search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public petition"

    • நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மேயர் சரவணன்,துணை மேயர் ராஜு, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மேயர் சரவணன்,துணை மேயர் ராஜு, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    மேலப்பாளையம் மண்டலம் 51-வது வார்டுக்குட்பட்ட திருநகர் மக்கள் நல சங்கத்தினர் அளித்த மனுவில், திருநகரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அம்ருத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பூங்காவில் மின்சார கேபிள் கட் ஆகி உள்ளது.

    இதனால் அங்கு மின்கம்பங்களில் விளக்கு எரியவில்லை. அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கூறி யிருந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    51-வது வார்டு கவுன்சிலர் சகாய ஜூலியட் மேரி அளித்த மனுவில், மகிழ்ச்சி நகர் பகுதியில் மழை நீர் வடிகால் சேதமடைந்துள்ளது.அவற்றை சீரமைத்து தர வேண்டும். பொறியியல் கல்லூரி குடியிருப்பு பகுதியில் சேதம் அடைந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும். ஜெயில் சிங்க் நகரில் உள்ள ஓடையை சீரமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    நமது நெல்லை இயக்கத்தினர் அளித்த மனுவில், மேலப்பாளையம் மண்டலம் என்.ஜி.ஓ.பி. காலனியில் எரிவாயு தகன மேடை அமைத்து தரவும், தகன மேடைக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    • பாடகசாலை கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 60 பேர் வேலை செய்து வருகிறார்கள்.
    • பணியாளர்களுக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதாக புகார்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் விஷ்ணு தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    பாளை யூனியன் திருவேங்கடநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனர்.

    திருவேங்கடநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாடகசாலை கிராமத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். இங்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 60 பேர் வேலை செய்து வருகிறோம்.

    எங்கள் பகுதியில் இருந்து காலையில் 7.30 மணிக்கு வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு செல்வதற்குள் தாமதமாகி விடுகிறது. அப்போது பணியாளர்களுக்கும் எங்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

    எனவே எங்கள் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இடங்களில் எங்களுக்கு வேலை செய்ய ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    • அரசு வழங்கிய இலவச வீட்டு மனை நிலத்தில் குடியிருந்து வருகின்றனர்.
    • இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்.

    பல்லடம்:-

    பல்லடம் அருகேயுள்ளஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பல்லடம் தாசில்தாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தில், அரசு வழங்கிய இலவச வீட்டு மனை நிலத்தில் குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் பொதுவான காங்கிரீட் ரோட்டை உடைத்து, ரோட்டை ஆக்கிரமித்து அஸ்திவாரம் அமைத்துள்ளார்.

    இதனை தட்டி கேட்டபோது அப்படித்தான் செய்வோம் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்து, பொது ரோட்டை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரணை செய்த அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும் என தெரிவித்தனர்.

    • 237 மனுக்கள் பெறப்பட்டது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது . மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் தலைமை தாங்கி பொதுமக்கள் , மாற்றுத் திறனாளிடம் இருந்து மனுக்களை பெற்றார் .

    கூட்டத்தில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை , கூட்டுறவு கடன் உதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி , கிராம பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர் .

    மொத்தம் 237 மனுக்கள் பெறப்பட்டது . அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவ டிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது .

    கூட்டத்தில் துணை கலெக்டர்கள் சேகர் , தாரகேஸ்வரி, இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    • முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் அடிக்கல் நாட்டினார்
    • பொதுமக்கள் கோரிக்கை மனு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளாக கால்வாய் சீரமைக்க கோரியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் ஆரணி அலுவலகத்தில் எம்.எல்.ஏ விடம் சேவூர்ராமசந்திரன் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    மேலும் ஆரணி எம்.எல்.ஏ நிதியிலிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கி ராட்டினமங்கலம் பகுதியில் புதிய கால்வாய் பணிக்கு ஆரணி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமசந்திரன் பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் மாவட்ட ஐ.டி.விங் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மதுசூதனன் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் செந்தில் இ.பி நகர்குமார் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மனுக்களை பெற்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். 12-வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    12-வது வார்டுக்கு உட்பட்ட மேகலிங்கபுரம் வடக்கு தெருவில் கழிவுநீர் ஓடையை அகலப்படுத்தி இருபுறமும் தடுப்புசுவர் அமைக்க வேண்டும். மேகலிங்கபுரம், உடையார்பட்டி பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றிதிரிகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜ்நகர்-உடையார்பட்டி மெயின்ரோட்டில் பொதுகுடிநீர் குழாய் பயன்படுத்த முடியாதபடி உள்ளது. எனவே அங்கு அடிபம்பு அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    28-வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் கொடுத்த மனுவில், டவுன் கல்லணை மாநகராட்சி தொடக்கப்பள்ளியை சேர்ந்த 250 மாணவ-மாணவிகள் அருகில் உள்ள பாரதியார் மாநகராட்சி பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனால் அங்கு போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே உடனடியாக அங்கு போதிய அடிப்படை வசதிகளை அமைத்து தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    கே.டிசி. நகர் பகுதியை சேர்ந்தவர்கள் முன்னாள் அரசு வக்கீல் அன்பு என்ற அங்கப்பன் தலைமையில் கொடுத்த மனுவில், 37-வது வார்டுக்குட்பட்ட விஷ்வசூர்யாநகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் வாகன காப்பகம் அமைக்க வேண்டும். கே.டி.சி. நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. உடனடியாக பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    9-வது வார்டு பொதுமக்கள் கொடுத்த மனுவில், வார்டுக்குட்பட்ட பாளையங்கால்வாய் பகுதியில் தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் சிறுவர்கள் அதில் விழும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக தடுப்புசுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    • இ-சேவை மையம், நில அளவைபிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

