search icon
என் மலர்tooltip icon

    ஆப்பிரிக்கா

    • புறப்பட்ட சிறிதுநேரத்தில் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.
    • முதல்கட்ட விசாரணையில் 100 பேர் செல்லக்கூடிய படகில் சுமார் 300 பேர் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பாங்குய்:

    மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா என்ற ஆறு பாய்கிறது. அங்குள்ள மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டுமெனில் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல முடியும்.

    இதற்காக அவர்கள் படகு போக்குவரத்தையே பெரிதும் நம்பி உள்ளனர். எனவே அந்த ஆற்றில் ஏராளமான படகுகள் சவாரி செய்கின்றன. ஆனால் அவ்வாறு செல்லும்போது அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

    இந்தநிலையில் பாங்குய் நகரில் உள்ள ஒரு உள்ளூர் தலைவர் இறந்து போனார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாங்குய் நகரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் படகில் புறப்பட்டனர்.

    புறப்பட்ட சிறிதுநேரத்தில் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் அந்த படகில் இருந்த குழந்தைகள், பெண்கள் என பலர் ஆற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.

    இதனையறிந்த உள்ளூர் மீனவர்கள் உடனடியாக தங்களது மீன்பிடி படகு மூலம் மீட்க முயன்றனர். இதற்கிடையே மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டு மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு சென்றனர்.

    எனினும் இந்த சம்பவத்தில் 58 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் 100 பேர் செல்லக்கூடிய படகில் சுமார் 300 பேர் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாரம் தாங்காமல் அந்த படகு ஆற்றில் கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றபோது படகு கவிழ்ந்து 58 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், மற்றொரு ரஷிய வீரரான காரென் கச்சனோவுடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 3-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.

    கச்சனோவ் காலிறுதிக்கு முன்னேறினார்.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்தது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் பெரெட்டினி சாம்பியன் பட்டம் வென்றார்.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, ஸ்பெயின் வீரர் ராபர்டோவுடன் மோதினார்.

    இதில் பெரெட்டினி 7-5, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் பெரெட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, அர்ஜெண்டினா வீரர் மரியானோவுடன் மோதினார்.

    இதில் பெரெட்டினி 6-7 (4-7) என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட பெரெட்டினி அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதியில் தோற்றனர்.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, ஆஸ்திரியாவின் லூகாஸ் மெய்ட்லர், அலெக்சாண்டர் ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 5-7 என முதல் செட்டை இழந்தது. 2-வது செட்டை 6-3 என கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் யூகி பாம்ப்ரி ஜோடி 7-10 என போராடி தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, பிரேசிலின் ரபேல் மேட்டீஸ், கொலம்பியாவின் நிகோலஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 7-6 (7-5) என முதல் செட்டை கைப்பற்றியது. 2-வது செட்டை 6-7 (1-7) என இழந்தது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் யூகி பாம்ப்ரி ஜோடி 10-7 என போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, கிரீசின் சிட்சிபாஸ், நெதர்லாந்தின் ஸ்டீவன்ஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என எளிதில் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், இத்தாலியின் லாரன்சோ சொனேகோவுடன் மோதினார்.

    முதல் செட்டை சுமித் நாகல் 6-1 என எளிதில் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட சொனேகா அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார்.
    • பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல்வேறு ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு நகரமான குரிகாவில் உள்ள பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் 280-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தி சென்றனர். மாணவர்களை மீட்க உள்ளூர் மக்கள் பயங்கரவாதிகளுடன் போராடியுள்ளனர்.

    ஆனால் அவர்களை துப்பாக்கியைக் காட்டி பயங்கரவாதிகள் மிரட்டினர். இதில் ஒருவர் சுடப்பட்டதாகவும் தெரிகிறது. மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார். கடந்த ஜனவரி மாதம் இப்பள்ளியின் முதல்வரைக் கொன்றதாகவும், அவரது மனைவியைப் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து நைஜீரியா அதிபர்போலா டினுபு கூறும்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றார். பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்த பிறகு கடத்தியவர்களை விடுவிக்கிறார்கள்.

    கடந்த 2014-ம் ஆண்டு நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பித்தக்கது.

    • உறுப்பினர்கள் அனைவரும் “டம்சர், டம்சர்” (dumsor, dumsor) என கோஷமிட்டனர்
    • கட்டணம் செலுத்தாதவர் யார் என்றாலும் மின்சாரம் நிறுத்தப்படும் என்றது மின் நிறுவனம்

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு, கானா (Ghana). இதன் தலைநகரம் அக்ரா (Accra).

    அந்நாட்டு பாராளுமன்றத்தில் அதிபர் நானா அகுஃபோ–அட்டோ (Nana Akufo-Addo) நாட்டு மக்களுக்கு உரையாற்றி கொண்டிருந்தார்.

    அப்போது பாராளுமன்றத்தில் மின்சாரம் தடைபட்டது. உடனடியாக மின்சாரம் திரும்பும் என நினைத்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த நிலையில், மின்சாரத்தடை நீடித்தது.

    இதையடுத்து அங்கிருந்து உறுப்பினர்கள் அனைவரும் அக்கன் (Akan) மொழியில் "மின்சார தடை" எனும் பொருள்பட "டம்சர், டம்சர்" (dumsor, dumsor) என கோஷமிட தொடங்கினர்.

    சில நிமிடங்கள் கடந்ததும், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த சபைக்கு மட்டும் ஜெனரேட்டர் உதவியுடன் மின்சார சேவை மீண்டும் தொடர்ந்தது.


