search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100-day work plan"

    • வெயிலின் தாக்கத்தால் மயக்கம் ஏற்பட்டுள்ளது
    • முதலுதவி சிகிச்சை பெட்டியை வைத்திருக்க பொதுமக்கள் வலியுறுதல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கடலைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (48). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் செல்வி 100 நாள் வேலைக்கு சென்றார்.

    வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென அவர் மயங்கி கிழே விழுந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கி ருந்தவர்கள் உடனே செல்வியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மராட்டிபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், '100 நாள் வேலைக்கு செல்வோர் அவசரத்தில் சாப்பிடாமல் சென்று விடுகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தால் செல்விக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றபடி ஒரு பிரச்னையும் இல்லை. சிறிது நேரம் ஓய்வு எடுத்தாலே போதும்' என்றனர். பணியின்போது பெண் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பொதுவாக 100 நாள் வேலை என்பது பெரும்பாலும் ஏரி, குளம், குட்டை, ஆற்று கால்வாய் போன்ற நீர் நிலை பகுதிகளில் தான் வேலை நடக்கும். அப்போது, பணியாளர்கள் வேலை செய்து கொண் டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விஷப்பூச்சி கடிப்பது, உடைந்த கண்ணாடி பாட்டில் குத்தி கொள்வது போன்றவை நடக்கிறது.

    அவ்வாறு நடக்கும் போது ஆஸ்பத்திரி செல்ல அதிக நேரம் ஆவதால் 100 நாள் வேலை நடக்கும் ஒவ்வொரு ஊராட்சியிலும் முதலுதவி சிகிச்சை பெட்டியை வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்ளகாக உயர்த்தவேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறி உள்ளார்.
    • 100 நாள் வேலைத் திட்ட பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகள் கேட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட் டியில் 100 நாள் வேலை திட்டப்பணிகளை மாணிக் கம் தாகூர் எம்.பி. பார்வை–யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாத்தூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரு–கிறது. விருதுநகர் மாவட்டத் தில் 300 கிராமங்களிலும், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 382 கிராமங்க–ளிலும் 100 நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்துள்ளேன்.

    90 சதவீதம் பேர் பணி களை செய்து வருகின்றனர். மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை முடக்க பார்க்கிறது. கடந்த 5 வாரங்களாக ஊதியம் வழங் கப்படாத நிலை நீடிக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தில் ஏதேனும் புகார் இருந்தால் என்னிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ கொடுத் தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட் களாக உயர்த்த வேண்டும்.

    கப்பலூர் சுங்கச்சாவடி யில் ஆண்டுக்கு 41 லட்சம் வாகனங்கள் செல்லும் நிலை யில் 10 லட்சம் வாக னங்கள் வி.ஐ.பி. வாகனங்க ளாக கணக்கு காட்டப்பட்டுள் ளது. ஒரு வாகனத்திற்கு குறைந்தபட்சம் ரூ.100 வசூல் என்றாலும் பெரும் தொகை முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    சமையல் கியாஸ் சிலிண் டருக்கு மத்திய அரசு ரூ.1200 வாங்கி வந்த நிலை யில் தற்போது ரூ.200 குறைத் துள்ளது. இதுதேர்தலுக்கான கண்துடைப்பு நடவடிக்கை. மக்கள் மீது அக்கறை இருந்தால் ராஜஸ்தானில் வழங்குவது போல் கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்க வேண்டும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை இதுகுறித்து பிரதம ரிடம் முறையிட வேண்டும். தேசிய அளவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் அதிக தொகை செலுத்தும் மாநி லங்களில் தமிழகம் 5-வது இடத்தில் வருகிறது. இதில் எந்த அளவிற்கு தமிழ கத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது என்பதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்.

    மதுரை ரெயில் நிலை யத்தில் நடந்த தீ விபத்து ரெயில்வே துறையின் அலட் சியத்தை காட்டுகிறது. ரெயில் பெட்டியில் கியாஸ் சிலிண்டரை எப்படி அனும தித்தார்கள் என்று தெரிய வில்லை. ரெயில்வே மந்திரி ரெயில் விபத்திற்கு பொறுப் பேற்று பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்த னர்.

    முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. சாத்தூர் யூனியன் சின்னகொல்லப் பட்டி, சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையால் உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்ட பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகள் கேட்டார்.

    • வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஒன்றிய தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் சிறுலபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது அண்ணாமலை சேரி கிராமம். இங்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையில் முறைகேடு நடப்பதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், 100 நாள் வேலை திட்ட முறை கேடுகளை களையவேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அவர்களிடம் ஒன்றிய தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தின் போது விபரீதம்
    • உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை

    அணைக்கட்டு:

    தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    அதேபோல் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குடிசை கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தை செய்து வருகின்றனர்.

