search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "falling down"

    • உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • திடீரென தவறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள மானாங்கோரை மேலநெடார் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 80).

    உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று தஞ்சை மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    திடீரென தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி பலியானார்.

    இது குறித்து பழனிச்சாமியின் மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில்

    தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • மாடிப்படியில் தவறி விழுந்து 2 பேர் இறந்தனர்.
    • கீழராஜகுல ராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 42). மாடிப்படியில் தவறி விழுந்து மயக்கம் அடைந்தார். அவரை மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக அவரது மகள் ஜோதிலட்சுமி அளித்த புகாரின்பேரில் கீழராஜகுல ராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகில் உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தகுமார் (41). மாடிப்படியில் தவறி விழுந்தவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மனைவி காமாட்சி கொடுத்த புகாரின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.dwa

    திங்களூர் அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    திங்களூரை அடுத்த மாச்சாபாளையம், தச்சந்தோட்டம், வேப்பங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது53). பனை மரம் ஏறும் தொழிலாளி.

    சம்பவத்தன்று சின்ன வீரசங்கிலியில் உள்ள ஒரு தோட்டத்தில் ராஜேந்திரன் பனைமரம் ஏறினார். அப்போது எதிர்பாராத வகையில் பனைமரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்து விட்டார்.

    இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×