search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Sengottaiyan"

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan #PublicExam
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் 174 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச ஆடுகள் வழங்கினர்.

    பிறகு அமைச்சர் செங்கோட்டையன் கோபி கரட்டூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நுழைவு வாயிலையும் பார்வையிட்டார். அதில் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டையும் பார்வையிட்டார்.

    அதன் பிறகு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:

    கோபி நகராட்சி நுழைவு அலங்கார வளைவில் காமராஜரின் பெயர் பொறித்த கல்வெட்டு இடம்பெறும். காமராஜருக்கு புகழ்சேர்க்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    காமராஜரின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய தலைவர்கள் அத்தனை பேருக்கும் புகழ் சேர்க்கின்ற அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தூய்மை பாரதம் இந்தியா என்றாலும் கூட தமிழகம் தான் பாலித்தீன் இல்லாத மாநிலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பள்ளிக் கல்வித்துறையில் வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

    மாணவ- மாணவிகளின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது அரசின் நிதிநிலையை பொறுத்து படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

    பள்ளிகளுக்கு தனியாக துப்புரவு தொழிலாளர்களை அமர்த்த முடியாத சூழல் உள்ளது. இது குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும்.



    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும். பொறுத்திருந்து பாருங்கள். நல்ல பதில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan #PublicExam

    மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #MinisterSengottaiyan #JactoGeo
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு சிறந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கினார். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று தமிழக முதல்வரை சந்தித்து பேச உள்ளேன்.

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற தொழில் அதிபர்கள் மாநாட்டின் மூலம் 3 லட்சத்து 41 ஆயிரம் கோடி அன்னிய முதலீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றபட்டுள்ளது.

    தமிழக இளைஞர்கள் 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெரும் வகையில் தொழில் தொடங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசாக 2 கோடியே 17 லட்சம் குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கல்வி திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி தரம் உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan #JactoGeo



    போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மீது டெஸ்மா சட்டம் பாயுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். #JactoGeo #Sengottaiyan
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர் களிடம் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும். பொதுத் தேர்வு நடைபெற உள்ள இந்த நேரத்தில் வேலை நிறுத்தம் என்பது மாணவர் சமுதாயத்துக்கு பெரும் சங்கடத்தை உருவாக்கும். எனவே போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அரசின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.

    இன்றுதான் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக போகத்தான் இதை கண்காணித்து முதல்- அமைச்சருடன் கலந்து பேசி என்ன முடிவு எடுக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும்.

    ஆசிரியர்களுக்கும் துறை சார்பில் தேவையான அறிவுரையும் வழங்கப்பட்டு உள்ளது.


    போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா சட்டம் பாயுமா? என்ற சிக்கலான கேள்விகளை கேட்கக் கூடாது.

    இந்த போராட்டம் தொடருமா? தொடராதா? என்பது நாளைதான் தெரிய வரும். அதன் பிறகு இதில் என்ன முடிவு எடுப்பது என்பதை அமைச்சர்கள் முடிவு செய்வார்கள்.

    எனவே மனித நேயத்தோடு ஆசிரியர்களும் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #Sengottaiyan
    அடுத்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கினர்.

    அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    அடுத்த ஆண்டு முதல் ஒன்று முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு புதிய வண்ண யூனிபார்ம் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பாடப்புத்தகம் முதல் 14 பொருட்களையும் அரசு வழங்கும்.

    10 ஆண்டுகளாக பிளஸ்-2 மாணவர்கள் படித்து வந்த பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாட திட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அரசு பள்ளியில் படித்த 1,000 மாணவ- மாணவிகளை மருத்துவ மேல்படிப்புக்கு தேர்வாக வைப்பதே எங்களது இலக்கு.

    அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகப்படுத்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும். 9,10,11,12-ம் வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் வசதி செய்து தரப்படும். பிப்ரவரியில் மாணவர்களுக்கு மடி கணினி வழங்கப்படும்.

    அடுத்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். உலக அளவில் தமிழக மாணவர்களின் கல்வி தரம் உயர அன்றைய வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் செல்போன் மூலமாக ‘‘யூ டியூப்பில்’’ பார்க்கலாம். அன்றைய தினம் பள்ளிக்கு வராத மாணவர்கள் ஓய்வு நேரங்களில் பாடங்களை படிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    தமிழக விளையாட்டுத் துறையில் விரைவில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #MinisterSengottaiyan
    கோபி

    கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இந்து அறநிலையத்துறை சார்பில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள தேர்கள் மாற்றி புதிய தேர்கள் அமைக்கப்படும்.

    பொங்கல் பரிசு ரூ.1,000 சர்க்கரை கார்டு உள்ளவர்களுக்கும் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு சொல்லி தர ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    தமிழக விளையாட்டுத் துறையில் விரைவில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும். கோபி செட்டிபாளையத்தில் உள் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த மைதானம் அமைக்கப்படும்.


