search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரிக்கு நூதன தண்டனை
    X

    வியாபாரிக்கு நூதன தண்டனை

    • தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டியதால் நடவடிக்கை
    • அதிகாரிகள் எச்சரிக்கை

    வேலூர்:

    சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வேலூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலர் குப்பைகளை கொட்டி க வருகின்றனர். குறிப்பாக கொணவட்டம், சதுப்பேரி பகுதிகளில் சர்வீஸ் சாலையோரம் கோழிக்கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த குழுவினர் பல்வேறு இடங்களில் கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கொணவட்டம் பகுதியில் சர்வீஸ் சாலையோரம் ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து குப்பைகளை கொட்டினார். அதை பார்த்த கண்காணிப்பு குழுவினர் அவர் மீது வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை அழைத்து விசா ரித்தனர். விசாரணையில், அவர் கொணவட்டம் பகுதியில் கோழி இறைச்சி வியாபாரம் செய்வது தெரியவந்தது. அந்த நபரிடம் கொட்டிய குப்பைகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கொட்டிய குப்பைகளை அந்த நபர் அகற்றினார்.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாராவது குப்பைகள் கொட் டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×