search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namakkal Collector"

    • மும்பையில் மரக்கன்று நடுவது, பிச்சை பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது போன்ற சமூக தொண்டாற்றி வந்தார்.
    • தான் பிச்சை பெற்ற நிவாரண பணத்தை கொரோனா நிதி, இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பிச்சையெடுப்பவர்கள், 'ஐயா தர்மபிரபு ஏதாவது தர்மம் பண்ணுங்க' என்று யாசகம் பெறுவது வழக்கம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் தனக்கு கிடைத்த பணத்தை முதலமைச்சர் நிவாரணநிதிக்கு அனுப்பி தர்மபிரபுவாக திகழ்கிறார்.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 72). பிச்சைக்காரரான இவர், கடந்த 1980-ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். அங்கு சலவை தொழில் செய்து கொண்டே யாசகம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவரது மனைவி சரஸ்வதி 24 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர்.

    தனது 3 பிள்ளைகளை கரை சேர்த்த பூல்பாண்டி முழு நேர பிச்சைக்காரர் ஆனார். மும்பையில் மரக்கன்று நடுவது, பிச்சை பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது போன்ற சமூக தொண்டாற்றி வந்தார். மேலும் தான் பிச்சை பெற்ற நிவாரண பணத்தை கொரோனா நிதி, இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் தான் பிச்சை பெற்றதன் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரம் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் கூறுகையில், யாசகம் பெறுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை நான் முழுவதும் வைத்துக் கொள்வதில்லை. ஓரளவு பணம் சேர்ந்ததும் அதை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவேன். மேலும் பள்ளிகளுக்கும் நன்கொடை வழங்கி வருகிறேன்.

    தற்போது முதலமைச்சர் நிவாரணநிதிக்கு பணம் வழங்குவற்தகாக வந்துள்ளேன். வாழ்க்கையை நடத்த ஓரளவுக்கு பணம் இருந்தால் போதும். மிச்சப்பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறோம்? மிகவும் சிரமப்பட்ட காலத்தில் குடும்பம் நடத்துவதற்காக யாசகம் பெற்றேன். தற்போது எனக்காகவும், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்பதற்காகவும் யாசகம் பெற்று அதை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன் என்றார்.

    பின்னர்தான் கொண்டு வந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படி நாமக்கல் கலெக்டர் ஸ்ரோயா சிங்கிடம் வழங்கினார்.

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 702 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. கொல்லிமலையில் நடந்த முகாமை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் தொடர்ச்சியாக 1.11.2021 முதல் 30.11.2021 வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணியின் போது, 1.1.2022 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் எனவும், 13, 14, 27 மற்றும் 28-ந் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் 702 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், அசக்காட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமைஸ) நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    எருமப்பட்டி அரசுபள்ளிகளில் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளும் உயர்கல்வி பயில தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சமூக இடைவெளியுடன் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்தார். பிளஸ்-2 படிக்கும் மாணவிகளின் வருகை பதிவேட்டை பார்வையிட்ட கலெக்டர், பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவிகளின் விவரங்களைகேட்டறிந்தார்.

    பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளும் உயர்கல்வி பயில தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேலும் பள்ளிக்கு வராத மாணவிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று மீண்டும் அவர்கள் பள்ளிக்கு வந்து பாடம் படிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

    பின்னர், எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் உணவின் தரத்தை கலெக்டர் சாப்பிட்டு ருசி பார்த்தார். மேலும் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக இடைவெளியுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முன்னதாக எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை கிராமத்தில் பருத்தி, நிலக்கடலை, சோளம் ஆகியவை பயிரிடப்பட்டு உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதை வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, வருவாய்த்துறை ஆவணங்கள், வரைபடங்களை ஒப்பிட்டு விவரங்களை சரிபார்த்தார்.

    இந்த ஆய்வுகளின் போது, நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, மாவட்ட கல்வி அலுவலர் ராமன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    நாமக்கல் அருகே விபத்தில் சிக்கிய கணவன், மனைவியை கலெக்டர் ஆசியா மரியம் மீட்டு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள களங்காணியை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 50). இவரது மனைவி நிர்மலா (45). இவர்கள் ரெட்டிப்புதூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் 12.30 மணி அளவில் இருவரும் கடையில் இருந்து ஒரு மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    களங்காணியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், இவர்களது மொபட் மீது மோதியது. இதில் கங்காதரன், நிர்மலா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக ராசிபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை பார்வையிட்ட கலெக்டர் ஆசியா மரியம், சேந்தமங்கலத்தில் நடக்கும் பயிற்சியை பார்வையிட சென்றார்.

