search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Sengottaiyan"

    கொடைக்கானல் பர்கூர் மலைப்பகுதியில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒரு வாரத்துக்கு பிறகு வராவிட்டால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது.

    அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையை தலைமை இடமாக கொண்டு 7 மண்டலங்களில் செயல்பட்டு வந்த அரசு தேர்வுத் துறை அலுவலகம் தற்போது 32 மாவட்டங்களிலும் உதவி இயக்குனர் அலுவலகமாக செயல்பட உள்ளது. இதன்மூலம் குரூப் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

    அதுமட்டுமின்றி அவர்கள் என்னென்ன தேர்வு எழுதலாம் அதற்குரிய சந்தேகங்கள் இனி அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த புதிய அலுவலகத்தில் உதவி இயக்குனர் உள்பட 10 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானல் பர்கூர் மலைப்பகுதியில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்கள் வரவில்லை என்றால் ஒரு வாரம் வரை காத்திருப்போம். அப்படியும் வரவில்லை என்றால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.


    மாணவர்களுக்கு வழங்குவதை போன்று ஆசிரியர்களுக்கும் வரும் கல்வியாண்டு முதல் மடிக்கணினி வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் மாணவர்களின் ஆதார் பதிவு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் எங்கு சென்றாலும் அவர்கள் பற்றிய விவரம் மதிப்பெண்களை தெளிவாகத் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    அரசாணை நகலை எரித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு செங்கோடம் பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிததாக பள்ளிகூடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரசிங் மூலம் புதிய பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

    இன்று தமிழகம் முழுவதும் 250 பள்ளிகள் புதிதாக முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 3 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 கோடியே 22 லட்சம் ஆகும்.

    மேலும் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பள்ளிகளும் படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.

    ரூ.7,500 க்கு சம்பளம் பெறும் சிறப்பு ஆசிரியர்கள் எங்கு பற்றாக்குறை உள்ளதோ அங்கு அவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்படுவார்கள். தென் மாவட்டங்களில் கூடுதலாக 6 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் வட மாவட்டங்களில் 4 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிய வருகிறது.


    பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    இடைநிலை பணி இடம் மாறுதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. வழக்கை தொடர்ந்தவர் ஆசிரியரும் இல்லை. இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த அரசானது தூய்மையாகவும், நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த அரசுக்கு எந்த பள்ளிகளையும் மூடும் எண்ணம் இல்லை.

    வரும் கல்வி ஆண்டு முதல் அங்கன்வாடியில் படிக்கும் 51ஆயிரத்து 214 மாணவர்களை எல்.கே.ஜி வகுப்புகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நபர் குழு அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து வருகிறது.

    அரசாணை நகலை எரித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    திண்டிவனம் அருகே தழுதாளி பள்ளியில் வழங்கப்பட்ட இலவச சைக்கிளில் கர்நாடக அரசு முத்திரை வந்தது எப்படி? என்று கல்வி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். #FreeCycles
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1-ந்தேதி மாணவ- மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்.

