search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
    X

    மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

    • 237 மனுக்கள் பெறப்பட்டது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது . மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் தலைமை தாங்கி பொதுமக்கள் , மாற்றுத் திறனாளிடம் இருந்து மனுக்களை பெற்றார் .

    கூட்டத்தில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை , கூட்டுறவு கடன் உதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி , கிராம பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர் .

    மொத்தம் 237 மனுக்கள் பெறப்பட்டது . அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவ டிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது .

    கூட்டத்தில் துணை கலெக்டர்கள் சேகர் , தாரகேஸ்வரி, இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    Next Story
    ×