search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டுத்துறை"

    • "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு.
    • தொடக்க விழாவில் பங்கேற்பதாக பிரதமர் மோடி உறுதி.

    பிரதமர் மோடியை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

    "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க சென்றிருந்தார்.

    அதன்படி, டெல்லியில் பிரதமர் இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், " கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்" என்றார். 

    இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜனவரி 19, 2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிற்காக இன்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்ததில் மகிழ்ச்சி.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி, தமிழகத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரிவான நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசின் சார்பில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார். 

    மேலும், தமிழகத்தின் பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும், குறிப்பாக தமிழகத்தில் விளையாட்டுத்துறையின் பன்முக வளர்ச்சி குறித்து பிரதமருடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, 2023ம் ஆண்டுக்கான சிஎம் டிராபி விளையாட்டு மற்றும் தமிழ்நாடு நடத்திய ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பை வெற்றிகரமாக நடத்தியதைக் காட்டும் காபி டேபிள் புத்தகத்தையும் பிரதமரிடம் வழங்கினேன்.

    கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023, தமிழ்நாட்டின் பெறுமைமிக்க அமைப்புத் திறனையும், விளையாட்டுத் துறையில் புகழ்பெற்ற வரலாற்றையும் நிரூபிக்க மற்றொரு நம்பிக்கைக்குரிய வாய்ப்பாக இருக்கும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    • மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சந்தித்தனர்.
    • ஜூன் 15-ம் தேதி வரை எவ்வித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என சாக்ஷி மாலிக் கூறினார்.

    புதுடெல்லி:

    மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை சந்தித்த பிறகு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாசெய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

    டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுகிறது. ஜூன் 15ம் தேதிக்குள் போலீஸ் விசாரணை முடிவடையும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி உள்ளோம், அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

    பாலியல் புகாரில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் 15-ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீதான விசாரணை நிறைவு பெறும். ஜூன் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும்.

    ஜூன் 15-ம் தேதி வரை எந்தவித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என கூறினார். 

    • விளையாட்டுத்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றது முதல் இந்த நேரு ஸ்டேடியத்திற்கு வாரத்துக்கு மூன்று தடவை வந்து விடுகிறேன்.
    • விளையாட்டு போட்டிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.50 கோடி ஒதுக்கி இருக்கிறார்.

    சென்னை:

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழில் பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு இடையான விளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது. போட்டியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்களை தொடர்ந்து நடத்தி எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு லட்சமாவது பணி ஆணையை முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் சமீபத்தில் வழங்கினார். தற்போது அந்த எண்ணிக்கை 1,44,000 ஆக உயர்ந்து வருகிறது. விரைவில் 1.5 லட்சம் மற்றும் 2 லட்சம் என்ற எண்ணிக்கையை இது எட்டப் போகிறது.

    அதிக எண்ணிக்கையிலான பயிற்சி முகாம்கள் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. எனது தொகுதியான திருவல்லிக்கேணியில் மட்டும் பல நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார். இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வேலைவாய்ப்பு என்ற விஷயத்தை பெற முடியும். இந்நிலையில் மாவட்ட அளவிலான என்ற நிலையை கடந்து ஐடிஐ மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டி இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. 102 அரசு ஐடிஐ களில் 92 சதவீத மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இது தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை ஆகும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டும் வகையில் மாநில மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. இதுவரை பள்ளி கல்லூரிகளில் மட்டுமே விளையாட்டு போட்டிகள் நடந்து வந்த நிலையில் முதல் முறையாக மாநில அளவில் ஐடிஐ மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெறுவது மிக முக்கியமானது.

    விளையாட்டு போட்டிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.50 கோடி ஒதுக்கி இருக்கிறார். விளையாட்டுத்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றது முதல் இந்த நேரு ஸ்டேடியத்திற்கு வாரத்துக்கு மூன்று தடவை வந்து விடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். பின்பு அணி வகுப்பில் பங்கேற்று முதலிடம் பெற்ற சென்னை மண்டல மாணவ மாணவிகளுக்கு கோப்பையை பரிசாக வழங்கினார். பின்பு கேரம் போர்டு, செஸ், இறகு பந்து விளையாடி மாணவ மாணவிகளை ஊக்குவித்தார்

    ஆணையாளர் வீரராகவராவ் வரவேற்றார். அரசு கூடுதல் செயலாளர் முகமது நசிமுதீன் திட்ட விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் சி.வி. கணேசன், அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன், எம்.பி, பரந்தாமன் எம் எல் ஏ ,மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், அரசு செயலாளர்கள் அதுல்ய மிஸ்ரா, மேகநாத ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பயிற்சியில் பதினைந்து முதல், 30 வீரர், வீராங்கனையர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    • பள்ளி, கல்லூரிகளில் பயிலும், 12 முதல், 18 வயதுடைய வீரர், வீராங்கனையர் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உருவாக உள்ள தடகள பயிற்சி மையத்தில், சேர ஆர்வமுள்ளவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு த்துறை அழைப்பு விடுத்து ள்ளது.

    இது குறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் அறிக்கை:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் தடகள பயிற்சி மையம் அமைய உள்ளது. தடகள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    அவ்வகையில், திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு வீரர், வீராங்கனை தேர்வு, அதற்கான பயிற்சி முகாம், மார்ச், 10ம் தேதி, சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. பயிற்சியில் பதினைந்து முதல், 30 வீரர், வீராங்கனையர் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும், 12 முதல், 18 வயதுடைய வீரர், வீராங்கனையர் மார்ச், 10ம் தேதி காலை, 10 மணிக்கு சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கும் தடகள போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.

    இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்"

    ×