search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "materials"

    • கழிவு நீர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
    • பழைய டயர்கள் கொசு உற்பத்தியாகும் பொருட்களை வைத்து கொள்ளக் கூடாது.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் அக்க ரைவட்டம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையுடன் இணைந்து அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர், கண்ணையன் தலைமையில், அதம்பை சுகாதார ஆய்வாளர், எஸ், ராமநாதன் மற்றும் குழுவினர் இணைந்து ஊராட்சியில் இயந்திரம் மூலம் கொசு மருந்து 6 வார்டுகள் முற்றிலும் அடிக்கப்பட்டு கொசு ஒழிப்பு நடவடிக்கை, மற்றும் வீடுகளில் ஆங்காங்கே கழிவு நீர்களை உடனடியாக அகற்ற வேண்டும் வீட்டின் அருகே பழைய டயர்கள் கொசு உற்பத்தி ஆகும் பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
    • பள்ளியில் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் உள்ள கிராமங்களில் குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் ,காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சித் தினத்தன்றும் கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில் கிராம சபை கூட்டம் போல நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் வார்டு தோறும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பங்களிப்புடன் பகுதி சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது.

    அதன்படி உள்ளாட்சி தினமான இன்று தமிழகத்தில் முதல் முறையாக பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

    மேலும் முதல் முறையாக தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் என இரண்டு நகராட்சிகள் மற்றும் வல்லம், சுவாமிமலை உள்பட14 பேரூராட்சிகளிலும் முதல் முறையாக பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் இந்த பகுதி சபை கூட்டங்கள் நடந்தன. தஞ்சை மாநகராட்சி வார்டு எண் 1 பள்ளியக்ரகாரம் பகுதியில் பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது.

    துரை. சந்திரசேகரன் எம் .எல் .ஏ, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கலந்து கொண்டு வரவேற்றார்.

    கூட்டத்தில் 1 வார்டு 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடந்தன. பொதுமக்கள் சேர்ந்து ராமானுஜம் என்பவரை கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசிய விவரம் வருமாறு:- சிங்கப்பெருமாள் கோவில் அருகே வேகத்தடையும். பள்ளி அக்ரஹாரம் பகுதியில் உடற்பயிற்சி கூடமும்.

    நவீன கழிப்பிடமும்,சேதமடைந்த ரேஷன் கடையை சீரமைத்தும். அங்கன்வாடிக்கு புதிய கட்டிடமும் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி தர வலியுறுத்தி பேசினர்.

    ஆசிரியர் ஒருவர் பேசும்போது, நகராட்சி பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து உணவருந்தும் கூடத்தின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும். போதிய அளவில் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

    அப்போது 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசும்போது:-

    நான் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி செய்ய வேண்டும். பள்ளியில் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்று பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.மாணவியின் பேச்சை அனைவரும் ரசித்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கரந்தை பகுதி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தஞ்சை மாநகராட்சி 25-வது வார்டு உட்பட்ட பகுதியான கீழ ராஜவீதி மணிகர்ணிகேஸ்வரர் கோவிலில் நடந்த பகுதி சபை கூட்டத்துக்கு கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    இதில் பொதுமக்கள் தங்களது வார்டு சம்பந்த கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    • ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படுத்தல் எந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார எந்திரம் உள்ளிட்டவை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தூய்மை பணியாளரு–க்கென ஓய்வறை வழங்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டார்.

    அந்த அறிவிப்பை அடுத்து நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் ஆலோசனைபடி தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஓய்வறை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த ஓய்வறையை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைப்பதற்காக வருைா தந்தார்.

    திடீரென அவர் அருகில் நின்ற தலைஞாயிறு பேருராட்சி தூய்மை பணியாளர் மாரிமுத்துவைவை அழைத்து கட்டிடத்தை திறக்க வைத்தார் .கட்டிடத்தை திறந்த மாரிமுத்து ஆனந்த கண்ணீர்விட்டார்.

    ஓய்வறையை உடனடியாக கட்டிக்கொடுத்த தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகனை பாராட்டி கலெக்டர் அருண்தம்புராஜ் சால்வை அணிவித்தார்.

    அந்த ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படதையல் இயந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும்உணவு உண்பதற்கான டைனிங் டேபிள், கேரம் போர்டு, தாயங்கட்டை, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் முதலுதவி பெட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார இயந்திரம் உள்ளிட்டவை அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன், துணைத்தலைவர் கதிரவன், பேருராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் பேருராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் துப்பரவு பணியாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    கலெக்டரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தது.

    • நேற்றிரவு ஓட்டலின் பின்பக்கம் உள்ள கீற்று சமையல் கூடம் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
    • தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாயின.

