search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narcotics"

    • சந்தேகத்திற்கு இடமாக கடற்கரையில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
    • போதைப் பொருள் கடத்தலில் யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கடல் வழியாக எளிதில் இலங்கை பகுதியை சென்றடையலாம் என்பதால் இங்கிருந்து மஞ்சள், பீடி இலைகள், கஞ்சா உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.

    அதேபோல் சமீபத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட பல கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தல்காரர்கள் போலீசாரை கண்டதும் கடலில் தூக்கி வீசிச்சென்ற சம்பவமும் நடந்தது. இதையடுத்து கடலோர பகுதிகளில் இந்திய கடற்படையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து, வேதாளை கடற்கரை பகுதியில் டி.எஸ்.பி. உமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக கடற்கரையில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்து பார்சலை பிரித்து சோதனையிட்டபோது மெத்தா பெட்டமென் என்ற விலை உயர்ந்த போதைப் பொருள் வைத்திருப்பது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து, போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரிடமும் விசாரணை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த நாகுகுமார், சக்திவேல் என்பதும், இவர்கள் சென்னையில் இருந்து இலங்கை கடத்துவதற்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 6 கோடி ஆகும். ஐஸ் வகை போதை பொருளான இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? மேலும் இந்த போதைப் பொருள் கடத்தலில் யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வேதாளையில் சமீப காலமாக போதைப்பொருள், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் நடை பெற்று வருவது குறிப்பி டத்தக்கது. 

    • கலவை போலீஸ் நிலையம் சார்பில் நடந்தது
    • விற்பனை செய்வது தெரியவந்தால் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்

    கலவை:

    கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கலவை போலீஸ் நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், சப்- இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, உஷா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பல தீய செயல்களை செய்கின்றனர்.

    இதை தடுக்க போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் போதை பொருள்களை பயன்படுத்தக் கூடாது.

    தங்களது பகுதிகளில்போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் போலீசார் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

    இதேபோல் பாணாவரம் அருகே சூரை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் போதை பொருள் தடுப்பு விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    • போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    கடலூர்:

    தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இன்று காலை சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் மற்றும் பள்ளியின் முதல்வர் ஏ.ரூபியால் ராணி முன்னிலை வகித்தனர்.

    பள்ளியின் தலைமை கல்வி அலுவலர் எஸ். பாலதண்டாயுதபாணி தலைமையில் துணை முதல்வர் எஸ்.அறிவழகன் உறுதிமொழி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இறுதியில் பள்ளியின் தாளாளர் எஸ்.குமார் போதை பொருட்களின் தீங்குகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோ தனை மேற்கொண்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் தொகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் பகுதியில் போதை விற்பனை செய்வதை தடுக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் நகர எல்லையில் வீடு ஒன்றை குடோனாக வைத்து போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சு ரேஷ்முருகன் மற்றும் போலீசார் சிதம்பரம் 1-வது வார்டு சிங்காரத்தோப்பு பகுதியில் கண்ணுசாமி நகரில் தனியாருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோ தனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 மூட்டைகளில் 277 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரொக்கம் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் தொகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிதம்பரம் அருகே உள்ள சி.வீரசோழகன் டி.மண்டபம் துணிச்சிலமேடு பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் அருண்குமார் (34), சிதம்பரம் அருகே ஓமக்குளம் ஜமால்நகரைச் சேர்ந்த முகமது முஸ்தபா அப்பாஸ்அலி (42), புவனகிரி அருகே உள்ள வடக்குஆதிவராகநத்தம் வடக்கு மடவிளாக தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சீனுவாசன் (35), சிதம்பரம் கொத்தவால் தெருவைச் சேர்ந்த ஜிஜந்தர்சிங் (33) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் கர்நாடகவில் இருந்து போதை பொருட்கள் கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

    • இருவரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • கத்திமுனையில் திருநங்கையை கடத்தி சென்று மாத்திரை கொடுத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜனனி, பிளசிகா. திருநங்கைகளான இருவரும் நேற்று இரவு மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜீசஸ் கால்ஸ் அருகே நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த போதை வாலிபர்கள் 2 பேர் பிளசிகாவை அழைத்து பேச்சுக் கொடுத்தனர்.

