search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "punishment"

    • மாலை பொழுதாகும் போது ஒட்டு மொத்தமாக அந்த லாரி முனையமே முற்றிலும் திறந்தவெளி மதுபாராக மாறிவிடுகிறது.
    • வார இறுதி நாட்களில் இங்கு வரும் குடிமகன்களில் எண்ணிக்கை கட்டுக்கடங்காது செல்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது.

    புதுவை தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் ஏற்றி இறக்க வரும் கனரக வாகனங்கள் நிறுத்த சரியான இடம் இல்லாததால் கடந்த காலங்களில் பிரதான சாலைகளின் ஒரம் நிறுத்தினர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் டிரைவர்கள் சாலையிலேயே தங்கி சமைத்து உண்டு இருந்தனர்.

    இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு லாரி முனையம் தொடங்கப்பட்டது. இந்த பகுதி தமிழகத்தோடு ஒட்டிய பகுதியாகும். இதனால் எல்லை பகுதிகளில் அதிக அளவில் மதுக்கடைகள் உள்ளது. லாரி முனையம் தொடங்கப்பட்டபோது நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் அங்கு வந்து நிறுத்தப்பட்டது. லாரி ஓட்டுனர்களும், கிளினர்களும் அங்கேயே சமைத்து ஓய்வெடுத்தனர்.

    கொரோனா காலத்திற்கு பிறகு 24 மணி நேரமும் இயங்கும் திறந்தவெளி மதுபாராக லாரிமுனையம் மாறியுள்ளது. பெரும்பாலும் காலை நேரத்தில் மோட்டார் சைக்கிள், கார் ஓட்ட பயில்பவர்கள் அங்கு வருவர். விடுமுறை நாட்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவர்.

    இங்கு போக்குவரத்து கிளை அலுவலகமும் உள்ளது. சமீப காலமாக அங்கு பெண்கள் வாகன லைசென்ஸ் வாங்க பயிற்சிக்கு வருவதையே கைவிட்டுவிட்டனர். காரணம் காலை நேரங்களிலேயே மதுபிரியர்கள் லாரி முனையத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

    மாலை பொழுதாகும் போது ஒட்டு மொத்தமாக அந்த லாரி முனையமே முற்றிலும் திறந்தவெளி மதுபாராக மாறிவிடுகிறது.

    நள்ளிரவு வரை அங்கு குடிமகன்கள் மது அருந்துகின்றனர். குடிபோதைக்காரர்கள் கொண்டு வரும் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் அங்கு சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. காலையில் பார்க்கும் போது அந்த இடம் முழுவதும் காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில், பாக்கெட் என பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது.

    சமீப காலமாக இங்கு நிறுத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நூற்றுக்கணக்கான லாரிகள் நின்றிருந்த இடத்தில் 50-க்கும் குறைவான லாரிகள் தான் நிற்கிறது. இவையும் உள்ளூர் லாரிகள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் லாரி ஓட்டுனர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. குடிமகன்கள் லாரி ஓட்டுனர்களுடன் தகராறில் ஈடுபட்டு, சிலர் பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதன் மறுபுறம் ஆரோவில் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது

    பெயரளவில் 2 மாநில போலீசாரும் குடிமகன்களை மிரட்டி அனுப்பி வைக்கின்றனர். இரவில் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெரும் கூட்டம் குடித்துக் கொண்டிருக்கிறது. இங்கு வரும் குடிமகன்களுக்கு திறந்த வெளி காற்றும், விளக்கு வசதியும் இலவசமாக கிடைக்கிறது. இதனால் எத்தனை முறை விரட்டினாலும் குடிமகன்கள் மீண்டும் படையெடுக்கின்றனர்.

    லாரி முனையம் தொடர்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் இந்த பகுதியில் சுற்றுசுவருடன் கூடிய பெரிய விளையாட்டு திடல் அமைக்கலாம் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    கோரிமேடு இன்ஸ்பெக்டர் பால முருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் லாரி முனைய பகுதியில் மாலையில் ரோந்து சென்ற போது குடிமகன்கள் அங்கிருந்து தப்பி ஒடினர். அவர்களில் சிக்கியவர்களை பிடித்த போலீசார், குடிமக்களால் அங்கு போடப்பட்டுள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டனர்.

