என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் கோரிக்கை மனு"
- பெரும்பாலான தொழிலாளர்கள் வெளி மாநிலத்திலிருந்தே பணி அமர்த்தப்படுகின்றனர்.
- 90 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வேலை கொடுக்க வேண்டும் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் வாஞ்சிநாதன் தலைமையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த மூன்று ஆண்டுகளாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கூத்தனப்பள்ளி கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வெளி மாநிலத்திலிருந்தே பணி அமர்த்தப்படுகின்றனர். மேலும் 18 முதல் 21 வயது வரை என்கிற வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்றும், உள்ளூர் மக்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட பகுதி மக்களுக்கும் வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது போன்ற நிறுவனத்திற்காக விளை நிலங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து துன்பப்படும் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல், வட மாநிலத்திலிருந்து இளம் பெண்களை அழைத்து வந்து புறா கூண்டில் அடைப்பது போல் அடிமைப்படுத்தியும், அவர்களின் உழைப்பும் சுரண்டப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு 5 சதவீத வேலை வாய்ப்புகூட வழங்கவில்லை. இதனை இரட்டை துரோகமாகவே மக்கள் கருதுகின்றனர்.
மேலும் மாசு நிறைந்த காற்றை சுவாசித்தும், ரசாயனம் கலந்த நீரை குடித்தும் பாதிப்புக்குள்ளாகு கின்றனர். கடந்த 1974ல் நடந்த திமுக ஆட்சியில் 80 சதவீத வேலை வாய்ப்பு தமிழக மக்களுக்கே என அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது குறைந்தது 90 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வேலை கொடுக்க வேண்டும் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் அடிக்கல் நாட்டினார்
- பொதுமக்கள் கோரிக்கை மனு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளாக கால்வாய் சீரமைக்க கோரியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் ஆரணி அலுவலகத்தில் எம்.எல்.ஏ விடம் சேவூர்ராமசந்திரன் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மேலும் ஆரணி எம்.எல்.ஏ நிதியிலிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கி ராட்டினமங்கலம் பகுதியில் புதிய கால்வாய் பணிக்கு ஆரணி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமசந்திரன் பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் மாவட்ட ஐ.டி.விங் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மதுசூதனன் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் செந்தில் இ.பி நகர்குமார் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்