    பின்னர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி அவரை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜனனி உடனடியாக மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, மகாராஜன் ஆகியோர் விரைந்து வந்தனர் மேலும் கடத்தி செல்லப்பட்ட பிளசிகாவின் செல்போன் "டவர் லொகேஷன்" மூலம் செட்டியார் அகரம் பகுதியில் இருப்பது தெரிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மறைவான பகுதியில் போதை வாலிபர்களின் பிடியில் சிக்கி தவித்து வந்த பிளசிகாவை பத்திரமாகமீட்டனர்.

    அப்போது போதை வாலிபர்கள் சப் - இன்ஸ்பெக்டர் மகாராஜனை சரமாரியாக தாக்கி அவரது வயிற்றில் கடித்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் இருவரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பிளசிகாவை கடத்தியது ஆவடியை சேர்ந்த ரவுடி ஜெகன் (வயது 30) மற்றும் ராமாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 23) என்பது தெரிந்தது. அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்த ஜெகன் மற்றும் தினேஷ் இருவரும் பிளசிகாவிற்கு வலுக்கட்டாயமாக மாத்திரைகளை கொடுத்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது இதனால் மயங்கிய பிளசிகாவை போலீசார் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசிடம் இருந்த தப்ப முயன்ற ரவுடி ஜெகனுக்கு வலது காலில் அடிபட்டு எலும்பு முறிந்தது குறிப்பிடத்தக்கது. கத்தி முனையில் திருநங்கையை கடத்தி சென்று மாத்திரை கொடுத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நெமிலி அரசு ஆண்கள் பள்ளியில் நடந்தது
    • மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வழக்கறிஞர் கார்த்திகேயன், நெமிலி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நெமிலி மருத்துவர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார்.இதில் பள்ளி மாணவர்கள் கஞ்சா, குட்கா, மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தகூடாது என்று அறிவுரை வழங்கினார்.

    முன்னதாக மறைந்த முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருபாவதி, வழக்கறிஞர் ராஜேஷ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
    • 3பேரை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமம் கொய்யாதோப்பு பகுதியில் விற்பனைக்காக வீட்டில் 35 மூட்டைகள் அடங்கிய ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரகசிய தகவல் புதுப்பேட்டை போலீசாருக்கு தெரியவந்தது.

    தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்து போதை பொருட்களை கடத்தி வந்த கார், மினி லாரி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 35 மூட்டை போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போதை பொருட்கள் கடத்தலில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 35), முகமது அன்சாரி (50) ஆகியோரை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் முக்கிய பிரமுகர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
    • முடிவில் செயற்குழு உறுப்பினர் உமர் சரீப் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சிறப்பு கூட்டம் தலைவர் தமீமுதீன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் அஹமது அஸ்லம் வர வேற்றார். கூட்டத்தில் பொருளாளரும், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞ ருமான முஹம்மது சாலிஹ் ஹுசைன் தொடக்க உரைரையாற்றினார். சட்ட ஆலோசகரும், ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான சேக் இப்ராகிம் சட்ட சம்பந்தமாக பேசினார்.

    கூட்டத்தில் செயலாளர் முகைதீன் இப்ராகீம், இணைச்செயலாளர் செய்யது சாகுல் ஹமீது, துணைச்செயலாளர் செய்யது காசீம், மக்கள் செய்தி தொடர்பாளர் முஹம்மது இஸ்மாயில் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். துணைத்தலைவர் மாணிக்கம் இரங்கல் தீர்மா னம் நிறை வேற்றப்பட்டது. கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்வதை போலீசார் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    போதை பொருட்களில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் மீள சமூக, சமுதாய அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட கீழக்கரை மீன் மார்க்கெட், பஸ் நிலையம் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால் இந்த கட்டி டங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது கீழக்கரை தாலுகாவாக இருப்பதால் தீயணைப்பு நிலையம் கீழ்க்கரை நகராட்சி பகுதி யில் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தற்போது கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகம் நகரில் இருந்து தொலைதூரம் அமைந்து இருப்பதால் அதை கீழக்கரை தாலுகா வளா கத்தில் கட்ட அரசு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும், அரசு தொலை தூர பஸ்கள் பொதுமக்கள் நலன் கருதி கீழக்கரை பஸ் நிலையத்திற்குள் வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்பட பல தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் செய்யது முஹம்மது பாதுஷா, ஹுசைன் அல்லா பக்ஸ், சீனி பாபா பக்ருதீன், ஹசன் பாய்ஸ், சீனி முஹம்மது சேட், பவுசுல் அமீன், அபு பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் உமர் சரீப் நன்றி கூறினார்.

