்ச்சி கண்டுள்ளார். அவர் நல்ல நிலையில் உள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் நெருக்கடியை சமாளித்து சிறப்பாக பந்து வீசுவார். அவர் தனது தேர்வு குறித்த விமர்சனத்தை கண்டு கொள்ளாமல் நேர்மறையான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறினார். #Rahane #KuldeepYadav
    ரகானே அல்லது கேஎல் ராகுல் ஆகியோரில் ஒருவருக்கு 4-வது இடம் கொடுக்காதது குறித்து திலிப் வெங்சர்கார் விமர்சனம் எழுப்பியுள்ளார். #rahane #KLRahul
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது.

    ஒருநாள் கிரிக்கெட் அணியில் தொடக்க வீரர்களான தவான், ரோகித் சர்மா மற்றும் 3-வது வீரராக களம் இறங்கும் விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் சொதப்பினால் ஒட்டு மொத்தமாக அணி சொதப்பி விடுகிறது. 4-வது இடத்திற்கு சரியான நபரை இந்திய அணி இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

    இதனால் இந்தியா தோல்வியடைந்து வருகிறது. இப்படி சென்றால் உலகக்கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்வது கடினமாகிவிடும். 4-வது இடத்திற்கு ரகானே அல்லது கேஎல் ராகுலை தயார் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் கங்குலி விமர்சனம் செய்திருந்தார்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வளாரும் ஆன திலிப் வெங்சர்காரும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து திலிப் வெங்சர்கார் கூறுகையில் ‘‘நம்பர் 3 மற்றும் 4 ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கியமான இடம். நம்பர் 4 இடத்திற்கு சரியான நபர் கிடைக்கவில்லை என்பது மோசமான தேர்வை காட்டுகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரகானே அல்லது கேஎல் ராகுலை அந்த இடத்திற்கான வாய்ப்பில் இருந்து நீங்கள் எப்படி தவிர்க்க முடியும்?.



    ஒருநாள் போட்டிக்கு ரகானே தகுதி பெற முடியாது என்றால், அங்கு உங்கள் கண்ணை விட வேறு ஏதோ அங்கிருக்கிறது என்பதுதான் அர்த்தம். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து அவர் எப்படி நீக்க முடியும்?.

    இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரகானே மீது நீங்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடியாமல் போனது?. நீங்கள் மியூசிக் சேர் ஆட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தால் பின்னர், டாப் வீரர்களின் நம்பிக்கை சீர்குலைக்கப்படும். இது வருங்காலத்திற்கு நல்லதல்ல. கேஎல் ராகுலை 4வது இடத்தில் நிலையாக களம் இறக்காதது, அவரை போன்ற குவாலிட்டி பேட்ஸ்மேன்களுக்கு நல்லதல்ல’’ என்றார்.
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான டெஸ்டில் இந்தியா ‘ஏ’ 253 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. #INDA #Rahane #Pant #mohammedSiraj
    இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி கடந்த 16-ந்தேதி வொர்செஸ்டரில் தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் 423 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 197 ரன்கள் சேர்த்தது. 226 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதனால் இந்தியா ‘ஏ’ அணியின் வெற்றிக்கு 421 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.



    ரகானே (48), ரிஷப் பந்த் (61) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா ‘ஏ’ அணி 167 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ‘ஏ’ அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    முதல் இன்னிங்சில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், நதீம் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 2-வது இன்னிங்சில் முகது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி 197 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ரிஷப் பந்த், ரகானே ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். ENGvIND
    இங்கிலாந்து லயன்ஸ் - இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் வொர்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. 16-ந்தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் முதல் இன்னிங்சில் 423 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 180 ரன்களும், கப்பின்ஸ் 73 ரன்களும், தாவித் மலன் 74 ரன்களும் குவித்தனர். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் முகமது சராஜ் 4 விக்கெட்டும், நதீம் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா ‘ஏ’ அணி பேட்டிங்கை தொடங்கியது. பிரித்வி ஷா, முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயாங்க் அகர்வால் ரன்ஏதும் எடுக்காமலும், கருண் நாயர் 4 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.



    அடுத்து பிரித்வி ஷா உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த பிரித்வி ஷா 62 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ரகானே உடன் ரிஷப் பந்த் உடன் ஜோடி சேர்ந்தார். நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 26 ரன்களுடனும், ரிஷப் பந்த் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரகானே 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் அரைசதம் அடித்து 58 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா ஏ அணி 197 ரன்னில் சுருண்டது. சாம் குர்ரான் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்கள். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் உடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் எசக்ஸ் அணிக்கெதிராக ஜூலை 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

    டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரகானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இரண்டு பேரும் தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறாததால் அவர்கள் இங்கிலாந்து செல்லவில்லை. அதேவேளையில் இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றி வாகை சூடியது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒன்றில் டிரா, ஒன்றில் வெற்றி கண்டுள்ளது. நாளை இங்கிலாந்து லயன்ஸ் அணியை எதிர்தது விளையாடுகிறது.