    மாணவர்களுக்கு வழங்குவதற்காக பள்ளி வளாகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில சைக்கிளின் முன்புற கூடையில் வட்ட வடிவில் இருந்த முத்திரையில் மாணவி ஒருவர் படிப்பதுபோன்ற படம் இருந்தது. கன்னட மொழியில் ‘சார்வசனிகா சிக்சனா இலாகே, கர்நாடக சர்காரா’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் முத்திரையில்லாமல் கர்நாடக மாநிலத்தின் முத்திரையுடைய சைக்கிள்கள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கர்நாடக அரசு, அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்துவிட்ட நிலையில் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 204 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு 59,856 விலையில்லா சைக்கிள்கள் வழங்க ஒப்புதல் பெறப்பட்டது. அவற்றில் இதுவரை 39,542 சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. தழுதாளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 600 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    இவற்றில் 10 சைக்கிள்களில் மட்டும் கர்நாடக மாநில முத்திரை கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கூடை தவறுதலாக பொருத்தப்பட்டது கண்டறியப்பட்டு அவை அகற்றப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வழங்கப்படும் சைக்கிள்கள் ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 12 கூடைகள் அடங்கிய 1 பெட்டி வீதம் 15 பெட்டிகளில் 180 கூடைகள் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவைகளில் தழுதாளி அரசு பள்ளியில் 10 சைக்கிள்களிலும், தைலாபுரம் அரசு பள்ளியில் 5 சைக்கிள்களிலும், கொந்தமூரில் 66 சைக்கிள்களிலும், கிளியனூரில் 18 சைக்கிள்களிலும், கரசானூரில் 81 சைக்கிள்களிலும் கர்நாடக அரசின் முத்திரை பொருத்தப்பட்டது கண்டறியப்பட்டு அவை உடனே அகற்றப்பட்டது. மற்றபடி கூடையை தவிர சைக்கிளின் மற்ற உதிரிபாகங்கள் அனைத்தும் தரமாக தமிழகத்திற்காக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகும். தற்போது அந்த சைக்கிள்களில் தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #FreeCycles
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். #Sengottaiyan #GajaCyclone
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் குருமந்தூர் மேட்டில் நம்பியூர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபி அரசு உதவி பெறும் வைர விழா பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சைக்கிள்கள் வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட பள்ளிகளில் இதுவரை பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் அரையாண்டு தேர்வை தள்ளி வைப்பதில் சிரமம் உள்ளதாக துறை ரீதியாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    புதிய பாடத்திட்டத்தில் வரலாறு பாடத்தில் ஆங்கிலேயர்களின் பெருமை அதிகம் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரலாற்றை பொருத்தவரை தேசிய தலைவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் போன்றவர்களுடைய வரலாறும் இடம் பெற்றுள்ளது.

    ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்து மற்றொரு கல்வி மாவட்டத்திற்கு பொதுத் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை. கல்வி மாவட்டங்கள் வேறாக இருந்தாலும் மதிப்பெண்கள் வழங்குவதில் எந்த குறைபாடும் இருக்காது.


    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திண்டிவனத்தில் தரமற்ற சைக்கிள்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஜனவரி 1-ந் தேதி முதல் பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan #HalfYearlyExam #GajaCyclone
    இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #NEETExam
    கோபி:

    கோபியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு 723 மாணவ-மாணவிகளுக்கு ரூ.26¾ லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி பேசினார்.

    முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பள்ளி கல்வி துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    மேலும் பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவும் அதன் மூலம் மாணவ-மாணவிகளின் எதிர்காலம் பிரகாசமாக அமையவும் இந்த அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும்போதே அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிகணினி மற்றும் சைக்கிள்கள் வழங்கப்படும். மத்திய அரசுடன் இணைந்து ஜனவரி மாத இறுதிக்குள் 671 பள்ளிகளில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.



    இந்த ஆண்டில் நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு தேர்வு மையங்கள் மண்டல வாரியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் ஒரு வார காலத்துக்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முறைப்படி நிரப்பப்பட்டு உள்ளது. சிறப்பாசிரியர்கள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

    அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்கும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #NEETExam
    ஜனவரி 1-ந்தேதி முதல் அரசு பள்ளியில் பிரிகே.ஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ministersengottaiyan #governmentschool #prekglkgukg

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் ஊராட்சி செம்மம் பாளையத்தில் உள்ள கால்நடை கிளை மருத்துவ மனை தரம் உயர்த்தப்பட்டு திறப்பு விழா நடந்தது. கூடுதலாக ஒரு உதவி மருத்துவர் கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதன் திறப்பு விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

    விழாவில் தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்ட மருத்துவ மனையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம், கோழி வளர்ச்சி திட்டம், கால்நடை பசுந்தீவன திட்டம், கால்நடை காப்பீடு திட்டம் விலையில்லா ஆடுகள் திட்டமும் செயல்படுத்தப்படும்.