    ஆனால், மின்சார சேவை பாராளுமன்றத்தின் பிற பகுதிகளுக்கு வரவில்லை. இதனால் லிஃப்டில் பயணித்த பல உறுப்பினர்கள் அதிலேயே சிக்கிக் கொள்ள நேர்ந்தது.

    "பாராளுமன்ற அலுவலகம் செலுத்த வேண்டிய மின்கட்டண பாக்கியை வசூலிக்க பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டணத்தை செலுத்தாததால் மின் தொடர்பை துண்டித்தோம். மின் தடை என்பது கட்டணம் செலுத்தாத அனைவருக்கும்தான். கட்டணம் செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் மின்சார சப்ளை துண்டிக்கபப்டும்" என எலக்ட்ரிசிட்டி கம்பெனி ஆஃப் கானா (ECG) எனும் அந்நாட்டு மின்சார நிறுவன செய்தித் தொடர்பாளர் வில்லியம் போடெங் (William Boateng) தெரிவித்தார்.

    கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அந்நாட்டின் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வாங்க கானா அரசால் முடியவில்லை.

    நாளின் பிற்பகுதியில் கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்திய பிறகே மின் தொடர்பு மீண்டும் வழங்கப்பட்டது.

    கானா அரசு மின்சார துறைக்கு $1.8 மில்லியன் அளவிற்கு கட்டண பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளமையை நீட்டிக்க எஜியாவோ உதவுவதாக நம்பப்படுகிறது
    • கழுதை தோலுக்கு அதிக விலை கிடைப்பதால் திருட்டும் அதிகரித்துள்ளது

    சீனாவில், கழுதை தோலில் உள்ள ஜெலட்டின் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் ஒரு அரிய வகை பண்டைய மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளதால் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் கழுதைகள் களவாடப்படுவது அதிகரித்துள்ளது.

    உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், இளமையை நீட்டிக்கவும், தூக்கமின்மையை போக்கவும், குழந்தை பாக்கியத்தை அதிகரிக்கவும் உதவும் "எஜியாவோ" (Ejiao) எனும் மருந்திற்காக, கழுதைகளின் தோல்களை வேக வைத்து, அதில் பல பொருட்களை சேர்த்து பொடியாகவும், மாத்திரையாகவும், மருந்தாகவும் சீனாவில் விற்கப்படுகிறது.

    இந்திய கிராமங்களில் கோழி, ஆடு, மாடு, எருமை வளர்ப்பில் பலர் ஈடுபடுவது தொன்று தொட்டு நடைபெறுகிறது. அதே போல் பல ஆப்பிரிக்க நாடுகளில் குடிநீர், உணவு, பெரும் சுமை தூக்குவது உள்ளிட்ட பல வேலைகளுக்கு கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    உலகின் 53 மில்லியன் கழுதைகளில் 3ல் 2 பங்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளன.

    கழுதை தோலுக்கு அதிக விலை கிடைப்பதால், அவற்றை பலர் களவாடுவது அதிகரித்துள்ளது.

    திருடு போகும் கழுதைகளின் எலும்புக்கூடுகள் ஆங்காங்கே கண்டறியப்படுவதாக கழுதைகளின் உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.


    1990களில் சீனாவில் 11 மில்லியனாக இருந்த கழுதைகளின் எண்ணிக்கை 2021 காலகட்டத்தில் 2 மில்லியனுக்கும் கீழே குறைந்து விட்டது. இதையடுத்து, சீன நிறுவனங்கள், தங்கள் தோல் தேவைக்கு ஆப்பிரிக்க நாடுகளை சார்ந்துள்ளன.

    தற்போது வரை எஜியாவோ உற்பத்திக்கு எத்தனை கழுதைகள் களவாடப்பட்டன எனும் சரியான புள்ளிவிவரம் வெளியிடப்படவில்லை.

    2013ல் $3.2 பில்லியனாக இருந்த எஜியாவோவிற்கான சந்தை மதிப்பு, 2020ல் $7.8 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது மேலும் உயர்ந்தால், கழுதை இனத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், கழுதை தோல் ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என ஆப்பிரிக்க நாடுகளில் விலங்கின ஆர்வலர்கள் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

    • தாயும் மகளும் பயணித்த எகானமி வகுப்பில் வேறு பயணிகள் யாரும் இல்லை.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள செஷல்ஸ் தீவில் இருந்து சுவிட்சர்லாந்து செல்வதற்காக ஹிம்மி ஷேத்தல் என்ற பெண்ணும் அவரது மகளும் விமானத்தில் ஏறி உள்ளனர்.

    அந்த விமானத்தில் அவர்களை தவிர முதல் வகுப்பில் 4 பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர். தாயும் மகளும் பயணித்த எகானமி வகுப்பில் வேறு பயணிகள் யாரும் இல்லை. இதனால் தாயும் மகளும் மட்டுமே விமான ஊழியர்களுடன் ஜாலியாக பாட்டுபாடி, நடனமாடி உள்ளனர். மேலும் அதனை வீடியோ எடுத்து தங்களது வலைதள பக்கத்தில் பதிவிட்டனர்.

    மேலும் பணிப்பெண்கள் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பல இடங்களுக்கும் தங்களை அழைத்து சென்றதாக ஹிம்மி ஷேத்தல் கூறி உள்ளார். இந்த பயணம் தங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

    அவரது வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ×