என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rowdy Atakasam"
- இருவரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- கத்திமுனையில் திருநங்கையை கடத்தி சென்று மாத்திரை கொடுத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜனனி, பிளசிகா. திருநங்கைகளான இருவரும் நேற்று இரவு மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜீசஸ் கால்ஸ் அருகே நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த போதை வாலிபர்கள் 2 பேர் பிளசிகாவை அழைத்து பேச்சுக் கொடுத்தனர்.
பின்னர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி அவரை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜனனி உடனடியாக மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, மகாராஜன் ஆகியோர் விரைந்து வந்தனர் மேலும் கடத்தி செல்லப்பட்ட பிளசிகாவின் செல்போன் "டவர் லொகேஷன்" மூலம் செட்டியார் அகரம் பகுதியில் இருப்பது தெரிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மறைவான பகுதியில் போதை வாலிபர்களின் பிடியில் சிக்கி தவித்து வந்த பிளசிகாவை பத்திரமாகமீட்டனர்.
அப்போது போதை வாலிபர்கள் சப் - இன்ஸ்பெக்டர் மகாராஜனை சரமாரியாக தாக்கி அவரது வயிற்றில் கடித்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் இருவரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பிளசிகாவை கடத்தியது ஆவடியை சேர்ந்த ரவுடி ஜெகன் (வயது 30) மற்றும் ராமாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 23) என்பது தெரிந்தது. அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்த ஜெகன் மற்றும் தினேஷ் இருவரும் பிளசிகாவிற்கு வலுக்கட்டாயமாக மாத்திரைகளை கொடுத்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது இதனால் மயங்கிய பிளசிகாவை போலீசார் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசிடம் இருந்த தப்ப முயன்ற ரவுடி ஜெகனுக்கு வலது காலில் அடிபட்டு எலும்பு முறிந்தது குறிப்பிடத்தக்கது. கத்தி முனையில் திருநங்கையை கடத்தி சென்று மாத்திரை கொடுத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
