search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Political Parties"

    • மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது
    • திண்டுக்கல்லில் அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயகவாலிபர் சங்கம் மற்றும கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது. பல மாநிலங்களில் ரெயில்கள் தாக்கப்பட்டு எரிக்கப்படுவதால் ரெயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்லிலும் ரெயில்நிலையங்களில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு இந்தியஜனநாயக வாலிபர் சங்க மாவட்டக்குழு சார்பில் மாவட்ட தலைவர் சிலம்பரசன், மாவட்ட செயலாளர் பாலாஜி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யும் நடைமுறையை மத்திய அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதேபோல் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர, ஒன்றிய குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தண்டால் எடுத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மத்திய அரசு அக்னிபாதை திட்டத்தை கைவிடும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.
    சென்னை:

    தமிழகத்தில் வேலூர் தவிர 38 பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகத்தின் அரசியல் தலைவர்களாகத் திகழ்ந்த, தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் நடந்த முதல் தேர்தல் இதுவாகும்,

    இந்தத் தேர்தலில் தேனி தவிர மற்ற அனைத்து தொகுதி களிலும் தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் (விடுதலைச் சிறுத்தை கட்சி போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியைத் தவிர), அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளன.

    சிதம்பரத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 3,219 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வீழ்த்தியது. இது குறைந்தபட்ச வித்தியாசமாகும். அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியான பா.ம.க.வை தி.மு.க. 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்தத் தேர்தலில் தி.மு.க. அதிகபட்சமாக 7 லட்சத்தைத் தாண்டியும், குறைந்தபட்சமாக 4 லட்சத்துக்கு மேலாகவும் ஓட்டுகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 7 லட்சத்து 93 ஆயிரத்து 281 ஓட்டுகளைப் பெற்றுள்ளார். குறைந்தபட்சமாக தேனியில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 120 ஓட்டுகளை தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் பெற்றது.

    ஆனால் அ.தி.மு.க. அதிகபட்சமாக 5 லட்சத்துக்கு மேலாகவும், குறைந்தபட்சமாக ஒரு லட்சத்துக்கு அதிகமாகவும்தான் ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. அந்த வகையில், தேனியில் அ.தி.மு.க. 5 லட்சத்து 4 ஆயிரத்து 813 ஓட்டுக்களையும், குறைந்தபட்சமாக திருச்சியில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 999 ஓட்டுக்களையுமே அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க. பெற்றிருக்கிறது.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 5.98 கோடி ஓட்டுகளில் 4 கோடியே 23 லட்சத்து 66 ஆயிரத்து 721 ஓட்டுகள் செலுத்தப்பட்டு இருந்தன. அவற்றில் தி.மு.க. கூட்டணி, 2 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. இதன் சதவீதம் 52.64 ஆகும்.

    ஆனால் அ.தி.மு.க. கூட்டணி, ஒரு கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 314 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் சதவீதம் 30.28 ஆகும்.

    தி.மு.க. மட்டும் 32.76 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் 12.76 சதவீத ஓட்டுக்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2.40 சதவீதம், இந்திய கம்யூனிஸ்டு 2.43, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1.11 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளன. (விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரு வேட்பாளர் மற்றும் ம.தி.மு.க. ஐ.ஜே.கே., கொங்கு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர்கள், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். இந்தக் கட்சிகளுக்கான ஓட்டு சதவீதம் பிரித்துக் காட்டப்படவில்லை. ஆனாலும் 1.19 சதவீத ஓட்டுக்களை தி.மு.க. கூட்டணிக்கு இந்தக் கட்சிகள் அளித்ததாக கணக்கிடப்படுகிறது).

    அ.தி.மு.க. மட்டும் 18.48 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க. 3.66 சதவீதம், தே.மு.தி.க. 2.19, பா.ம.க. 5.42 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளன. (புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ் போன்ற சில கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர். இந்த கட்சிகளுக்கான ஓட்டு சதவீதம் பிரித்து காட்டப்படவில்லை. ஆனாலும் 0.53 சதவீத ஓட்டுக்களை இந்தக் கட்சிகள் பங்களித்ததாக கணக்கிடப்படுகிறது).

