என் மலர்
நீங்கள் தேடியது "cyberbullying"
- ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
- 3பேரை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமம் கொய்யாதோப்பு பகுதியில் விற்பனைக்காக வீட்டில் 35 மூட்டைகள் அடங்கிய ரூ. 3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ரகசிய தகவல் புதுப்பேட்டை போலீசாருக்கு தெரியவந்தது.
தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்து போதை பொருட்களை கடத்தி வந்த கார், மினி லாரி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 35 மூட்டை போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போதை பொருட்கள் கடத்தலில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 35), முகமது அன்சாரி (50) ஆகியோரை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் முக்கிய பிரமுகர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