    பள்ளி கல்வி துறையில் மாணவ-மாணவிகள் பயன்படும் வகையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 1-ந்தேதி முதல் அரசு பள்ளியில் பிரிகே.ஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும். அடுத்து வரும் கல்வி ஆண்டில் ஆரம்பம் முதலே இலவச சைக்கிள் வழங்கப்படும்.

    இந்த ஆண்டு 11 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. பெற்றோர்கள் ஒரு ரூபாய் கூட கல்விக்காக கொடுக்க வேண்டியது இல்லை. அனைத்தும் அரசே ஏற்கும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ministersengottaiyan #governmentschool #prekglkgukg 

    பள்ளிக்கு வெள்ளி கொலுசுகளை மாணவிகள் அணிந்து வந்தால் கவன சிதறல் ஏற்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனவரி மாதம் சிறப்பு ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

    கஜா புயல் காரணமாக விண்ணப்பம் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேசிய திறன் பயிற்சி கஜா புயல் காரணமாக வருகிற 15-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 18 ஆண்டுகளாக பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு 3242 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. தற்போது புதியதாக 750 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


    அவரிடம் மாணவிகள் பூ வைக்கவும், கொலுசு அணியவும் பள்ளிக்கல்வித்துறை சார்வில் தடை விதிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்,  "மாணவர்கள் பள்ளிக்கு விலை மதிப்புமிக்க அணிகலன்கள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.

    வெள்ளி கொலுசுகளை மாணவிகள் அணிந்து வந்தால் கவன சிதறல் ஏற்படும். மாணவிகள் பூ வைத்து வர எந்த தடையும் இல்லை" என்று கூறினார். #TNMinister #Sengottaiyan
    வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது.

    மாவட்ட கலெக்டர் கதிரவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார்.

    அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 723 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    தமிழகத்தில் 11 லட்சத்து 11 ஆயிரம் சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.


    மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச புத்தகங்கள் வழங்கப்படும். அதுபோலவே பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும்.

    மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சீருடைகள் மாற்றியமைக்கப்பட உள்ளது. இதில் அரசே 4 சீருடைகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும்.

    தமிழக அரசு தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. யூடிப் மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் 628 பள்ளிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகம் உருவாக்கப்படும்.

    மேலும் 9 ,10, 11, 12 ஆகிய வகுப்புகள் வரும் ஜனவரி மாதம் முதல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு இணையதள வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    இவர் அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என்றும் ரத்தாக வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #GajaCyclone #MinisterSengottaiyan
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, வைத்திலிங்கம் எம்.பி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு வழக்கம் போல் நடைபெறும். ரத்தாக வாய்ப்பு இல்லை.


    மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் 84 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய அரசு பரிசீலனை செய்தால் அதற்கான நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ளும்.


    டெல்டா மாவட்டங்களில் முழுமையான பாதிப்புள்ளாகிய மாணவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கலாம் என முதல்- அமைச்சரிடம் ஆலோசித்து பின்னர் நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterSengottaiyan
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #MinisterSengottaiyan #DeltaDistricts
    தஞ்சாவூர்:

    கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயலினால் பலர் உயிரிழந்தனர். வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன.

    வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.



    இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நாளை மாலைக்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    பள்ளிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்றும், பள்ளிகளில் விழுந்த மரங்களில் 70% அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் 45 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #DeltaDistricts

    தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அதன் அறிக்கைகளை நாளை முதல்வரிடம் வழங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #GajaCyclone #MinisterSengottaiyan
    தஞ்சாவூர்:

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் அதிக சேதமடைந்துள்ளது. இதற்காக அனைத்து துறை அதிகாரிகளும், அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரண உதவிகள் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதா கிருஷ்ணன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரை நியமித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு, கடம்பூர்ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், ஒரத்தநாடு ராமச்சந்திரன், சாக்கோட்டை அன்பழகன், கோவி.செழியன் மற்றும் அ.தி.மு.க முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், பால்வள தலைவர் காந்தி, அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது நாங்கள் தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அதன் அறிக்கைகளை கணக்கெடுத்து முதல்- அமைச்சர் நாளை சேத பகுதிகளை பார்வையிட வரும் போது அவரிடம் சமர்பிப்போம்.


