என் மலர்
நீங்கள் தேடியது "netizen"
- ராஜபாளையம் அருகே முதியவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் வில்சன் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயகுமார்(வயது60). இவர் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் ஏசுராணி. இவரது கணவர் யோகராஜன் என்ற கிருஷ்ணராஜ். இவர் மதுவுக்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ஏசுராணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்தார். இந்த நிலையில் சேத்தூர் பகுதியில் ஜெயகுமார் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த யோகராஜன் ஜெயகுமாரை அவதூறாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெயகுமாரின் தலையில் வெட்டினார். இதில் படுகா யமடைந்த ஜெயகுமார் சிகிச்சைக்காக ராஜபா ளையம் அரசு மருத்து வனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை மறைவான யோகராஜனை ேபாலீசார் தேடி வருகின்றனர்.
- ஆனந்த் மஹிந்திரா சொந்தமாக அதிக வெளிநாட்டு சொகுசு கார்களையே வைத்துள்ளார் என்றும் அதையே அவர் பயன்படுத்துகிறார் என்ற சர்ச்சை எழுந்தது
- தனது தாய் ஸ்கை ப்ளூ பிரிமியர் பத்மினி [sky-blue premier] காரில் தான் தனக்கு கார் ஓட்ட சொல்லித்தந்தார் என்று தெரிவித்தார்
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சொந்தமாக அதிக வெளிநாட்டு சொகுசு கார்களையே வைத்துள்ளார் என்றும் அதையே அவர் பயன்படுத்துகிறார் என்றும் நெட்டிசன் ஒருவர் கூறியது சர்சையானது. உள்நாட்டு தயாரிப்பான அவரது மஹிந்திரா கார்களை பயன்படுத்தாமல் வெளிநாட்டு கார்களை பயன்படுத்துவது ஏன் என ஆனந்த் மஹிந்திராவிடம் நபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் வெளிநாட்டு கார்களான பெராரி கலிபோர்னியா T, போர்ச்சே 911, மெர்சிடிஸ் பென்ஸ் SLS AMG உள்ளிட்ட கார்களை பயன்படுத்துவதாக புகைப்படங்களுடன் வெளியான கட்டுரை ஒன்றின் ஸ்க்ரீன்சாட்டை அந்த நெட்டிசன் பகிர்ந்திருந்தார்.
மேக் இன் இந்தியா பொருட்களைப் பயன்படுத்த தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஆனந்த் மஹிந்திரா அந்த நெட்டிசனின் பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இந்த புதிய சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவரது பதிவில், 1991 இல் மஹிந்திராவில் பொறுப்பு வகிக்கத் தொடங்கியது முதல் மஹிந்திரா கார்களையே பயன்படுத்தி வருகிறேன், எனக்கு சொந்தமான கார்கள் அனைத்தும் மஹிந்திரா கார்கள் மட்டும்தான் என்றும் தற்சமயம் ஸ்கார்பியோ N மாடல் மஹிந்திரா காரை பயன்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கார்களுடன் நிற்கும் அந்த புகைப்படங்கள் மஹிந்திரா படிஸ்டா மின்சார ஹைப்பர் கார் அறிமுகத்தின்போது மான்டேர் கார் வார நிகழ்வில் [Monterey Car Week] எடுக்கப்பட்ட புகைப்படம் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும்தனது தாய் ஸ்கை ப்ளூ பிரிமியர் பத்மினி [sky-blue premier][Fiat] காரில் தான் தனக்கு கார் ஓட்ட சொல்லித்தந்தார்என்றும், அதற்கு ப்ளூ பேர்ட் (BlueBird) என்று தனது தாய் பெயர் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

- மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் குறித்து சுஷாந்த் மேத்தா தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
- 20 ஆண்டுகளுக்கு பிறகும், நாங்கள் இன்னும் கடுமையாகப் போட்டியிடுகிறோம் என்று ஆனந்த் மஹிந்திரா பதில்
மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள், அதன் வடிவமைப்புகள் மற்றும் ஊழியர்களை விமர்சித்து சுஷாந்த் மேத்தா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மஹிந்திரா நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள கார்கள், சர்வீஸ் சென்டர்கள், உதிரிப் பாகங்கள் பிரச்சனைகள், பணியாளர்களின் நடத்தைகள் போன்றவற்றில் உள்ள பிரச்சனைகளை முதலில் சரிசெய்யுங்கள்.
உங்கள் கார்களின் தோற்றம் ஹூண்டாய் காரின் அழகின் அருகில் கூட வரவில்லை. உங்களது டிசைன் டீம் அல்லது உங்களுக்கே இவ்வளவு மோசமான ரசனை இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. மஹிந்திராவும் டாடாவும் உலகிற்கு புதிய மாருதி மற்றும் ஹூண்டாய் ஆக முடியும் என்று நான் தீவிரமாக நம்புகிறேன் மற்றும் விரும்புகிறேன் ஆனால் இதுவரை ஏமாற்றம்தான்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் ஸ்க்ரீன்ஷாட்டை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து சுஷாந்த் மேத்தாவிற்கு பதில் அளித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில், சரியாகச் சொன்னீர்கள் சுஷாந்த். நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் தான். ஆனால் நாங்கள் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
நான் 1991 இல் நிறுவனத்தில் சேர்ந்தேன். ஒரு உலகளாவிய ஆலோசனை நிறுவனம் கார் வணிகத்தை விட்டு வெளியேறுமாறு எங்களுக்கு கடுமையாக அறிவுறுத்தியது. ஏனெனில் வெளிநாட்டு பிராண்டுகளுடன் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று அவர்கள் கருதினார்கள்.
20 ஆண்டுகளுக்கு பிறகும், நாங்கள் இன்னும் கடுமையாகப் போட்டியிடுகிறோம். வெற்றி பெறுவதற்கான எங்கள் பசியைத் தூண்டுவதற்கு உங்கள் பதிவை போலவே எங்களை சுற்றியுள்ள இழிவான தன்மை, சந்தேகம், முரட்டுத்தன்மையை பயன்படுத்தியுள்ளோம்
ஆம், நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும். அதற்குள் எந்த மனநிறைவுக்கும் எங்களிடம் இடமில்லை, தொடர்ச்சியான முன்னேற்றம் நமது மந்திரமாகத் தொடரும். ஆனால் அதே சமயம் எங்கள் வயிற்றில் நெருப்பை ஊட்டியதற்கு நன்றி" என்று பதில் அளித்துள்ளார்.