    ஒரு மணி நேரத்துக்கு மேலாக போதை தெளியும் வரையில் குடிமகன்களை போலீசார் குப்பைகளை அள்ள வைத்தனர். 3 சாக்கு பைகள் நிறைய குப்பைகளை அள்ளிய குடிமகன்கள், இனி மேல் இங்கு குடிக்க வரமாட்டோம் விட்டுவிடுங்கள் என கெஞ்சினர். அடுத்த முறை சிக்கினால் வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் இரவில் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் முனையத்தில் வழக்கம் போல் அமர்ந்து குடித்தனர். வார இறுதி நாட்களில் இங்கு வரும் குடிமகன்களில் எண்ணிக்கை கட்டுக்கடங்காது செல்கிறது.

    • இருசக்கர வாகனத்தை கடந்த மே மாதம் 14-ந் தேதி இரவு மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றதாக புகார் அளித்தார்.
    • குறுகிய காலத்தில் புலன் விசாரணை முடித்து, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் குறிஞ்சிநகர் விரிவு 3-வது வீதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 26). இவர் தனது வீட்டுக்கு முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை கடந்த மே மாதம் 14-ந் தேதி இரவு மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றதாக தெற்கு போலீஸ் நிலையத்தில் மறுநாள் புகார் அளித்தார்.

    அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் கூத்தாண்டனூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21), அனுபிள்ளை தாங்கி பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (20) ஆகியோரை கடந்த மாதம் 16-ந் தேதி கைது செய்து மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர்.இந்த வழக்கில் குறுகிய காலத்தில் புலன் விசாரணை முடித்து, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்குப்பதிவு செய்யப்பட்ட 28 நாளில் கோர்ட்டு விசாரணை முடிந்து வழக்கில் சம்பந்தப்பட்ட விக்னேஷ், ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.2 மாஜிஸ்திரேட்டு பழனிக்குமார் உத்தரவிட்டார்.

    குறுகிய காலத்தில் விசாரணையை முடித்து கோர்ட்டில் தண்டனை பெற்றுக்கொடுத்த போலீஸ் தனிப்படையினரான சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், கோர்ட்டு பணி முதல்நிலை காவலர் நாகராஜ் குட்டி, பெண் காவலர் மணிமேகலை, முதல்நிலை காவலர் அனித்ராஜ் ஆகியோருக்கு வெகுமதி வழங்கி மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 38), கூலித்தொழிலாளி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • 1 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர், கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சத்யா நகர் பகுதியில் சாலையை கட க்கும்போது, எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி, கொளத்தூர் சின்னமேட்டூரை சேர்ந்த கருப்பண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த புல்லட், செல்வம் ஓட்டிவந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் செல்வம் பலத்த காயமடைந்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து சங்ககிரி போலீஸ் எஸ்.ஐ. சுதாகரன் வழக்கு பதிவு செய்து சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விபத்துக்கு காரணமான கருப்பண்ண னுக்கு 1 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல்.

    கம்பாலா:

    உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகி றார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.

    அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

    இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

    ஏற்னவே உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது ஆகிய வற்றுக்கு இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

    அவர் கூறும்போது, இந்த மசோதா நமது தேவாலய கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் நமது பாரம்பரிய குடும்ப விழுமியங்கள், பன்முக கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை பாதுகாக்க ஒரு விரிவான மற்றும் மேம்பட்ட சட்டத்தை நிறுவுவதாகும் என்றார்.

    இந்த மசோதா பாராளுமன்றததில் 389 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. தற்போது மசோதா, ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இதற்கிடையே ஓரின சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். இது வெறுக்கத்தக்க சட்டம் என்று தெரிவித்தனர்.

    மனித உரிமை ஆர்வலர் சாரா கசண்டே கூறும்போது, "உகாண்டாவின் வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள். வெறுப்பை ஊக்குவிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முயல்கிறது" என்றார்

    ஓரினச் சேர்க்கை ஆர்வலர் எரிக் நடாவுலா கூறும் போது, "பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல். எங்கள் எம்.பி.க்களின் தீர்ப்பு வெறுப்பு மற்றும் ஓரினச் சேர்க்கையால் மழுங்கடிக்கப்பட்டது பயமாக இருக்கிறது. இந்தக் கொடூர சட்டத்தால் யாருக்கு லாபம்?" இந்த மசோதா சட்டமாக கையொப்பமிடப்பட்டால், "கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமை, சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டான உரிமைகள் உள்பட பல அடிப்படை உரிமைகளை மீறும்" என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    • பாலியல் வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டது
    • மேலும் ரூ.1 லட்சத்து 10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம் மகன் லட்சுமணன்(வயது22). இவர் கடந்த ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து லட்சுமணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது.