    • அதிகரிக்கும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
    • பள்ளிகள், கல்லூரிகளின் அருகே கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை நடந்து வருவதாக புகார்கள் வருகின்றன.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் பள்ளிகள், கல்லூரிகள், கிராம பகுதிகளுக்கு சென்று போலீசார் போதைப் பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    மேலும் பெட்டிக்கடைகள் மற்றும் கடை உரிமை யாளர்களின் வீடுகளில் புகையிலை, பான்மசாலா மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதா? என தொடர்ச்சியாக சோதனை செய்து வருகின்றனர்.

    அதில் கிலோ கணக்கில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக போதைப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளவர்களையும், விற்பனை செய்து வருபவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இருப்பினும் பள்ளிகள், கல்லூரிகளின் அருகே கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை நடந்து வருவதாக புகார்கள் வருகின்றன. இந்த நிலையில் பள்ளி, கல்லூரியின் அருகே உள்ள பகுதிகளில் தினமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், கடைகளில் தொடர்ச்சியாக சோதனை செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் போதைப் பொருட்களை வைத்திருப்போர், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர்.
    • குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சமத்துவபுரம் மேடு பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்கா பதுக்கி வைத்திருப்பதாக சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது குடோனில் வடமாநில வாலிபர் ஒருவர் காரில் சில மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். போலீசார் குடோனுக்குள் அதிரடியாக நுழைந்த போது அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. சுமார் 1000 கிலோ குட்கா அதாவது ஒரு டன் குட்கா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும்.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் அந்த வடமாநில வாலிபர் குறித்து விசாரணை நடத்திய போது அவர் ஈரோடு பிருந்தா வீதியை சேர்ந்த தலராம் (35) என்பது தெரிய வந்தது.

    இவர் கடந்த 2 மாதமாக இந்த பகுதியில் பழைய துணிகளை வியாபாரம் செய்வதாக கூறி குடோன் வாடகைக்கு எடுத்து குட்காவை பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி அதனை ஈரோடு மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர். மேலும் 1000 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார்.
    • 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஷீலா மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் அழகுநிலையம் நடத்தி வருபவர் ஷீலா. இவர் போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஷீலா 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது. சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் சதீசன், போலி போதைப் பொருள் வழக்கில் ஷீலாவை சிக்க வைத்திருப்பது, சுங்க இலாகா கமிஷனரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சதீசன், சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஷீலா, தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டியும், பொய் புகார் கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கைது நடவடிக்கையால், தான் கடன் வாங்கி தொடங்கிய அழகு நிலையத்தை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் காரில் சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் 300 கிலோ போதை பொருட்கள் கடத்தி வந்ததுகண்டுபி டிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    பெங்களூருவில் இருந்து மூட்டை மூட்டையாக பான் மசாலா ஹான்ஸ் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு கடத்தி வரப்படுவது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்துடி.எஸ்.பி. மகேஷ் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவை கொண்ட கார் அந்த வழியாக வேகமாக வந்ததை பார்த்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரை கண்டதும் நிற்காமல் அதி வேகமாக சென்ற கார் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகம் பிடித்தது. இருப்பினும் காரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்த போலீசார் காரில் சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் 300 கிலோ போதை பொருட்கள் கடத்தி வந்ததுகண்டுபி டிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் பயணம் செய்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஜெய பாண்டியன் (43,) சிறுபாலன் (27 )மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம் .எஸ். தர்கா பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (45 )உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×