    இந்தியா ‘ஏ’ அணியில் உள்ள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் முன் தேர்வாளர்கள் டிராவிட்டிடம் ஆலோசனை கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் ரகானே மற்றும் முரளி விஜய் ஆகியோர் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாட முடிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் இடம்பிடிக்க எளிதாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளனர்.

    இந்திய அணி கடந்த முறை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது முரளி விஜய், ரகானே ஆகியோர் சதம் அடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    இரக்கம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று ஆப்கானிஸ்தான் டெஸ்ட் குறித்து இந்திய அணி கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார். #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் ஆகும்.

    முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கினாலும், நாங்கள் இரக்கம் காட்டமாட்டோம், அதேபோல் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று கேப்டன் ரகானே கூறியுள்ளார்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் குறித்து ரகானே கூறுகையில் ‘‘நாங்கள் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியை சாதாரணமாக நினைத்து களம் இறங்க போவதில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடக் கூடிய அணி. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். கிரிக்கெட் ஒரு வேடிக்கையான போட்டி என்பதால் எதிரணிக்கு எந்தவொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. நாங்கள் களம் இறங்கி இரக்கமற்ற நிலையில் விளையாட விரும்புகிறோம்.



    நாங்கள் எங்களுடைய பலம் மற்றும் சாதகமான விஷயத்தோடு களம் இறங்க இருக்கிறோம். நாங்கள் ஆப்கானிஸ்தான் அணியை பற்றி யோசிக்க வேண்டியதில்லை. எதிரணிக்கு மரியாதை கொடுக்க வேண்டியதுதான். ஆனால், நாங்கள் களமிறங்கி 100 சதவிகிதத்திற்கு மேல் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது’’ என்றார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அறிமுக டெஸ்டில் விளையாடுவது சிறப்பானது என இந்திய டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ரகானே கூறியுள்ளார். #IND #AFG #Rahane
    பெங்களூர்:

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூரில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு அறிமுக டெஸ்ட் போட்டி ஆகும். அந்த அணி டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற 12-வது அணி ஆகும்.

    இப்போட்டிக்கு இந்திய அணிக்கு தற்காலிக கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். போட்டி குறித்து ரகானே கூறியதாவது:-

    ஆப்கானிஸ்தானின் அறிமுக டெஸ்டில் விளையாடுவது சிறப்பு வாய்ந்ததாகும். இந்த போட்டி அவர்களுக்கு வரலாற்று தருணம் ஆகும். இதில் நாங்கள் பங்கேற்று விளையாடுவது அற்புதமானது. ஆப்கானிஸ்தான் சிறந்த அணியாகும். சில திறமை வாய்ந்த வீரர்கள் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

    அந்த உத்வேகத்தை டெஸ்ட் போட்டியிலும் தொடருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இந்திய கிரிக்கெட் அணி சார்பில் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஸாய் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவது எங்களுக்கு சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மிகவும் கவுரமாகும்.

    இதில் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது பெருமை வாய்ந்தது.

    எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். தனிப்பட்ட முறையிலும் அதேவேளையில் ஒரு அணியாகவும் திறமையை வெளிப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #IND #AFG #Rahane
    ஒருநாள் அணியில் இருந்து நீக்கியது இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு தயாராக அதிக நேரம் கிடைக்கும் என ரகானே தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியில் ரகானே இடம் பிடிக்கவில்லை. ஒருநாள் அணியில் இடம்பிடிக்காததால், டெஸ்ட் போட்டிக்கு தயாராக அதிக நேரம் கிடைக்கும் என ரகானே தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘நான் ஒருநாள் அணிக்காக இங்கிலாந்து செல்லவில்லை. ஆனால், டெஸ்ட் போட்டிற்காக செல்கிறேன். ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. இது டெஸ்ட் போட்டிற்கு தயாராவதற்கு நேரம் கிடைக்கும் என்பது முக்கியமானது. ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்கு முன்பு எனக்கு அதிக நேரம் உள்ளது. அதேபோல் இங்கிலாந்து டெஸ்டிற்கு முன்பும் நேரம் அதிகமாக உள்ளது’’ என்றார்.
    ×