    இந்தத் தேர்தலில் அ.ம.மு.க. கட்சியின் பலம் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதத்தை அதிக அளவில் அ.ம.மு.க. பெற்றிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. பெரிய கட்சிகளுக்கு இணையாக பேசப்பட்ட இந்தக் கட்சி, தமிழகம் முழுவதுமே 22 லட்சத்து 25 ஆயிரத்து 377 ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது. இது 5.25 சதவீதமாகும்.

    தேனியில் அதிகபட்சமாக அ.ம.மு.க. ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 50 ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 8,867 ஓட்டுக்களை மட்டுமே அந்தக் கட்சி வாங்கியுள்ளது.

    முதன் முறையாக தேர்தலில் குதித்து தமிழகம் முழுவதும் 15 லட்சத்து 75 ஆயிரத்து 620 ஓட்டுக்களை மக்கள் நீதி மய்யம் பெற்றிருக்கிறது. இதன் சதவீதம் 3.72 ஆகும்.

    அதுபோல நாம் தமிழர் கட்சியும் ஒவ்வொரு தேர்தலிலும் விடாப்பிடியாக போட்டியிட்டு இந்தத் தேர்தலில் ஓட்டு சதவீதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, 16 லட்சத்து 45 ஆயிரத்து 185 ஓட்டுக்களை, அதாவது 3.88 சதவீத ஓட்டுக்களை அந்தக் கட்சி பெற்றுள்ளது.



    ஒவ்வொரு தேர்தலிலும் நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்கவில்லை) தனி இடம் கிடைப்பதுண்டு. இந்தத் தேர்தலில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 ஓட்டுக்களை நோட்டா பெற்றுள்ளது. இது 1.28 சதவீதமாகும். அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 23 ஆயிரத்து 343 ஓட்டுக்களும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 6,131 ஓட்டுக்களும் நோட்டாவுக்கு விழுந்தன.

    இதன் ஓட்டு சதவீதத்தைப் பார்க்கும்போது நோட்டாவும் இன்னும் தேர்தல் களத்தை இழக்கவில்லை என்றே தெரிகிறது. இதன் மூலம் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்கள், 1.28 சதவீதம் பேருக்கு பிடிக்கவில்லை என்றே கணிக்க முடிகிறது.
    பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த அரசியல் கட்சியினர் பறக்கும் படையினரை பார்த்ததும் ரூ.13 லட்சத்தை ரோட்டில் வீசி சென்றனர்.
    சென்னை:

    வேலூர் மாவட்டம் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகரில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக ஆம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பறக்கும் படையினர் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது 2 பேர் தங்கள் கையில் வைத்து இருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர்.

    அந்த பையை கைப்பற்றி பார்த்தபோது அதில் ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது. ரூ.13.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் கிடைத்ததை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் ஆம்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் ஆம்பூர் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். பணத்தை நடுரோட்டில் போட்டுவிட்டு ஓடியவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் என்ற கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு இன்று காலை ஓட்டுக்கு பணம் கொடுக்கபடுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தங்களது கட்சிக்கு வாக்களிக்க கோரி அங்கிருந்த பொது மக்களுக்கு பணம் கொடுத்து கொண்டு இருந்தனர்.

    பறக்கும் படை அதிகாரிகளை பார்த்ததும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கையில் வைத்திருந்த 1 லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாயை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    உடனே பறக்கும் படை அதிகாரிகள் அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
    தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யும்படி அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #LokSabhaElections2019 #ElectoralBonds #SupremeCourt
    புதுடெல்லி:

    தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் நிதி பெறுவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக தேர்தல் பத்திரங்களை மத்திய அரசு கடந்த 2016ல் அறிமுகப்படுத்தியது. இந்திய குடிமக்கள், அமைப்புகள் யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கலாம். இவற்றை அரசியல் கட்சிகள் வங்கியில் செலுத்தி பணமாக்கிக் கொள்ளலாம்.

    இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், தேர்தல் நிதி பத்திரங்கள் வாங்கி, அதன்மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பது என்பது, ரொக்கமாக கொடுப்பதை விட சிறந்தது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மறுநாள் உத்தரவு வழங்குவதாக கூறினர்.