    இதில் குற்றவாளி லட்சுமணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு அரசு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் லட்சுமணன் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜரானார்.


    • ஆத்திரம் அடைந்த மைதீன் அப்துல்காதர் ஜெய்லானியை கத்தியால் குத்தினார்.
    • கொலை வழக்கு பதிவு செய்து மைதீனை பேட்டை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர் ஜெய்லானி (வயது 33). இவர் கடந்த 14-6-2015-ம் ஆண்டு தனது மனைவி மற்றும் நண்பரான யாசர்அராபத் ஆகியோருடன் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது டி.வி.யை அதிக அளவு சத்தம் வைத்து பார்த்தாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த மைதீன் என்ற முகமது மைதீன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மைதீன் கத்தியால் அப்துல்காதர் ஜெய்லானியை சராமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 17-6-2015-ம் ஆண்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மைதீனை கைது செய்தனர். இதுகுறித்த விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    கொலை வழக்கில் கைதான மைதீனுக்கு 15 ஆண்டுகள் 1 மாதம் சிறைதண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெசிந்தாமார்ட்டின் உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.

    • மேலக்காவேரி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதியது.
    • அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் அருண்மொழி (வயது 23).

    கும்பகோணம் செக்கடி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்.

    கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி அருண்மொழி தனது நண்பரை பார்ப்ப தற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார்.

    அப்போது மேலக்காவேரி அருகே வந்து கொண்டி ருந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன், அருண்மொழியின் மோட்டார் சைக்கிளில் மோதி அவரை கீழே தள்ளினார்.

    மேலும் அவரை மணிகண்டன் தாக்கினார்.

    இதுகுறித்து அருண்மொழி கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதித்துறை நடுவர் எண் .1-ல் நடைபெற்று வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மோட்டார் சைக்கிளால் மோதி அருண்மொழியை கீழே தள்ளி தாக்கிய மணிகண்டனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.

    • சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு
    • வீடியோவை பார்த்த பலரும் `கிராமப்புற இந்தியாவில் ஆணாதிக்கம்' என விமர்சித்துவருகின்றனர்.

    பாட்னா:

    பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு கிராம பஞ்சாயத்தில் வழங்கிய வினோதமான தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    5 வயது சிறுமியை ஒரு நபர் சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி அருகிலுள்ள கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது வெளியில் தெரியவரவே, உள்ளூர்வாசிகள் சிலர் அந்த நபரை, கிராம பஞ்சாயத்து முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினர். ஆனால் அங்கிருந்த பெரியவர்கள் சிலர் அந்த நபர் மீதான குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தாங்களாகவே ஒரு முடிவெடுத்தனர்.

    அதாவது சிறுமியை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்றது தவறு என கூறி அந்த நபரை 5 தோப்புக்கரணம் போடுமாறு தீர்ப்பளித்திருக்கின்றனர். அந்த நபரும் அவ்வாறே தோப்புக்கரணம் போட்டிருக்கின்றார். அப்போது அங்கிருந்தவர்களில் யாரோ இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். வீடியோ வைரலாகி, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வீடியோவை பார்த்த பலரும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். `கிராமப்புற இந்தியாவில் ஆணாதிக்கம்' எனப் பலரும் விமர்சித்துவருகின்றனர். முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சிலர் குறிப்பிட்டு, இந்த குற்றம் தண்டிக்கப்படாமல் இருக்க மாநில அரசு அனுமதிக்கப்போகிறதா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. கவுரவ் மங்ளா கூறி உள்ளார்.

    • குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்க தலிபான்கள் முடிவு செய்தனர்.
    • ஒவ்வொருவருக்கும் 21 கசையடி முதல் 39 கசையடி வரை கொடுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் சட்ட திட்டங்களையும் மாற்றியுள்ளனர்.

    ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள தலிபான்கள் 1990ம் ஆண்டுகளில் கடைபிடித்த அதே வகையான தண்டனை முறையை மீண்டும் அமல்படுத்தி உள்ளனர்.

    அதன்படி ஆப்கானிஸ்தானில் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்க தலிபான்கள் முடிவு செய்தனர்.

    குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் நிகழ்ச்சியை காண வருமாறு முஜாகிதீன் அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் பழங்குடி தலைவர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு லோகார் மாகாண கவர்னர் அலுவலகம் அறிவிப்பு விடுத்தது.

    அதன்படி குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் 21 கசையடி முதல் 39 கசையடி வரை கொடுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    • சபரிமலைக்கு மாலை போடக்கூடாது என பெற்றோர் கண்டித்ததால் துறைமுக ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • நீண்டநேரம் கதவு திறக்காததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    கடலூர்:

    மயிலாடுதுறை அருகே உள்ள மல்லிகொல்லையை சேர்ந்தவர் சேகர். அவரது மகன் சீலன் (வயது 23). இவர் பரங்கிப்பேட்டை கீைரக்கார தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி பரங்கிப்பேட்டை துறைமுக பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று தனது பெற்றோரிடம் செல்போ னில் நான் சபரிமலைக்கு மாலைபோட போகிறேன் என்று கூறி னார். அதற்கு பெற்றோர் இந்த ஆண்டு மாலை போட வேண்டாம். அடுத்த ஆண்டு சபரிமலைக்கு செல்லலாம் என தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த சீலன் தனது அறைக்கு வந்தார்.

    அங்கு நைலான் கயிற்றால் மின்விசிறி யில் தூக்குபோட்டு தற்கொ லை செய்தார். நீண்டநேரம் கதவு திறக்காததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுபற்றி பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ேபாலீசார் அறைகதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் தூக்கில் தொங்கி ய சீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பரங்கிப்பே ட்டை விரைந்தனர்.

    • மதுரை சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி விடுதலை செய்யப்பட்டார்.
    • இவரது தண்டனை காலம் வருகிற 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி வரை உள்ளது.

    மதுரை

    மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் மணி என்ற நயினார் (வயது 64). இவர் ஒரு வழக்கில் கைதாகி 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவருக்கு 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி ஜாமீன் கிடைத்தது. ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இருந்த போதிலும் அவருக்கான ஆயுள் தண்டனையை கோர்ட்டு உறுதி செய்தது.

    இதனைத் தொடர்ந்து மணி என்ற நயினார் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ந் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரது தண்டனை காலம் வருகிற 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி வரை உள்ளது.

    மதுரை மத்திய சிறையில் நயினார் 3 ஆண்டு, 7 மாதம் வரை சிறை தண்டனை அனுபவித்து வந்தார். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவரை விடுதலை செய்வது என்று சிறை நிர்வாகம் முடிவு செய்தது. 60 வயதுக்கு மேல் இருக்கும் சிறைவாசிகள் சில குறிப்பிட்ட வழக்குகளில் 50 சதவீதம் தண்டனை அனுபவித்து இருந்தால் அவரை விடுதலை செய்யலாம் என்ற அடிப்படையில் மணி என்ற நயினார் மதுரை மத்திய ஜெயலலிதா இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

    • தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டியதால் நடவடிக்கை
    • அதிகாரிகள் எச்சரிக்கை

    வேலூர்:

    சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வேலூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலர் குப்பைகளை கொட்டி க வருகின்றனர். குறிப்பாக கொணவட்டம், சதுப்பேரி பகுதிகளில் சர்வீஸ் சாலையோரம் கோழிக்கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த குழுவினர் பல்வேறு இடங்களில் கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கொணவட்டம் பகுதியில் சர்வீஸ் சாலையோரம் ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து குப்பைகளை கொட்டினார். அதை பார்த்த கண்காணிப்பு குழுவினர் அவர் மீது வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை அழைத்து விசா ரித்தனர். விசாரணையில், அவர் கொணவட்டம் பகுதியில் கோழி இறைச்சி வியாபாரம் செய்வது தெரியவந்தது. அந்த நபரிடம் கொட்டிய குப்பைகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கொட்டிய குப்பைகளை அந்த நபர் அகற்றினார்.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாராவது குப்பைகள் கொட் டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ×