search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man"

    • அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.
    • பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை- திட்டைக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவா ளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

    இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெ க்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

    ஆனால் அவர் யார் ? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.

    இதனைத் தொடர்ந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரயிலில் அடிபட்டு அந்த முதியவர் இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்ற பல்வேறு கோண ங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்கொலையா? போலீசார் விசாரணை
    • 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    கடலூர்:

    கடலூரில் மஞ்சக்குப்ப த்தில் மைதானம் இருந்து வருகின்றது. இங்கு தினந்தோ றும் 24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். மேலும் மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான நபர்கள் மைதானத்தில் அமர்ந்து பேசிவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் இன்று காலை மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள மேடையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக இறந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தூக்கு மாட்டி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் முதியோர் தூக்குபோட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்.
    • மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அதிவேகமாக வந்த கார்

    அப்போது அந்தப் பகு

    தியில் உள்ள ஒரு பெட்ரோல்

    பங்கில் பெட்ரோல் போடு வதற்காக திரும்பியபோது பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி அதிவேகமாக வந்த கார் ரத்தினம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரத்தினம் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்தினம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கைது

    இதுகுறித்து ரத்தினத்தின் மனைவி வசந்தி(54) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்செங்கோடு அருகே ஆலாங்குறைகாடு பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கார் மோதி தூக்கி வீசியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
    • பரிசோதித்த டாக்டர்கள் ஜெயராமன் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 63 ) விவசாய கூலி தொழிலாளி இவர் நேற்று சைக்கிளில் அரசூர் சென்று விட்டு மீண்டும் நேற்று மாலை மாமந்தூர் வருவதற்காக. அரசூர் வங்கி எதிரே சைக்கிளை தள்ளி கொண்டு ரோட்டை கடக்கும் போது திருச்சியில் இருந்து சென்னை சென்ற கார் மோதி தூக்கி வீசிதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை திருவெண்ணை நல்லூர் போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயராமன் இறந்து விட்டதாக தெரி வித்தனர். இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை செய்து வருகிறார்

    • உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • திடீரென தவறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள மானாங்கோரை மேலநெடார் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 80).

    உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று தஞ்சை மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    திடீரென தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி பலியானார்.

    இது குறித்து பழனிச்சாமியின் மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில்

    தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • சாலை ஓரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    சீர்காழி:

    சீர்காழி தேர் மேல வீதியின் சாலை ஓரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை யாரும் கொலை செய்து இங்கு வந்து போட் டார்களா அல்லது அவர் வந்த இடத்தில் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

    • மொபட்டில் சென்ற முதியவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வாவிடமருதூர் மேலத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது74). இவர் புது நத்தம் ரோட்டில் பாலத்தின் கீழே மொபெட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலை யோரத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரின் அருகே மொபட் வந்தபோது டிரைவர் சிக்னல் எதுவும் செய்யாமல் திடீரென கதவை திறந்தார். இதனால் மொபட் எதிர் பாராத விதமாக கார் கதவு மீது மோதியது. இதனால் முருகன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.

    அப்போது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த மற்றொரு கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த முருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து முருகனின் மகன் செந்தில் குமார் போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். போலீசார் நின்றிருந்த கார் டிரைவர் உத்தங்குடி லேக் ஏரியாவை சேர்ந்த சுதர்சன் (43), மற்றொரு கார் டிரைவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் மோதி முதியவர் பலியானார்.
    • விருதுநகர் ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையைச் சேர்ந்தவர் அழகு வெள்ளைச்சாமி (வயது 60). இவர் ராஜபாளையம் பகுதி யில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் காவலாளி யாக பணியாற்றி வந்தார். இவரது குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர்.

    இதனால் தனியாக வசித்து வந்த அழகு வெள்ளைச்சாமி இன்று காலை சிவரக்கோட்டை பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மதுரை- செங்கோட்டை ரெயில் மோதியதில் அழகு வெள்ளைச்சாமி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அழகு வெள்ளைச்சாமி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவேரி கரை அழகிரி மண்டபத்தில் 60 வயது மதிக்கதக்க முதியவர் பிணம் கிடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே ஆடுதுறையை அடுத்த சூரியனார் கோவில் காவேரி கரை அழகிரி மண்டபத்தில் 60 வயது மதிக்கதக்க முதியவர் பிணம் கிடப்பதாக திருப்பனந்தாள் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் இருந்து தரைவழியாக கொட்டகைக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது.
    • மகாலிங்கம் ஆட்டுகொட்டகையில் குழி தோண்டி உள்ளார்.

    திருவாரூர்:

    திருத்துறைப்பூண்டி அருகே சேகல் மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது63). நேற்று காலை இவர் வீட்டின் அருகே உள்ள ஆட்டுகொட்டகையில் குழி தோண்டி உள்ளார்.

    அப்போது வீட்டில் இருந்து தரைவழியாக கொட்டகைக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. இதனை அறியாத மகாலிங்கம் கடப்பாரையால் குழி தோண்டியபோது எதிர்பாராதவிதமாக மின்வயர் மீது பட்டது.

    இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மகாலிங்கம் இறந்தார். தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரமுத்து என்பவர் வியாபாரத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • தூக்கி வீசப்பட்டு வீரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தஞ்சாவூர்:

    பட்டுக்கோட்டையை அடுத்த ராசியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து (வயது60), நண்டு வியாபாரி.

    இவர் நேற்று காலை 6 மணி அளவில் வியாபாரத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது துவரங்குறிச்சி-அதிராம்பட்டினம் மெயின் ரோட்டில் ராசியங்காடு கிளை ரோடு செல்லும் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த வீரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமுத்து மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே முதியவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் வில்சன் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயகுமார்(வயது60). இவர் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் ஏசுராணி. இவரது கணவர் யோகராஜன் என்ற கிருஷ்ணராஜ். இவர் மதுவுக்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த ஏசுராணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்தார். இந்த நிலையில் சேத்தூர் பகுதியில் ஜெயகுமார் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த யோகராஜன் ஜெயகுமாரை அவதூறாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெயகுமாரின் தலையில் வெட்டினார். இதில் படுகா யமடைந்த ஜெயகுமார் சிகிச்சைக்காக ராஜபா ளையம் அரசு மருத்து வனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை மறைவான யோகராஜனை ேபாலீசார் தேடி வருகின்றனர்.

    ×