    அதன்படி இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அப்போது தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள், நன்கொடையாளர்களின் பெயர்கள் மற்றும் பெறப்பட்ட தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மே 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என தெரிவித்தனர். இந்த அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். #LokSabhaElections2019 #ElectoralBonds #SupremeCourt
    பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். #DynastyPolitics
    மதுரை:

    வேட்புமனுகள் குறைபாடு தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், வேட்பாளர்கள் மனு தாக்கலின்போது தேர்தல் வாக்குறுதியை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் பெற்ற பிறகும் உரிய பதில் அளிக்காத கட்சிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை, போரில் உயிரிழந்த வீரர்களுக்கான நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக தெரிவித்தனர். பாஜக, கம்யூனிஸ்ட் தவிர பிற கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக தெரிவித்தனர்.

    அதன்பின்னர், நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அபராதத்தை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டனர். #DynastyPolitics
    இந்தியாவில் தற்போது 2293 கட்சிகள் உள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் புதிதாக 149 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. #ElectionCommissions #ParliamentaryElection
    புதுடெல்லி:

    வானத்தில் நட்சத்திரத்தை கூட எண்ணி விடலாம். இந்தியாவில் உள்ள கட்சிகளை எண்ணிவிட முடியாது என்று கேலியாக சொல்வது உண்டு.

    அதுபோலத்தான் இந்தியாவில் அரசியல் கட்சிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இத்தனையும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஒரு சில கட்சிகள் மட்டும் தான் மக்களிடம் செல்வாக்கு பெற்று திகழ்கின்றன. ஆனாலும் கட்சியை தொடங்குவது குறைந்தபாடில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் பல கட்சிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இப்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு வரை பதிவு செய்த கட்சிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



    அதன்படி நாட்டில் 2293 கட்சிகள் உள்ளன. தேசிய அளவில் 7 கட்சிகளும், மாநில அளவில் 59 கட்சிகளும் தேர்தல் கமி‌ஷனால் அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளன. மற்ற கட்சிகள் அனைத்தும் உரிய அங்கீகாரம் பெறாதவையாகும்.

    கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் மட்டுமே புதிதாக 149 கட்சிகள் தொடங்கப்பட்டு தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. #ElectionCommissions #ParliamentaryElection
    தமிழ்நாட்டில் வருகிற 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் ஒரு வாரமே அவகாசம் உள்ளதால் அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளன. #Parliamentelection
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நேற்று மாலை முதலே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    தமிழ்நாட்டில் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் சரியாக ஒரு வாரமே அவகாசம் உள்ளது. இதனால் அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாகி உள்ளன.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். மனுக்களை திரும்ப பெற 29-ந்தேதி கடைசி நாளாகும். அன்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு விடும்.

    அன்று முதல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு வெறும் 19 நாட்களே அவகாசம் உள்ளது. எனவே தலைவர்கள் இப்போதே தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

    இதற்கிடையே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிந்துவிட்டன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.-7, பா.ஜனதா-5, தே.மு.தி.க.-4, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. த.மா.கா.வும் இந்த அணியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. வசம் 21 தொகுதிகள் உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு-10, இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா-2 , ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    தொகுதி பங்கீடுகள் முடிந்துவிட்டதால் அடுத்த கட்டமாக எந்தெந்த தொகுதிகளை எந்த கட்சிகளுக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதுவும் இன்று மாலைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

    வருகிற 19-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. தேர்தலுக்கு ஒரு மாதம் தான் இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன. தொகுதி முடிவானால் தான் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும். பொதுவாக எல்லா கட்சிகளிலுமே வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்து அவர்களை முன்னிலைப்படுத்தியே தொகுதிகளையும் கட்சி தலைவர்கள் கேட்கிறார்கள்.

    பேச்சு வார்த்தையின்போது எங்கள் தரப்பில் இந்த வேட்பாளருக்காக இந்த தொகுதியை எதிர்பார்க்கிறோம் என்று தான் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் கோரிக்கையை முன் வைக்கிறார்கள். எங்கள் கட்சியில் இவர் இந்த தொகுதியில் போட்டியிட்டால் தான் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்ற அடிப்படையிலேயே கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி தொகுதிகளை முடிவு செய்கிறார்கள்.

