search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "netizen"

    • ராஜபாளையம் அருகே முதியவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் வில்சன் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயகுமார்(வயது60). இவர் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் ஏசுராணி. இவரது கணவர் யோகராஜன் என்ற கிருஷ்ணராஜ். இவர் மதுவுக்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த ஏசுராணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் தஞ்சம் அடைந்தார். இந்த நிலையில் சேத்தூர் பகுதியில் ஜெயகுமார் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த யோகராஜன் ஜெயகுமாரை அவதூறாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெயகுமாரின் தலையில் வெட்டினார். இதில் படுகா யமடைந்த ஜெயகுமார் சிகிச்சைக்காக ராஜபா ளையம் அரசு மருத்து வனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலை மறைவான யோகராஜனை ேபாலீசார் தேடி வருகின்றனர்.

    ×