search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருட்கள் விற்பனை அமோகம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    X

    போதை பொருட்கள் விற்பனை அமோகம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    • போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
    • முடிவில் செயற்குழு உறுப்பினர் உமர் சரீப் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சிறப்பு கூட்டம் தலைவர் தமீமுதீன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் அஹமது அஸ்லம் வர வேற்றார். கூட்டத்தில் பொருளாளரும், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞ ருமான முஹம்மது சாலிஹ் ஹுசைன் தொடக்க உரைரையாற்றினார். சட்ட ஆலோசகரும், ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான சேக் இப்ராகிம் சட்ட சம்பந்தமாக பேசினார்.

    கூட்டத்தில் செயலாளர் முகைதீன் இப்ராகீம், இணைச்செயலாளர் செய்யது சாகுல் ஹமீது, துணைச்செயலாளர் செய்யது காசீம், மக்கள் செய்தி தொடர்பாளர் முஹம்மது இஸ்மாயில் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். துணைத்தலைவர் மாணிக்கம் இரங்கல் தீர்மா னம் நிறை வேற்றப்பட்டது. கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்வதை போலீசார் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    போதை பொருட்களில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் மீள சமூக, சமுதாய அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட கீழக்கரை மீன் மார்க்கெட், பஸ் நிலையம் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால் இந்த கட்டி டங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது கீழக்கரை தாலுகாவாக இருப்பதால் தீயணைப்பு நிலையம் கீழ்க்கரை நகராட்சி பகுதி யில் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தற்போது கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகம் நகரில் இருந்து தொலைதூரம் அமைந்து இருப்பதால் அதை கீழக்கரை தாலுகா வளா கத்தில் கட்ட அரசு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும், அரசு தொலை தூர பஸ்கள் பொதுமக்கள் நலன் கருதி கீழக்கரை பஸ் நிலையத்திற்குள் வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்பட பல தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் செய்யது முஹம்மது பாதுஷா, ஹுசைன் அல்லா பக்ஸ், சீனி பாபா பக்ருதீன், ஹசன் பாய்ஸ், சீனி முஹம்மது சேட், பவுசுல் அமீன், அபு பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் செயற்குழு உறுப்பினர் உமர் சரீப் நன்றி கூறினார்.

    Next Story
    ×