    தேனி :

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம், ஆதார் மையம் மற்றும் அரசு பொது இ-சேவை மையம், நில அளவைபிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மாதாந்திர உதவி–த்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் நிலுவையிலுள்ள மனுக்களின் எண்ணிக்கை, நிலுவையிலுள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்,

    அதற்கான பதிவேடுகள் குறித்தும், அரசு பொது இ-சேவை மையத்தில், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் தொடர்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கை குறித்தும், நில அளவை பிரிவில் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு வேண்டி கடந்த மாதம் மற்றும் நடப்பு மாதம் இணையதளத்தில் வரப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை, நிலுவை யிலுள்ள மனுக்களின் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அரசின் பயன்களை விரைந்து வழங்கிடவும், பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பத்தின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு, உடனடியாக சான்றிதழ்கள் வழங்கிடவும், பட்டா தொடர்பாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

    கோவை கணபதி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமையில் கோவை கணபதி ஸ்ரீலட்சுமி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது-

    எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வர இருப்பதாகவும் அதற்கான கட்டிட பணிகள் விரைந்து நடப்பதாகவும் அறிகிறோம். டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் கோவில்களும், பள்ளிகளும் உள்ள காரணத்தால் இப்பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    கோவை மாவட்ட காதுகேளாதோர் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் 40, 50, 60 வயது வரை உள்ளவர்களுக்கும், காது கேளாதோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு அளிக்கவில்லை. நாங்கள் சுமார் 1000 பேர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என கூறி உள்ளனர். #tamilnews
    சுரண்டை அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பரங்குன்றாபுரம் பொதுமக்கள் தாசில்தாரிடம் அனு கொடுத்துள்ளனர்.
    சுரண்டை:

    சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் பொதுமக்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் நல்லையாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரங்குன்றாபுரத்திலிருந்து கலிங்கப்பட்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதி, பெண்கள் பீடி கடைக்கு செல்கின்ற பகுதி என்பதால், கடையை உடனடியாக அகற்ற வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கடை மூடப்பட்டது. 

    இந்நிலையில் பரங்குன்றாபுரத்திலிருந்து சுரண்டை வரும் ரோட்டில், மரியதாய்புரம் ரோடு பிரிகின்ற இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லையிலிருந்து பரங்குன்றாபுரம், மரியதாய்புரம், லட்சுமிபுரம், அச்சம் குன்றம், கருவந்தா, குறிச்சான்பட்டி,  முதலான கிராமங்களுக்கு செல்கின்ற பொதுமக்கள் பரங்குன்றாபுரம் விலக்கில் இறங்கி நடந்து இப்பகுதிக்கு செல்லுகின்றனர். 

    இந்நிலையில் பரங்குன்றாபுரம், மரியதாய்புரம் ரோடு பிரியக்கூடிய இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் இது பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கும். நடந்து செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும். எனவே கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதில் ம.தி.மு.க. மாவட்ட மகளிரணி செயலாளர் தேனம்மாள், சுதா, ராணி, மகேஸ்வரி, பாப்பா, ரீகன், அமிர்தராஜ், பொன்னுத்துரை, குமாரவேல் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    கரூர் மாவட்டம் அருகே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி குமரேசன், ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி, மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அரவக்குறிச்சி தாலுகா வல்லா குளத்துப்பாளையம், வெள்ளியம்பாளையம், வளையபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்து மனுவில், எங்கள் பகுதி வழியாக ஓடும் நொய்யல் ஆறு மற்றும் அதன் கிளைவாய்க்கால்களில் திருப்பூரில் இருந்து  சாயக்கழிவு நீர் சேர்ந்து வருவதால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது.

