search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருட்கள்"

    • போதை பொருட்கள் விற்பதை நிறுத்திவிட்டு உணவு பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.
    • முடிவில் துணை தலைவர் காசி அறிவழகன் நன்றி கூறினார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் திருமருகல் வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் உணவு பாதுகாப்பு பதிவு,உரிமம் பெறும் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு திருமருகல் வர்த்தக சங்க தலைவர் ஜெயபால்சங்கர் தலைமை வகித்தார்.

    முன்னாள் வர்த்தக சங்க தலைவர் தியாக சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.முன்னதாக வர்த்தக சங்க செயலாளர் காமராஜ் வரவேற்றார். இதில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ், திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அந்தோணி பிரபு ஆகியோர் கலந்துக் கொண்டு உணவு பாதுகாப்பு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், குட்கா,பான் மசாலா போன்றவற்றை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு,அரசின் விதிப்படி உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என பேசினார்.

    இதில் வர்த்தக சங்க பொருளாளர் அ.ஹரிஹரன்,வர்த்தக சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைவர் காசி அறிவழகன் நன்றி கூறினார்.

    • சட்டம்-ஒழுங்கைக் காக்கவும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்கவும், காவல் துறையை சுதந்திரமாக செயல்பட வலியுறுத்தினேன்.
    • தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. அரசின் 28 மாத கால ஆட்சியில் நிர்வாக சீர்கேட்டோடு, கஞ்சா போன்ற போதை மருந்துகளின் நடமாட்டம் மிகவும் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது. கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் மயக்கத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அனைவரும் சர்வசாதாரணமாக குற்றச் செயல்களில் ஈடுபடுவது; கொலைவெறித் தாக்குதல் நடத்துவது; குறிப்பாக, வணிக நிறுவனங்களைத் தாக்குவது போன்ற சட்ட விரோதச் செயல்களால், வணிக நிறுவனங்களை நடத்தி வரும் வியாபாரிகளி டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    * சென்னை, பெரம்பூரில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரை, ஒருசில மாணவர்கள் சுற்றி வளைத்து தாக்கியது;

    * புழல் சிறையில் துணை ஜெயிலர் ஒருவரை வெளிநாட்டு கைதி தாக்கிய கேவலம்.

    * பட்டுக்கோட்டையில் பட்டப்பகலில் வியாபாரி, கத்தி போன்ற ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகிறார்;

    * சென்னை, கே.கே. நகரில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பிரபல ரவுடி ஒருவர், தன் கூட்டாளிகளுடன் பட்டாக்கத்திகளை கையில் ஏந்தி தெருக்களில் நடனமாடிச் சென்று மக்களை மிரட்டும் கொடூரம்;

    * 28.8.2023 அன்று வெளிவந்துள்ள நாளிதழில், திருவொற்றியூரில் 140 கிலோ போதைப்பொருள் பறிமுதல், அரும்பாக்கத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்; 29.8.2023 அன்று வெளி வந்துள்ள நாளிதழில், 10 நாட்களில் 50 கிலோ கஞ்சா மற்றும் 34 பேர் கைது போன்ற செய்திகள் வந்துள்ளன.

    * 'ஆபரேஷன் கஞ்சா 1, 2, 3' போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது என்று கூறும் தி.மு.க. அரசின் 28 மாதகால ஆட்சிக்குப் பிறகும், இதுபோன்ற போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் கைது, போதைப் பொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் மட்டும் வருகின்றன.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளதை அடிக்கடி நான் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் எடுத்துரைத்து வருகிறேன்.

    சட்டம்-ஒழுங்கைக் காக்கவும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்கவும், காவல் துறையை சுதந்திரமாக செயல்பட வலியுறுத்தினேன். ஆனால் இவ்விஷயத்தில், தி.மு.க. அரசு கேளாக் காதினராய் இன்றுவரை உள்ளது. இந்த ஆட்சியாளர்கள் செய்யும் அக்கிரமங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியது மக்களின் தலைவிதியாக உள்ளது.

    இனியாவது, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப்பொருட்கள் நடமாட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவர, திறமையான காவல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தி, இரும்புக்கரம் கொண்டு போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அதிகரிக்கும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
    • பள்ளிகள், கல்லூரிகளின் அருகே கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை நடந்து வருவதாக புகார்கள் வருகின்றன.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் பள்ளிகள், கல்லூரிகள், கிராம பகுதிகளுக்கு சென்று போலீசார் போதைப் பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    மேலும் பெட்டிக்கடைகள் மற்றும் கடை உரிமை யாளர்களின் வீடுகளில் புகையிலை, பான்மசாலா மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதா? என தொடர்ச்சியாக சோதனை செய்து வருகின்றனர்.

    அதில் கிலோ கணக்கில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக போதைப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளவர்களையும், விற்பனை செய்து வருபவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இருப்பினும் பள்ளிகள், கல்லூரிகளின் அருகே கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை நடந்து வருவதாக புகார்கள் வருகின்றன. இந்த நிலையில் பள்ளி, கல்லூரியின் அருகே உள்ள பகுதிகளில் தினமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், கடைகளில் தொடர்ச்சியாக சோதனை செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் போதைப் பொருட்களை வைத்திருப்போர், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×