    எல்லா கூட்டணிகளிலும் இன்று மாலை அல்லது நாளைக்குள் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக தி.மு.க. ஏற்கனவே நேர்காணலை முடித்து விட்டது. அ.தி.மு.க.வில் நேர்காணல் இன்றும், நாளையும் நடக்கிறது.



    எனவே இந்த வார இறுதிக்குள் தி.மு.க.- அ.தி.மு.க. கூட்டணிகளில் களம் இறங்கும் வேட்பாளர்கள் முழு விவரம் தெரிய வாய்ப்பு உள்ளது. இதையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    அடுத்த வாரம் வேட்பு மனுதாக்கல் தொடங்க இருப்பதால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் சுறுசுறுப்பான மனநிலைக்கு வந்துள்ளனர். இப்போதே பல இடங்களில் பிரசாரம் தொடங்கி விட்டது. அடுத்த வாரம் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டிவிடும். #Parliamentelection
    தேர்தல் பிரசாரத்துக்கு ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷனின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா தெரிவித்துள்ளார். #ElectionCommission #ElectionCampaign #SoldiersPhoto
    புதுடெல்லி:

    அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் கமிஷனின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். அதில், ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களை தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கோ, பிரசாரத்துக்கோ எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்றும், இது தொடர்பாக கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    சில அரசியல் கட்சிகள், தலைவர்கள், வேட்பாளர்கள் ராணுவத்தினரின் புகைப்படங்களை தங்கள் தேர்தல் பிரசார விளம்பரங்களில் பயன்படுத்துவதாக ராணுவ அமைச்சகம் தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும், இதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருக்கிறது. 
    கஜா புயல் நிவாரணம் வழங்கக்கோரி வேதாரண்யம் அருகே அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    வேதாரண்யம்:

    கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி வீசிய கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு வீடுகள் சேதம் அடைந்தன. புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட கரியாப்பட்டினம், செட்டிபுலம் கிராமங்களில் சுமார் ஆயிரம் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்களை இதுவரை வழங்கவில்லை. இதை கண்டித்தும், உடனே புயல் நிவாரணம் வழங்கக்கோரியும் கரியாப்பட்டினம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பல்வேறு அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிஞர் மாசி, ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை அமைப்பாளர் நந்தன், தி.மு.க. ஊராட்சி செயலாளர் ஏகாம்பரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒருவாரத்துக்குள் விடுப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். #tamilnews
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த செய்யும் மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதற்கும், திருவாரூர் அருகே திருக்காரவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்தும் திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

    மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்கும் நோக்கத்துடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்திட மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு துணை போகிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம். பொங்கல் பண்டிகைக்கு பின்பு மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். விவசாயத்தை பாதுகாத்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மாசிலாமணி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலச்சந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், தி.க. மாவட்ட தலைவர் மோகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பஜ்லுல்ஹக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட தலைவர் தமீம்அன்சாரி, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவடையாததால் திருவாரூர் தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என முக்கிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. #TiruvarurByelection
    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதியில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. திமுக, அமமுக போன்ற கட்சிகளும் திருவாரூர் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது.



    இதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் இடைத்தேர்தலை இப்போது நடத்தவேண்டாம் என வலியுறுத்தின. கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிந்தபிறகு தேர்தலை நடத்தலாம் என்றும் கூறின. சில கட்சிகள் தேர்தலை நடத்தவேண்டும் என வலியுறுத்தின.

    அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறிக்கையாக தயாரித்து இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரிக்கு மாவட்ட கலெக்டர் அனுப்பி வைப்பார். அதன் அடிப்படையில் தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதா? தள்ளிவைப்பதா? என்பதை அறிவிப்பார். #TiruvarurByelection
    திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கருத்து கேட்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #TiruvarurByelection #MKStalin
    சென்னை:

    திருவாரூர் தொகுதியில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. திமுக, அமமுக போன்ற கட்சிகளும் திருவாரூர் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது? என மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.



    இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், திருவாரூர் தேர்தல் தொடர்பாக கருத்தினை பதிவிட்டுள்ளார்.

    அதில், “திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும்’’ வேண்டுகோள் விடுத்துள்ளார். #TiruvarurByelection #MKStalin
    ×