என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
28 நாளில் தண்டனை பெற்று கொடுத்த போலீஸ் தனிப்படையினருக்கு பாராட்டு
- இருசக்கர வாகனத்தை கடந்த மே மாதம் 14-ந் தேதி இரவு மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றதாக புகார் அளித்தார்.
- குறுகிய காலத்தில் புலன் விசாரணை முடித்து, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் குறிஞ்சிநகர் விரிவு 3-வது வீதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 26). இவர் தனது வீட்டுக்கு முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை கடந்த மே மாதம் 14-ந் தேதி இரவு மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றதாக தெற்கு போலீஸ் நிலையத்தில் மறுநாள் புகார் அளித்தார்.
அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் கூத்தாண்டனூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21), அனுபிள்ளை தாங்கி பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (20) ஆகியோரை கடந்த மாதம் 16-ந் தேதி கைது செய்து மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர்.இந்த வழக்கில் குறுகிய காலத்தில் புலன் விசாரணை முடித்து, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட 28 நாளில் கோர்ட்டு விசாரணை முடிந்து வழக்கில் சம்பந்தப்பட்ட விக்னேஷ், ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.2 மாஜிஸ்திரேட்டு பழனிக்குமார் உத்தரவிட்டார்.
குறுகிய காலத்தில் விசாரணையை முடித்து கோர்ட்டில் தண்டனை பெற்றுக்கொடுத்த போலீஸ் தனிப்படையினரான சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், கோர்ட்டு பணி முதல்நிலை காவலர் நாகராஜ் குட்டி, பெண் காவலர் மணிமேகலை, முதல்நிலை காவலர் அனித்ராஜ் ஆகியோருக்கு வெகுமதி வழங்கி மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்