    இந்த புயலால் அதிக அளவில் தென்னை மரங்கள், வாழை மரங்கள், மின்கம்பங்கள், நெற்பயிர்கள், வெற்றிலை போன்றவை சேதமடைந்துள்ளது. மேலும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகள் அதிக அளவில் சேதமடைந்துள்ளது.

    அதி நவீன எந்திரங்களுடன் மின் இணைப்புகளை சரி செய்து கொண்டு இருக்கிறோம். மேலும் சில பகுதிகளில் இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது எங்களுக்கு எரிபொருள் தேவை என்கின்றனர். அவர்களுக்கு தேவையான எரிபொருள் உடனடியாக அனுப்பப்படும். மேலும் அவர்கள் செய்த செலவு தொகையும் அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterSengottaiyan
    கஜா புயலால் ஒரு சில இடங்களில் பள்ளி பாட புத்தகம் சேதம் அடைந்துள்ளது. அது பற்றி நேரில் ஆய்வு செய்வேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ministersengottaiyan #gajastorm

    ஈரோடு:

    செங்குந்தர் பள்ளி கழக பவள விழா கொண்டாட்டம் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. பவள விழாவின் நிறைவு நாளான இன்று செங்குந்தர் பள்ளி வளாகத்தில் பவள விழா நினைவு வளைவு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்குந்தர் கல்வி கழகத்தின் தலைவர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் சிவானந்தன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், சேவூர் ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பவள விழா நினைவு வளைவை திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-

    மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செங்குந்தர் பள்ளியில் ஒரு ஆங்கில வழி வகுப்பு உள்ளது. இப்போது கூடுதலாக மேலும் ஒரு ஆங்கில வழப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

    1 முதல் 5 வகுப்பு வரையும், 6 முதல் 8 வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட 4 புதிய இலவச சீறுடைகள் வரும் கல்வி ஆண்டில் வழங்கப்பட உள்ளது.

    6 முதல் 8 -ம் வகுப்பு வரை 3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்டுகிளாஸ் தொடங்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்பு முதல் அணைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் கணினி மயமாக்கப்பட்டு அதில் இணையதள வசதி செய்து கொடுக்கப்படும்.

    நீட் தேர்வுக்காக 26 ஆயிரம் மாணவர்களுக்கு 412 மையங்களில் ஆன் லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பட்டயகணக்காளர் உருவாக்கும் வகையில் பிளஸ் -2 முடித்த மாணவர்களுக்கு 500 பட்டய கணக்காளர் கொண்டு பயிற்சி அளிக்கபட உள்ளது. இதற்காக 405 பட்டய கணக்காளர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர்.

    மூச்சி நின்றால் மட்டும் மரணம் இல்லை. முயற்சி நின்றாலும் மரணம் தான். எனவே மாணவர்கள் முயற்சி செய்து நம்பிக்கையுடன் படிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

    தமிழகத்தை பொறுத்த வரை இந்தியாவுக்கே சிறந்த முன்னோடி மாநிலமாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. முதல்வரும், துணை முதல்வரும் ஒன்றிணைந்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் தற்போது 3 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட உள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அப்படி ஒரு எண்ணமே இல்லை. ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது.

    அந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகபடுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்காக அந்தந்த பள்ளி நிர்வாகிகள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.


    கஜா புயலால் ஒரு சில இடங்களில் பள்ளி பாட புத்தகம் சேதம் அடைந்துள்ளது. எவ்வளவு பாட புத்தகங்கள் சேதமடைந்துள்ளது என்பதை நான் அங்கு நேரடியாக சென்ற பின்பு தான் கூற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க் கள், கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ராஜாகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், ஜெயராஜ், முருகு சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்களை அமைச்சர்கள் வழங்கினர். பவள விழா மலரையும் வெளியிட்டனர்.  #ministersengottaiyan #gajastorm

    ×