    இதில் வழக்கம் போல் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ராதிகா (வயது 29)என்பவர் வேலை செய்து கொண்டு இருந்தார். வேலை செய்யும் இடத்தில் யாரோ மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து அப்பகுதியில் வீசி சென்றுள்ளனர். இதனை கவனிக்காத ராதிகா அதை மிதித்துள்ளார்.

    இதனால் அவர் காலில் பாட்டிலின் கண்ணாடி ஆழமாக குத்தி நரம்பை அறுத்து உள்ளது.

    இதனால் வலியால் ரத்த வெள்ளத்தில் துடி துடித்த ராதிகாவை சக பணியாளர்கள் மீட்டு வேலூர் தனியார் மருத்து வமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

    இதனை பார்த்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி அனுமதித்துள்ளனர். இதனால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை எனவும், அவரின் வாழ்வாதாரமே இழந்து தவிக்கும் வேளையில் அதிகாரிகள் இதனை அலட்சியம் காட்டுவதாகவும் கூறி வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, செஞ்சி, சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் கிராமப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட பணி செயல்பட்டு வருகிறது.

    இதில் மாற்று திறனாளிகளுக்கு 100 நாட்கள் முழுவதுமாக வேலை தர வேண்டும், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக வருகை பதிவேடு வழங்க வேண்டும், மேலும் மத்தியஅரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் அரசு ஆணைப்படி 4 மணி நேரமே பணி செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி இந்திராணியிடம், மனு அளித்தனர். இதில் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை விளார் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடை பெற்றது.
    • இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை சீரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், தெருவிளக்குகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஊராட்சி ஒன்றியம் விளார் ஊராட்சியில் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைவர் மைதிலி ரெத்தினசுந்தரம் தலைமை தாங்கினார். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்தும், தூய்மை பணிகள் மேற்கொள்வது, சுத்தமான குடிநீர் வழங்குவது, 100 நாள் வேலை திட்ட பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை சீரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், தெருவிளக்குகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர் . அதனை சரி செய்வது தருவதாக ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சித்ரா, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • பாடகசாலை கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 60 பேர் வேலை செய்து வருகிறார்கள்.
    • பணியாளர்களுக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதாக புகார்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் விஷ்ணு தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    பாளை யூனியன் திருவேங்கடநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனர்.

    திருவேங்கடநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாடகசாலை கிராமத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். இங்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 60 பேர் வேலை செய்து வருகிறோம்.

    எங்கள் பகுதியில் இருந்து காலையில் 7.30 மணிக்கு வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு செல்வதற்குள் தாமதமாகி விடுகிறது. அப்போது பணியாளர்களுக்கும் எங்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

    எனவே எங்கள் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இடங்களில் எங்களுக்கு வேலை செய்ய ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஒன்றிய உதவி பொறியாளர், உள்பட 3 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள 30 ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முன்பு பொது மக்கள் பயன்படுத்தும் ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகளும் நடைபெற்றது.

    பிரதமரின் உத்தரவுப்படி தற்போது விவசாய பணிகளுக்கு 100 நாள் தொழிலாளர்கள் பயன்படுத்தபட்டு வருகின்றனர். ஆனால் இந்த பணிகளை அரசியல் பிரமுகர்கள் எடுத்து அதிகாரி கள் துணையுடன் முறைகேடு செய்வதாக புகார் எழுந்து வருகிறது.

    அதே போன்று இலங்கைச் சேரி கிராமத்தை சேர்ந்தவரின் விவசாய நிலங்களில் வரப்பு அமைக்க ரூ.2 லட்சத்து 10 ஆயிரம், நூறு நாள் வேலை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் 36 பணியாளர்களை கொண்டு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரை பணிகள் நடைபெற்று வருவதாக செந்துறை ஊராட்சி ஒன்றியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    பணிகாலத்தின் போது 4-ந்தேதி அன்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிதளத்தில் யாரும் இல்லை. ஆனால் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைக்கு அறிக்கை மட்டும் அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த பணி முறைகேட்டில் ஈடுபட்ட ஒன்றிய உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய மேற்பார்வையாளர் சண்முகம், செந்துறை ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் ஆகிய 3 பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் விஜயலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர், துணைவட்டார வளர்ச்சி அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    சாலை வசதி இல்லாத முந்திரிகாட்டிற்கு சுமார் 1 கிமீ தூரம் நடந்தே சென்று ரகசிய ஆய்வு செய்து எடுக்கப்பட்ட அரியலூர் கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கை அரியலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    100 நாள் வேலை திட்டத்தில் ஆறு, வாய்க்கால்களை தூர்வார அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் தமிழக விவசாயிகள் கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து கடந்த 22-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் பெரும்பாலான ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை.

    இதனால் 100 நாள் வேலை திட்டத்தில் ஆறு, வாய்க்கால்களை தூர்வார கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால் இதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    எனவே 100 நாள் வேலை திட்டத்தில் ஆறு- வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். #tamilnews
    ×