search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை
    X

    வாலிபரை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை

    • மேலக்காவேரி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதியது.
    • அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் அருண்மொழி (வயது 23).

    கும்பகோணம் செக்கடி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்.

    கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி அருண்மொழி தனது நண்பரை பார்ப்ப தற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார்.

    அப்போது மேலக்காவேரி அருகே வந்து கொண்டி ருந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன், அருண்மொழியின் மோட்டார் சைக்கிளில் மோதி அவரை கீழே தள்ளினார்.

    மேலும் அவரை மணிகண்டன் தாக்கினார்.

    இதுகுறித்து அருண்மொழி கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதித்துறை நடுவர் எண் .1-ல் நடைபெற்று வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மோட்டார் சைக்கிளால் மோதி அருண்மொழியை கீழே தள்ளி தாக்கிய மணிகண்டனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.

    Next Story
    ×