search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்ளகாக உயர்த்தவேண்டும்- மாணிக்கம் தாகூர் எம்.பி.
    X

    சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் 100 நாள் வேலை திட்டப்பணியில் ஈடுபட்டு உள்ளோரிடம் மாணிக்கம் தாகூர் எம்.பி. குறைகளை கேட்டறிந்த காட்சி. அருகில் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

    100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்ளகாக உயர்த்தவேண்டும்- மாணிக்கம் தாகூர் எம்.பி.

    • 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்ளகாக உயர்த்தவேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறி உள்ளார்.
    • 100 நாள் வேலைத் திட்ட பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகள் கேட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட் டியில் 100 நாள் வேலை திட்டப்பணிகளை மாணிக் கம் தாகூர் எம்.பி. பார்வை–யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாத்தூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரு–கிறது. விருதுநகர் மாவட்டத் தில் 300 கிராமங்களிலும், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 382 கிராமங்க–ளிலும் 100 நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்துள்ளேன்.

    90 சதவீதம் பேர் பணி களை செய்து வருகின்றனர். மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை முடக்க பார்க்கிறது. கடந்த 5 வாரங்களாக ஊதியம் வழங் கப்படாத நிலை நீடிக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தில் ஏதேனும் புகார் இருந்தால் என்னிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ கொடுத் தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட் களாக உயர்த்த வேண்டும்.

    கப்பலூர் சுங்கச்சாவடி யில் ஆண்டுக்கு 41 லட்சம் வாகனங்கள் செல்லும் நிலை யில் 10 லட்சம் வாக னங்கள் வி.ஐ.பி. வாகனங்க ளாக கணக்கு காட்டப்பட்டுள் ளது. ஒரு வாகனத்திற்கு குறைந்தபட்சம் ரூ.100 வசூல் என்றாலும் பெரும் தொகை முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    சமையல் கியாஸ் சிலிண் டருக்கு மத்திய அரசு ரூ.1200 வாங்கி வந்த நிலை யில் தற்போது ரூ.200 குறைத் துள்ளது. இதுதேர்தலுக்கான கண்துடைப்பு நடவடிக்கை. மக்கள் மீது அக்கறை இருந்தால் ராஜஸ்தானில் வழங்குவது போல் கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்க வேண்டும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை இதுகுறித்து பிரதம ரிடம் முறையிட வேண்டும். தேசிய அளவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் அதிக தொகை செலுத்தும் மாநி லங்களில் தமிழகம் 5-வது இடத்தில் வருகிறது. இதில் எந்த அளவிற்கு தமிழ கத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது என்பதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்.

    மதுரை ரெயில் நிலை யத்தில் நடந்த தீ விபத்து ரெயில்வே துறையின் அலட் சியத்தை காட்டுகிறது. ரெயில் பெட்டியில் கியாஸ் சிலிண்டரை எப்படி அனும தித்தார்கள் என்று தெரிய வில்லை. ரெயில்வே மந்திரி ரெயில் விபத்திற்கு பொறுப் பேற்று பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்த னர்.

    முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. சாத்தூர் யூனியன் சின்னகொல்லப் பட்டி, சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையால் உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்ட பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகள் கேட்டார்.

    Next Story
    ×