    அந்த நேரத்தில் விபத்து நடந்ததால் உடனடியாக மீட்பு பணியை முடுக்கிவிட்ட கலெக்டர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டார். 108 ஆம்புலன்சு வர சற்று தாமதம் ஆனதால், செய்தி மக்கள் தொடர்பு துறையினர் சென்ற ஜீப்பில், படுகாயம் அடைந்த இருவரையும் ஏற்றி, உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

    அங்கு விபத்தில் படுகாயம் அடைந்த கங்காதரன் மற்றும் அவரது மனைவி நிர்மலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சேந்தமங்கலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.
    மார்ச்:

    சேந்தமங்கலம் வண்டிப்பேட்டை அருகே உள்ள புதிய பஸ் நிலையத்தில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அதனை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கொடி அசைத்து தொடங்கி வைத்து உடன் சென்றார்.

    இந்த ஊர்வலம் பெரிய தேர்வீதி, மெயின் ரோடு வழியாக சங்கொலி நிலையம் வரை சென்று பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என்ற துண்டு பிரசுரத்தை வழங்கினர்.

    மேலும் அனைவரும் வாக்களிப்போம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம், கையூட்டு வாங்காமல் வாக்களிப்போம், மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும், உங்களின் எதிர்காலத்தின் குரல் உங்கள் ஓட்டு என்று பல பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    ஊர்வலத்தில் எருமப்பட்டி ரெங்கேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள், சேந்தமங்கலம் மண்டல துணை தாசில்தார் வசந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோ உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ் கண்ணா செய்திருந்தார்.
    கரியபெருமாள்புதூரில் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #jallikattu
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா கரியபெருமாள்புதூரில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருப்பதையும், ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டார்.

    மேலும் ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டு இருப்பதையும், காளைகள் வெளியேறும் இடத்தில் அதன் உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதையும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பாக தேங்காய் நார்கள் மைதானத்தில் பரப்பப்பட வேண்டும் என்றும், தேவையான ஒலிபெருக்கி அமைக்க ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு நடத்த அரசு அறிவுறுத்தி உள்ள விதிமுறைகளின்படி தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தாசில்தார் பிரகாசம் உள்பட அரசு அலுவலர்கள், ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். #jallikattu
    நாமக்கல் அருகே புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்ற கலெக்டர் அவர்களின் பெயர் மற்றும் முகவரி பட்டியலில் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

    இதில் மாவட்டம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தனர். இவர்களில் தகுதியானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சரியாக உள்ளதா ? என கலெக்டர் ஆசியா மரியம் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். நாமக்கல் அருகே உள்ள மாரப்பநாய்க்கன்பட்டி பகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்ற கலெக்டர், குறிப்பிடப்பட்டு உள்ள முகவரியில் அவர் வசிக்கிறாரா?, பெயர் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். இதேபோல் திருச்செங்கோடு அருகே உள்ள உஞ்சனை கிராமத்திலும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் தாசில்தார்கள் உடன் இருந்தனர்.
    சீரான முறையில் தண்ணீர் வழங்கக் கோரி, வீசாணம் மக்கள், நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.
    நாமக்கல்:

    சீரான முறையில் தண்ணீர் வழங்கக்கோரி, வீசாணம் மக்கள், நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல்லை அடுத்த, வீசாணம் ஊராட்சியில், 700 குடியிருப்புகள் உள்ளன. வீசாணம், கடக்கால் புதூர், ஒட்டக் குளம்புதூர், ஆதிதிராவிடர் தெரு, கிழக்குச்சாலை, தேவேந்திர குலதெரு, அருந்ததியர் தெரு, மேற்குத்தோட்டம், பால கருப்பணார் தெரு, வீனஸ் காலனி, சிவாஜி நகர், ஜெ.ஜெ.நகர், திருவள்ளுவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில், 3,500 பேர் வசிக்கின்றனர்.

