search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணி அருகே புதிய கால்வாய் பணிக்கு பூமி பூஜை
    X

    பூமி பூஜை நடந்த காட்சி. 

    ஆரணி அருகே புதிய கால்வாய் பணிக்கு பூமி பூஜை

    • முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் அடிக்கல் நாட்டினார்
    • பொதுமக்கள் கோரிக்கை மனு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளாக கால்வாய் சீரமைக்க கோரியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் ஆரணி அலுவலகத்தில் எம்.எல்.ஏ விடம் சேவூர்ராமசந்திரன் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    மேலும் ஆரணி எம்.எல்.ஏ நிதியிலிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கி ராட்டினமங்கலம் பகுதியில் புதிய கால்வாய் பணிக்கு ஆரணி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமசந்திரன் பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் மாவட்ட ஐ.டி.விங் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மதுசூதனன் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் செந்தில் இ.பி நகர்குமார் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×