என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதைப்பொருள் விழிப்புணர்வு
- கலவை போலீஸ் நிலையம் சார்பில் நடந்தது
- விற்பனை செய்வது தெரியவந்தால் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்
கலவை:
கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கலவை போலீஸ் நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், சப்- இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, உஷா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பல தீய செயல்களை செய்கின்றனர்.
இதை தடுக்க போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் போதை பொருள்களை பயன்படுத்தக் கூடாது.
தங்களது பகுதிகளில்போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் போலீசார் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
இதேபோல் பாணாவரம் அருகே சூரை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் போதை பொருள் தடுப்பு விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
Next Story