    இந்த நிலையில் அத்திப்பாளையம் அருகேயுள்ள பகுதியில் சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்படும் தார் கலவை செய்யும் ஆலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்தால் காற்று மாசுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆலை அமைப்பதற்கு அனுமதியை வழங்க கூடாது  என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    கரூர் அருகே ஜெகதாபி ஊராட்சி மோளகவுண்டனூரை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இந்த நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டிருப்பதாலும், ஊரில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத சூழல் உள்ளதாலும் கடந்த சில மாதங்களாக குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றோம். எனவே இதனை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதேபோல தமிழக மக்கள் முன்னேற்ற கழக கரூர் மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கொடுத்த மனுவில், குடும்பர், பண்ணாடி, தேவேந்திரகுலத்தார் உள்ளிட்ட 7 பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும். எனவே அதனை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் நகரில் சமூக நல்லிணக்கம் ஏற்படும் வகையில் அரசு சார்பில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என ஆதிதமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முல்லையரசு உள்ளிட்டோர் மனு கொடுத்தனர்.  
    கடவூர் வாழ்வார் மங்கலம் கிராமமக்கள், மக்கள் பாதை அமைப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், நீர்நிலைகளை  பாதுகாக்கும் பொருட்டு வாழ்வார் மங்கலத்திலுள்ள ஏரியை தூர்வாரிபனை விதைகளை நட்டு வருகிறோம். இந்த நிலையில் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரவக்குறிச்சி தாலுகா துக்காச்சி புதூர் மக்கள் அளித்த மனுவில், நொய்யல் ஆற்றை ஒட்டி குடியிருந்து வரும் எங்களது வீடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளனர். எனவே எங்களுக்கு குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தினர் கொடுத்த மனுவில், கரூரிலுள்ள 125 ஆண்டு பழமையான சி.எஸ்.ஐ. தேவாலயத்தை சுற்றிலும் சிலர் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகைகளை வைக்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். #tamilnews
    வீசாணம் ஊராட்சியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட கடகால்புதூர், ஒட்டக்குளம்புதூர், வீசாணம், மேற்கு தோட்டம், அருந்ததியர் தெரு, பால கருப்பணார் தெரு, வீனஸ்காலனி, சிவாஜி நகர், ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் காலனி பகுதியில் சுமார் 3,500 பேர் வசித்து வருகிறோம்.

    எங்கள் பகுதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 10 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு 10 குடம் குடிநீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது ஒரு மாதம் ஆகியும் குடிநீர் வரவில்லை. எனவே ஒரு குடம் குடிநீரை ரூ.7 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

    குறிப்பாக மேற்கு தோட்டம், ஜே.ஜே.நகர், சிவாஜி நகர், வீனஸ் காலனி, பாலகருப்பணார் தெரு, திருவள்ளுவர் காலனி பகுதிகளுக்கு நீண்ட நாட்களாக குடிநீர் வருவது இல்லை. எனவே வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர். 
    சீரான முறையில் தண்ணீர் வழங்கக் கோரி, வீசாணம் மக்கள், நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.
    நாமக்கல்:

    சீரான முறையில் தண்ணீர் வழங்கக்கோரி, வீசாணம் மக்கள், நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல்லை அடுத்த, வீசாணம் ஊராட்சியில், 700 குடியிருப்புகள் உள்ளன. வீசாணம், கடக்கால் புதூர், ஒட்டக் குளம்புதூர், ஆதிதிராவிடர் தெரு, கிழக்குச்சாலை, தேவேந்திர குலதெரு, அருந்ததியர் தெரு, மேற்குத்தோட்டம், பால கருப்பணார் தெரு, வீனஸ் காலனி, சிவாஜி நகர், ஜெ.ஜெ.நகர், திருவள்ளுவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில், 3,500 பேர் வசிக்கின்றனர்.

    இந்நிலையில் இரண்டு மாதங்க ளுக்கு முன்பு 10 நாட்களுக்கு ஒரு முறை குடும்பத்திற்கு, 10 குடம் தண்ணீர் வந்தது. தற்போது ஒரு மாதமாக தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி உபயோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதியினர், நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்துகின்றனர். ஆனால், மேற்கு தோட்டம், பாலகருப்பணார் நகர், ஜெ.ஜெ.,நகர், சிவாஜி நகர், வீனஸ் காலனி, திருவள்ளுவர் காலனி ஆகிய பகுதிகளில் கடந்த, மூன்றாண்டுகளாக தண்ணீர் வருவது இல்லை. தங்குதடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    ×