search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Sengottaiyan"

    கஜா புயலால் நாகப்பட்டினத்தில் 136 நடுநிலைப்பள்ளிகள் சேதமாகியுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ministersengottaiyan #gajacyclone #school

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென் னரசு, சிவசுப்பிரமணி, ராஜா கிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    கஜா புயலால் மாநிலத்தில் பெரும்பாலான இடங் களில் சேதம் ஏற்படும் என்று விவரங்கள் கொடுத்தவுடனேயே முதலமைச்சர் அனைத்து ஆயத்த பணிகளையும் செய்தார். இதை இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாராட்டியுள் ளனர். காஜா புயல் வேகத்தைக் காட்டிலும் அரசின் பணிகள் வேகமாக நடந்து உள்ளது.

    நேற்றைய தினம் எந் தெந்த மாவட்டங்களில் புயல் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரியவந்ததோ அந்தந்த மாவட்ட பள்ளிகளில் அதா வது சுமார் 24 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    புயலால் பள்ளியில் ஏற்பட்ட சேதம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். நாகப்பட்டினத்தில் 136 நடுநிலைப்பள்ளிகள் சேதமாகியுள்ளன. இன்னும் முழுமையான விவரங்கள் வரவில்லை.

    அந்த விவரங்கள் வந்தவுடன் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    சிறப்பாசிரியர் நியமனம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. வேண்டு மென்றே ஒரு சிலர் குற்றச்சாட்டுகள் சுமத்துகின்றனர். யார் குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள் நேரடியாக என்னிடம் வரட்டும். அவர்களுக்கு பதில் சொல்லப்படும்.

    வருகிற ஜனவரி மாதத்தில் நடுநிலைபள்ளிகளில் 52 ஆயிரத்து 432 மாணவர்களுக்கு ஆங்கில கல்வி கற்றுத்தர, எல்கேஜி, யுகேஜி கற்றுத் தர ஜனவரியில் வகுப்புகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக லண்டன், ஜெர்மன் போன்றவற்றிலிருந்து 120 பேராசிரியர்கள் வருகிறார்கள்.

    கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஈரோடு மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. கால்நடை துறை இயக்குனர் மாவட்டத்தில் 2 நாட்களாக முகாமிட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

    நாளையில் இருந்து 50 கூடுதல் மருத்துவர்களும் பணியில் ஈடுபட உள்ளனர். தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    2013-ம் ஆண்டு சிறப்பு தகுதி தேர்வு பெற்றவர்கள் 35 ஆயிரம் பேர் பணி இன்றி உள்ளனரே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார். #ministersengottaiyan #gajacyclone #school

    மானாமதுரை தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை அதை யாராலும் அசைக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். #Sengottaiyan
    திருப்புவனம்:

    திருப்புவனத்தில் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய நகர செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:- மானாமதுரை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரப்போகிறது. இந்த தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டை அதை யாராலும் அசைக்க முடியாது. 2019 ஜனவரி மாதம் முதல் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சீருடை மாற்றப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பேசினர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், ராஜேந்திரன், திருப்புவனம் யூனியன் முன்னாள் துணை தலைவர் புவனேந்திரன், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் அழகுமலை, மடப்புரம் காலனி கிளை செயலாளர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல இளையான்குடியில் நடந்த கூட்டத்திற்கு இளையான்குடி நகரகுடி கூட்டுறவு வங்கி தலைவர் பாரதிராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செங்கோட்டையன், பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் மானாமதுரை இடைத்தேர்தலுக்காக பல வியூகங்கள் அமைத்து உள்ளோம். தொகுதி பொறுப்பாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமித்துள்ளனர். முதல் கட்டமாக ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளோம், தமிழகத்திலேயே மானாமதுரை சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி அனைத்து பணிகளையும் நிறைவேற்றுவோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நெட்டூர் நாகராஜன், நகர செயலாளர் அன்வர், மாவட்ட பொருளாளர் ரத்தினம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    வரும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் மாற்றுக்கட்சியிலிருந்து வெளிவந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

    அவர்களுக்கு அமைச்சர் பொன்னாடை போர்த்தியும் டி-சட்டைகள் வழங்கியும் கவுரவித்தார். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நல்லமழை பெய்து ஏரி குளங்கள் அணை நிரம்பியுள்ளதே தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. மாணவர்களுக்கு மடிக்கணினி மிதிவண்டி வழங்கும் சிறப்பான பல அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகிறது.

    தமிழகத்தில் தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது. மத்திய அரசின் ஐசிடி நிதியுதவியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கவும் கணினிகள் அமைக்கவும் நேற்றைய முன்தினம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் டெண்டர்கள் முடிவடைந்து பணிகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடையும் போது இந்தியாவே திரும்பிப் பார்கின்ற ஒரு மாற்றத்தை தமிழகம் உருவாக்கும்.