    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தேர்தலுக்கு முன்பே ஒன்று முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் முழு ஆண்டு தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறித்த நாளில் திட்டமிட்டப்படி தேர்வுகள் நடக்கும்.

    தமிழக அரசு சார்பில் கல்விதுறைக்கு என தனியாக ஒரு சேனல் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்களை மாணவர்கள் குருவாக நேசிக்கவும், பெற்றோர்களை நேசிக்கவும் இந்த சேனல் பயன்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    பேட்டியின்போது அருகில் அமைச்சர் கே.சி.கருப்பணன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர். #MinisterSengottaiyan #Plus2
    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்படுகிறது. இதன் ஒளிபரப்பு வருகிற 21-ந்தேதி முதல் தொடங்குகிறது. #EducationTVChannel
    சென்னை:

    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்படுகிறது.

    இதன் ஒளிபரப்பு வருகிற 21-ந்தேதி முதல் தொடங்குகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின் பேரில் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில் இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர் தொலைக்காட்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கல்வி தொலைக்காட்சிக்கான ஸ்டூடியோ சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வகை கேமராக்கள், படப்பிடிப்பு கருவிகள், ஆளில்லா விமானம் ஆகியவற்றுடன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    கல்வித்துறையின் செயல்பாடுகள், மானியங்கள், நலத்திட்ட உதவிகள், பாடத்திட்டங்கள் குறித்து விளக்கும் புதிய முறைகள், கல்வித்துறையில் சிறப்பாக திறன்களை வெளிப்படுத்தி வரும் ஆசிரியர்களை பற்றிய நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு கிடைக்கும் உதவிகள், இதன்மூலம் அவர்கள் கல்வி கற்கும் திறன் போன்றவற்றை கல்வி தொலைக்காட்சி தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தும். ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து சாதனையாளர்களாக வருவது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு அறநெறி குறித்த வகுப்பு, சாலை போக்குவரத்து விதிகள், விளையாட்டு பயிற்சி, தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து திறமைகளை வளர்க்கும் வகையில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அமையும்.

    பள்ளிகளின் பராமரிப்பு, சிறந்த உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகள், அரசு பள்ளிகளில் ஜொலிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களை கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி தமிழக அரசின் கேபிள் டி.வி.யில் 200-ம் இடத்தில் இடம் பிடித்துள்ளது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை திறந்து வைக்கிறார். #EducationTVChannel
    தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan
    அம்பத்தூர்:

    அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜெ.ஜெ.நகர் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை, பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, தானியங்கி வருகை பதிவேடு துவக்க விழா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட வேதியியல் ஆய்வகம் திறப்புவிழா நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு மிதிவண்டியில் செல்லும் மாணவர்கள் விமானத்தில் பறக்கும் அளவிற்கு அரசு மாணவர்களின் கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

    ஆந்திரா,கேரளா போன்ற மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு செல்லும் மற்ற மாநில மாணவ மாணவிகளை விட தமிழக மாணவ மாணவிகள்தான் அதிக ஈர்ப்பு தன்மையுடன் கல்வியை கற்பதாக அங்குள்ள பயிற்சியாளர்கள் பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.

    வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் 1 முதல் 5-ம்வகுப்பு வரையும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் வண்ண வண்ன நிறத்தில் சீருடைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


    9 முதல் 12-ம்வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகள் கணினி மயமாக்கப்பட்டு இண்டெர் நெட் வசதி செய்து தரப்படும்.

    8,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவு பசியை போக்க மினி மடிக்கணினி வழங்கப்படும், தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    வரும் காலங்களில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலையை போக்கும் வகையில் 12-ம் வகுப்பில் ‘ஸ்கில் டிரெய்னிங்’ எனும் சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டு பிளஸ்-2 முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலைமையை கல்வி துறை செய்துவருகிறது.

    இன்று ஜி.எஸ்.டி.எனும் வரி விதிப்பால் இந்தியா முழுவதும் 135 மக்களில் 25 சதவிதம் பேர் வரி கட்டி வருகிறார்கள். அவர்களுக்கு ஆடிட்டர் எனும் பட்டயகணக்கர் 10 லட்சம் பேர் தேவை. ஆனால் 2.85 லட்சம் பேர்தான் ஆடிட்டர் என்னும் பட்டயகணக்கர் உள்ளனர். எனவே தமிழக அரசு சார்பில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் 5000 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சார்ட்டட் அக்கவுண்ட் எனும் சிறப்பு வகுப்புகள் மூலம் அவர்கள் தயார் செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் முதற்கட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர்பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பா.பென்ஜமின், மாபா.க.பாண்டியராஜன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான வி. அலெக்சாண்டர், மாவட்ட கல்வி அதிகாரி முனைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மேலும் மாவட்ட அவை தலைவர் காசு ஜனார்தனம், பகுதி செயலாளர் என்.அய்யனார், டன்லப் வேலன், கிருஷ்ணன், கே.பி.முகுந்தன், எம்.டி.மைக்கேல்ராஜ், எல்.என்.சரவணன், இ.ஆர்.கே.உமாபதி, கேபிள் ராஜசேகர், முகப்பேர் இளஞ்செழியன், சிமியோன் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #Sengottaiyan #Laptops
    ஆசிரியர் நடத்தும் பாடத்தை யூடிப் மூலம் மீண்டும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் செல்போன் வழியாக மீண்டும் படிக்க முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில் வருமாறு:-

    இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புத்தகங்கள் வாங்குவதற்கும் பதிப்பகங்களை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 11 பேர் கொண்ட கல்வியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா நூலகத்தை மேலும் நவீனப்படுத்த ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தற்போது புதிய பாடத்திட்டங்களை மாணவர்கள் படிப்பதற்காக பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறந்த ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை காணொலி காட்சி மூலம் 1000 பள்ளிகளில் ஒரே நேரத்தில் பார்த்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆசிரியர் நடத்தும் பாடத்தை யூடிப் மூலம் மீண்டும் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் செல்போன் வழியாக மீண்டும் படிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு ரூ.7,500 சம்பளம் பெற்று பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #Sengottaiyan
    கோபி:

    கோபி கலை அறிவியல் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் அனைத்து மதத்தினரும் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கும் வகையில் உள்ளது. மாணவர்கள் ஒழுக்கமுடையவர்களாக சிறந்து விளங்குகிறார்கள். மாணவர்கள் பொது மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்க வேண்டும்.

    கோப்புப்படம்

    தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு மாணவ-மாணவிகளை பெற்றோரே விரும்பித்தான் அனுப்புகிறார்கள். இதுபற்றி பள்ளிகளுக்கு அறிவுரை எடுத்து கூறப்படும்.

    தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர்கள் ரூ.7500 சம்பளம் பெற்று பணிபுரிகிறார்கள். ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு இவர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும்.

    அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து மாணவ- மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
    எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி படிக்கும் அரசு பள்ளி குழந்தைகளுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #Sengottaiyan
    கோபி:

    கோபி அருகே உள்ள நாமக்கல்பாளையத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடந்தது. முகாமில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மனுக்கள் பெற்று குறைகள் கேட்டார்.

    அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளஸ்-2 வகுப்பு முடியும் போதே மாணவ- மாணவிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய பாட திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பள்ளிகளுடன் இணைந்து 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் ‘‘மெய் நிகர்’’ வகுப்பறை அமைக்கப்படும்.

    இந்தாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும் என 4 வகை சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    கோபி அருகே உள்ள கொளப்பலூர் பகுதியில் ஜனவரி மாதம் ஜவுளி பூங்கா அமைக்க அடிக்கல் நடப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 7500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.



    மறைந்த ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் தொடர்ந்து நல்ல புதிய திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகிறார். இதை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி நலமாக வாழ வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
    அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNGovtSchools #Sengottaiyan
    காஞ்சிபுரம்:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலையில் காஞ்சிபுரம் வந்தார். அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்ற அவர் விஜயேந்திரரை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து வழக்கருத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார்.

    பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-


    முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றி வருவதன் மூலம் அனைத்து துறைகளும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கை, நடந்த நிவாரணப் பணிகள் பாராட்டும்படி இருந்தன. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.

    அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களின் பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி ஆசை இதன் மூலம் நிறைவேறும்.

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNGovtSchools #Sengottaiyan
    பள்ளி மாணவர்களுக்கு கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #MinisterSengottaiyan
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பாடங்களை பாதியாக குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முறையில் கரிகுலம் என்று சொல்லப்படுகிற பாடங்களை உருவாக்குகின்றது.

    தமிழகத்தில் இந்த ஆண்டு கொண்டு வருகிற புதிய பாடத்திட்டம் இந்தியாவே வியக்கும் அளவிற்கு இருக்கிறது. இனி கல்லூரிகளுக்கு சென்றால் கூட அவர்கள் பாட திட்டத்தை மாற்றம் செய்ய வேண்டிய அளவிற்கு உருவாகி உள்ளது.

    வருகிற நிதி ஆண்டில் பாடங்களை குறைத்து தேர்வை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. மாணவர்களுக்கு கூடுதல் சுமை உள்ளதாகவும் நாட்கள் போதவில்லை என்றும் கோரிக்கைகள் வந்துள்ளது. இதை அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    மத்திய மந்திரி கூறியிருப்பது சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மட்டும் தான். அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் போன்ற பள்ளிகளுக்கு அவரவர் சிலபஸ் என்பது தனி வகையாக இருந்து வருகிறது.



    மத்திய அரசின் மாணவர்கள் திறனாய்வு தகுதி தேர்வுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    மாணவர்களுக்கு நீச்சலை பெற்றோர்கள் கற்றுத் தரவேண்டும். கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தடுக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    ×