    இந்நிலையில் இரண்டு மாதங்க ளுக்கு முன்பு 10 நாட்களுக்கு ஒரு முறை குடும்பத்திற்கு, 10 குடம் தண்ணீர் வந்தது. தற்போது ஒரு மாதமாக தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி உபயோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதியினர், நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்துகின்றனர். ஆனால், மேற்கு தோட்டம், பாலகருப்பணார் நகர், ஜெ.ஜெ.,நகர், சிவாஜி நகர், வீனஸ் காலனி, திருவள்ளுவர் காலனி ஆகிய பகுதிகளில் கடந்த, மூன்றாண்டுகளாக தண்ணீர் வருவது இல்லை. தங்குதடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி அனைத்து மதுபானக் கடைகளையும், மது அருந்தும் கூடங்களையும் மூடவேண்டும் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் அறிவித்துள்ளார்.
    நாமக்கல்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி அனைத்து மதுபானக் கடைகளையும், மது அருந்தும் கூடங்களையும் மூடவேண்டும் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

    வருகிற 2 -ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் உள்ளிட்டவைகளை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    எனவே அன்று அனைத்து மதுபானக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் அனைத்தையும் மூடி வைக்க வேண்டும். மீறி திறந்தாலோ, மறைமுகமமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நாமக்கல் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 98 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள மின்னாம்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தொலைதூர கிராம மக்களும் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகின்றது. நாமக்கல் மாவட்டம் விவசாயிகள் அதிகமுள்ள மாவட்டம் ஆகும். வேளாண்மை துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், வேளாண் இடுபொருட்கள், விதைகள், மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து, குறைந்த நீரை கொண்டு நிறைந்த மகசூலை பெறுவதோடு நீர் சேமிப்பிற்கும் உதவிட வேண்டும்.

    பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்களுக்கு தேவையான வருமான சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்று, விதவை சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட 17 வகையான சான்றிதழ்களையும் வருவாய் துறையின் சார்பில் இருக்கும் இடத்தில் இருந்தே பெறும் வகையில் இ-சேவை மையங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முகாமில் 37 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 98 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 57 ஆயிரத்து 494 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    அதை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், அவற்றை உரிய அலுவலரிடம் வழங்கி, அந்த மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இந்த முகாமில் வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ரமேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கண்ணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்ரமணியம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    திருச்செங்கோடு வட்டத்தில் நியாய விலைக்கடைகளில் சென்ற கலெக்டர் ஆசியா மரியம் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    திருச்செங்கோடு வட்டம், மண்டக்காபாளையத்தில் செயல்பட்டு வரும் உஞ்சனை மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நியாயவிலைக்கடையை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் ஆசியி மரியம் பொருட்களின் இருப்பு, விற்பனை, மீத இருப்பு, விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ளவும், காகித பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் அரசினால் வழங்கப்பட்டுள்ள அதிநவீன விற்பனை முனைய கருவியினை (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) இயக்கி அதனடிப்படையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் இருப்பு குறித்து பார்வையிட்டு சரிபார்த்தார். இந்த ஆய்வின்போது விற்பனை செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் விற்பனை குறித்து, விற்பனை முனைய கருவியில் (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்தார்.

    அதைத் தொடர்ந்து டி.கைலாசம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் டி.கைலாசம்பாளையம் நியாயவிலைக்கடை - 1 மற்றும் நியாயவிலைக்கடை - 2, கரட்டுபாளையத்தில் செயல்பட்டு வரும் திருச்செங் கோடு தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக்கடை, கொல்லப் பட்டியில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு தொடக்க வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக்கடை ஆகியவற்றில் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை, பாமாயில், கோதுமை ஆகிய பொருட்களின் இருப்பு நிலவரம் குறித்து விற்பனை முனைய கருவியில் (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) பதிவுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பொருட்களின் இருப்பினை மாவட்ட வழங்கல் துறை அலுவலர்களின் துணையுடன் சரிபார்த்தார்.

    இந்த ஆய்வுகளின்போது பொதுமக்களிடம் பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றதா, விற்பனையாளர் சரியாக வருகின்றாரா என்றும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஃபர்ஹத் பேகம், திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் வேலு உட்பட வழங்கல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்லில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வந்தது. இந்த ஜமாபந்திக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இறுதி நாளான நேற்று ஜோடிகை அணியார், சர்வமான்ய அணியார், காதப்பள்ளி உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல், உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல், முதியோர்் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 146 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள கிராம புலப்பட நகல் பதிவேடு, கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையாணை வழங்கப்பட்ட நிலங்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பிறப்பு-இறப்பு பதிவேடுகள், நிலவரி வசூல் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டு சரிபார்த்தார்.

    பின்னர் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு தற்காலிக உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 44 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவையும், 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், 20 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளையும் என மொத்தம் 153 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) துரை, நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார்கள் அருள், மதியழகன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    ×