    இந்த டெண்டர்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் ஸ்மார்ட் வகுப்பறைகள் கணினிகள் அமைந்து நான்கு ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பாசிரியர்கள் கலந்தாய்வு விரைவில் நடைபெறும். அது முடிந்தவுடன் சிறப்பாசிரியர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.


    நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொதுத் தேர்வுகளையும் மாணவர்கள் சந்திக்கும் வகையில் 40 சதவிகித பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    வருகிற இடைத்தேர்தலுக்காக கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூத் கமிட்டியில் ஏராளமான இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் பூத் கமிட்டிபோல் மத்தியில் உள்ள தேசிய கட்சிகளில் கூட இல்லாத அளவிற்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. வரும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு வீடுகள் ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ADMK #Sengottaiyan
    கோபி:

    பலத்த மழையால் கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்.

    அப்போது அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    கீரிப்பள்ளம்ஓடையில் அதிகமாக தண்ணீர் வந்ததால்தான் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

    இதேபோல் சம்பவம் இனியும் நடக்காமல் இருக்க கீரிப்பள்ளம் ஓடைப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

    அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோபி அருகே உள்ள அளுக்குளியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அங்கு அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும்.

    மேலும் கீரிப்பள்ளம் ஓடையில் கான்கீரிட்தளம் அமைக்கப்படும். ஓடையில் உள்ள தண்ணீரை மறு சுழற்சி முறையில் விவசாயத்துக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    அமைச்சருடன் கோபி தாசில்தார் வெங்கடேசன், ஆணையாளர் சுதா, நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், முன்னாள் நகர் மன்ற தலைவர்கள் சுப்பிரமணியம், கந்தவேல்முருகன் ஆகியோர் சென்றிருந்தனர். #ADMK #Sengottaiyan
    தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பிளஸ் 2 முடித்தவுடன் ஆடிட்டர் படிப்பிற்கு 25 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    கோபி:

    கோபியில் கீரிப்பள்ள ஓடை, ஈரோடை அமைப்பு சார்பில் தூர்வாரப்பட உள்ளது. இன்று காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பணியைத் துவக்கி வைத்தார்.

    தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் இந்த அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் 2.85 லட்சம் ஆடிட்டர்கள் தான் உள்ளனர். தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பிளஸ் 2 முடித்தவுடன் மாணவர்களுக்கு ஆடிட்டர் படிப்பிற்கு தமிழகத்தில் முதற்கட்டமாக 25 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    பின்னர், அவர்களுக்கு சிறந்த ஆடிட்டர்களைக் கொண்டு முதன்மைத் தேர்வு எழுத பயிற்சியளிக்கப்படும்.



    தமிழகத்தில் 52 ஆயிரம் குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் துவக்கப்பட உள்ளன. இதற்கு தாய்மொழிதான் முன்னுரிமை அளிக்கப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில் வழியில் படிக்க வைக்க வேண்டும் என விரும்பினால் ஆங்கில வழி கல்வியும் கற்றுத் தரப்படும். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் செயல்படும் இந்த அரசு இருமொழி கொள்கையைப் பின்பற்றும்.

    பள்ளிகளில் மாணவிகள் பாலியில் தொந்தரவுக்கு ஆளானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பழைய வரலாறு மாறாத வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். கோபியை குப்பையில்லாத நகரமாக மாற்ற ரூ.3 கோடியே 86 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரூ.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் கீரிப்பள்ள ஓடையை கான்கிரீட் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan

    தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடப்பதால்தான் தினமும் மழை பெய்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #ADMK #MinisterSengottaiyan

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி பெரியார்திடலில் அதிமுக வின் 47-வது ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசியதாவது:-

    பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் சத்துணவுத்திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொட்டில் குழந்தை திட்டம், மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், லேப்டாப் வழங்கும் திட்டம், உள்ளிட்ட பல என்னற்ற திட்டங்களைக் கொண்டு வந்து தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கினார்.

    அவர் மறைந்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான இந்த ஆட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நிறைவேற்றி வருகிறது. அதிமுகவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரை இக்கட்சியை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.


    அதிமுகவில் சாதாரண தொண்டர்கள் கூட மிகப்பெரிய பதவிக்கு வரலாம் என்ற நிலை உள்ளது. திமுக போல குடும்ப அரசியல் அதிமுகவில் இல்லை. திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் மின்வெட்டால் இருண்டு கிடந்தது. மின்வெட்டை கண்டு பிடித்தவர் அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆவார். இந்த ஆட்சியில் அனைவருக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு, மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. திருப்பரங்குன்றம், திருவாரூர் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும். துணிச்சல் இருந்தால் தி.மு.க. தனியாக போட்டியிட தயாரா?

    தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான நல்ல ஆட்சி நடைபெறுவதால் தான் தினமும் மழை பெய்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கல்வித்துறையில் வரும் மார்ச் மாதத்திற்குள் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. மேலும், 3ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்படும். பிளஸ் 2 முடித்தவுடன் வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய கல்வி வழங்கப்படும்.

    1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் சீருடைகள் மாற்றம் செய்யப்படும். கோபியில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது. மேலும், அத்தாணி-சத்தி சாலை, ஈரோடு -நீலகிரி சாலை, கோபி -பெருமாநல்லூர் சாலை ஆகியவை 4 வழிச்சாலைகளாக மாற்றப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். #ADMK #MinisterSengottaiyan

    அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் நடந்த ஒரு விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து பாலித்தீன் பயன்பாடு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். இதற்கான நடவடிக்கையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எடுத்து வருகிறார். விஜயதசமியை முன்னிட்டு எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. சேர்க்கை எண்ணிக்கை பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.



    கிராமப்புறங்களில் உள்ள மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஏழை-எளிய மக்களுக்காகத்தான் பள்ளிக்கல்வித்துறை இயங்கிக்கொண்டு இருக்கிறது. வசதி படைத்தவர்கள் தனியார் பள்ளிகளுக்குத்தான் செல்கிறார்கள். பொதுமக்களை பொறுத்தவரையில் தங்கள் குழந்தைகள் அனைவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மோகம் இருக்கிறது.

    இதுதொடர்பாக சமூகநலத்துறை அமைச்சருடன் நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து தமிழக அங்கன்வாடிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவ-மாணவிகள் அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்ப்பதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.  #MinisterSengottaiyan
    மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள காசிபாளையம் பணிமனையில் இன்று புதிதாக 5 பஸ்கள் இயக்க தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம். கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பஸ்கள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனவரி மாதத்திற்கு பிறகு பாலிதின் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆறு மாத காலத்திற்கு முன்பாகவே அனைவரையும் அழைத்துப் பேசி இருக்கிறார்கள். அதனடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையிலும் மிக விரைவில் அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

    ஒவ்வொரு பள்ளியிலும் மாவட்ட வாரியாக பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழுமையாக பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்த கூடாது என்ற நிலைவரும். இது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    போக்குவரத்து துறை பொறுத்தவரை அதிமுக ஆட்சிக் காலம் பொற்காலமாக அமைந்துள்ளது. ஈரோடு மண்டலத்திற்கு மட்டும் 112 புதிய வாகனங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 51 வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன.

    மேலும் 56 வாகனங்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று மட்டும் 5 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன.


    மனித நேயத்தோடும் மக்களின் நலன் கருதி இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு லாப நோக்கம் இல்லாமல் இந்த பணிகள் தொடர்ந்து செய்து வருகிறோம்.

    போக்குவரத்து தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் வாகனங்களுக்கு ஏற்ப தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்கள் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறித்து கேட்டபோது அமைச்சர் கூறியதாவது:-

    இதற்கு நான் பதில் கூற விரும்பவில்லை. என்னை பொறுத்த வரை இந்த அரசு சிறப்பான முறையில் எந்த பணிகளை ஆற்ற வேண்டும் என்று கருதுகிறதோ அதை ஆற்றி வருகிறது

    எதிர்க்கட்சி என்ற முறையில் பல கருத்துக்கள் சொல்கின்றது. அதை நேரடியாக கருத்துக்கள் பரிமாறும் போதுதான் சட்டமன்றத்தில் பதில் அளிக்க இயலும். மற்றபடி இப்போது நான் கருத்து கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 257 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். #MinisterSengottaiyan
    சென்னை:

    தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு கட்டிட அனுமதி பெறவேண்டும் என்று நிபந்தனை விதித்து 2018-2019 கல்வியாண்டுக்கு மட்டும் அரசு தற்காலிக அங்கீகாரம் வழங்கிவருகிறது. அதன்படி இதுவரை 1,153 பள்ளிகளுக்கு அரசு அங்கீகார ஆணை வழங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 257 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஆணைகளை 7 பேருக்கு மேடையில் வழங்கினார். பின்னர் மீதமுள்ள 250 பேருக்கும் அவர்களின் இருக்கைக்கு சென்று வழங்கினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சத்யா, விருகை ரவி, மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குனர் எஸ்.கண்ணப்பன், இணை இயக்குனர் உஷாராணி, காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வரவேற்றார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி நன்றி கூறினார்.

    பின்னர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவர்களின் நலன்கருதி அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு இந்த வருடத்திற்கு மட்டும் அங்கீகார ஆணை வழங்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான இறுதி முடிவு 2 வாரத்தில் அறிவிக்கப்படும்.



    அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகள் வரும்போதும், பள்ளியைவிட்டு செல்லும்போதும் அவர்களின் உருவம் ரேடியோ பிரீக்வன்சி தொழில்நுட்ப (ஆர்.எப்.ஐ.டி.) கருவியில் பதிவாகி அவர்களின் பெற்றோர் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி கொண்ட நவீன கருவி ஒரு பள்ளியில் பொருத்தப்பட்டுள்ளது. மாணவிகள் அதிகம் படிக்கும் குறைந்தது ஆயிரம் அரசு பள்ளிகளில் இந்த கருவியை பொருத்துவது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.

    இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளுக்கான விடைத்தாள்களும் (ஓ.எம்.ஆர். ஷீட்) டெல்லியில் உள்ள எந்திரம் மூலம் தான் ஸ்கேன் செய்யப்பட்டது. பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் 192 பேரின் மதிப்பெண்கள் மாறியிருந்தது. எனவே இதுகுறித்து போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த எந்திரத்தை நாங்கள் வாங்க இருப்பதால் இனிமேல் தவறு நடக்காது.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். #MinisterSengottaiyan
    கடந்த 4-ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #ADMK #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி அருகேயுள்ள லக்கம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ல.கள்ளிப்பட்டி, நல்லகவுண்டம்பாளையம், தொட்டிபாளையம், கரட்டடிபாளையம், வெள்ளாங்காட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி செலவில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

    இதற்கான பணியை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வருகிற நவம்பர் மாதத்திற்குள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வரப்படும்.

    கோப்புப்படம்

    மத்திய அரசின் உதவியோடு அடல் டிங்கர் லேப் எனப்படும் அறிவியல் ஆய்வகங்கள் பள்ளிகளில் அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    சீருடைகள் மாற்றத்தில் மாணவர்களின் அளவுகளுக்கு ஏற்ப அந்தந்த ஊர்களில் சமூக நலத்துறையின் மூலமாக பள்ளிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளுக்கு அளவெடுத்து தைப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    கடந்த 4-ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் வகையில் பள்ளி கட்டிங்களை ஆய்வு செய்ய கல்வி அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் மூலம் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழை வரும் பொழுது மாணவர்கள் பாதிக்காத வகையில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

    நம்பியூர் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். வரும் பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    மழையின் தன்மைக்கேற்ப அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அளித்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் கே வி ராமலிங்கம், கே எஸ் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கேசி கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு 343 பெண் பயனாளிகளுக்கு மானிய விலையிலான ஸ்கூட்டர்களை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்,


    மறைந்த ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக பாலித்தீன் பயன்படுத்தாத ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் கல்வித்துறையை பொறுத்தமட்டில் நவம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய சீருடையை நேற்று முதலமைச்சர் ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.

    வருகின்ற ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் நான்கு வகையான இலவச சீருடைகள் வழங்கப்படும். 11வது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதியில் இலவச சைக்கிள் வழங்கப்படும். 670 பள்ளிகளில் அதிநவீன விஞ்ஞான ஆய்வு கூடமான அடல் லேப் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கணினிமயப்படுத்தவும் ‘யூ டியூப்’ மூலம் பாடம் கற்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறந்த தேசிய தூய்மை பள்ளிகள் தமிழகத்தில் 6 பள்ளிகளும் பாண்டிச்சேரியில் இருந்து பள்ளிகள் மற்றும் குஜராத்தில் ஐந்து புள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

    தமிழகத்திலுள்ள 54 ஆயிரம் பள்ளிகளும் தூய்மையாக தான் இருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் சிறப்பு ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மழைக்காலத்தில் எவ்வாறு பள்ளிக்கு வந்து செல்வது என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையின் தன்மைக்கேற்ப அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அளித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    வரும் நவம்பருக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் தொடக்க விழா இன்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் முதன் முதலாக சென்னையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதி நவீன ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டு உள்ளது.

    அதைத்தொடர்ந்து கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளது. இது புதுமையான திட்டம் ஆகும்.

    இதன் மூலம் அனைத்து மாணவர்களும் புரிந்து கொண்டு படிக்கலாம். மாணவர்கள் பல்வேறு உலக செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

    தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. வரும் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை புதிய சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.

    கோப்புப்படம்

    வரும் நவம்பருக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும். மேலும் 9.11,12 ஆகிய அனைத்து வகுப்புகளும் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

    இந்த ஆண்டு முதல் பிளஸ்-2வில் 600 மதிப்பெண் எடுத்தாலே உயர் கல்விக்கு செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் இயங்கி வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    பேட்டியின்போது ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியன் உடனிருந்தார். #ADMK #TNMinister #Sengottaiyan #smartclass
    ×