    வேதாரண்யம்:

    வேதாரணியம் சேதுர ஸ்தாவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 67). இவர் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலின் அருகில்மே லமட வளாகத்தில் 40 ஆண்டுகளாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு இவரது ஓட்டலின் பின்பக்கம் உள்ள கீற்று சமையல் கூடம் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது தீ மளமள என்று பரவி சமையல் கொட்டகை முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத் துறையினர் மேலும் பரவாமல் அணைத்தனர். டிஎஸ்பி முருகவேல் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வந்து பார்னவையிட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாயின.

    • மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்களை மதுரை போலீஸ் கமிஷனர் வழங்கினார்.
    • ராஜேஷ்கண்ணன் (ஆயுதப்படை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கரிமேடு, தெற்குவாசல், மதிச்சியம் ஆகிய பகுதிகளில் உள்ள சிறுவர் மன்றத்துக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகம் இலவசமாக வழங்குவது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக ஷட்டில் பேட், பந்துகள், டென்னிஸ் பால், கிரிக்கெட் பேட் மற்றும் பந்துகள், கேரம் போர்டுகள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை கொள்முதல் செய்து ஆணையர் அலுவலக பண்டகப்பிரிவில் இருந்தது.

    மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இலவச பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசபெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு), தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ்கண்ணன் (ஆயுதப்படை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்க கூட்டம் வர்த்தக சங்கத் தலைவா் தென்னரசு தலைமையில் நடந்தது.
    • உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்தோனி, அன்பழகன் ஆகியோர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு உணவு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வர்த்தக சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வேதாரண்யம் வர்த்தக சங்கம் இணைந்து செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கக் கூட்டம் வர்த்தக சங்கத் தலைவா் தென்னரசு தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் சுபஹானி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாகை மாவட்டத் தலைவா் வேதநாயகம் வாழ்த்துரை வழங்கினார். நாகை மாவட்ட நியமன அலுவலா் டாக்டர் புஷ்பராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செறிவூட்டப்பட்ட உணவு பொருளின் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் எப்.எஸ்.எஸ்.ஐ டெக்னிக்கல் ஆலோசகர் செய்யது அகமது, உணவுபாதுகா ப்பு ஆலோசகர் ஜெகதீ ஸ்வரி ஆகியோர் விளக்க வுரையாற்றினர். ஜி.டி.பி அலுவலா் சித்ரா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்தோனி, அன்பழகன் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர்.

    மேலும் கூட்டத்தில் வர்த்தக சங்க துணைத் தலைவா் சுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் தங்கதுரை, தமிழழகன் உட்பட செயற்குழுஉறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். சங்க பொருளாளா் சீனி வாசன் நன்றி கூறினார்.

    • பாரம்பரிய உணவுகளில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
    • மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயாரித்து எடுத்து வந்த விதவிதமான பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திரும ருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையின் சார்பாக பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்ல ம்மாள் தலைமை தாங்கினார். பள்ளியின் கணித ஆசிரியர் சண்முகநாதன் பாரம்பரிய உணவு பொருட்களின் முக்கியத்துவம் பற்றியும் அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.ஆசிரியர்கள் தமிழ்செல்வி, கோகிலா ஆகியோர் துரித உணவினால் ஏற்படும் பாதிப்புகளை மாணவர்களிடம் எடுத்துக் கூறினர்.மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயாரித்து எடுத்து வந்த விதவிதமான பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினர்.மாணவர்கள் அனை வருக்கும் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.பள்ளியின் தேசிய பசுமை ப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் பவித்ரா நன்றி கூறினார். 

    • தாரமங்கலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கையால் பறிமுதல் செய்தனர்.
    • அந்த கடைகளுக்கு அபராதமாக ரூ. 6500 விதித்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி பகுதியில் தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளதாக தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் முஸ்தபா நகராட்சி பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டார்.

    அப்போது அண்ணாசிலை , பேருந்து நிலையம், தேர் நிலையம் ஓமலூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் சோதனையிட்டதில் மளிகை கடை, ஓட்டல், டீ க்கடை .வணிக வளாகம் ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு அபராதமாக ரூ. 6500 விதித்தனர்.

    மேலும் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி நகராட்சி ஆணையாளர் முஸ்தபா கூறுகையில்,

    நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ள நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

    தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடைபெறும். தொடர்ந்து பயன்படுத்தும் கடைகளை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், கடையின் உரிமத்தை ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளதால் வியாபாரிகளும் , பொதுமக்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூங்கில் மரங்களில் பரவிய தீப்பொறி காற்றில் பறந்து சிலம்பரசன் வீட்டின் கூரையில் பட்டு கூரை எரியத் தொடங்கியது.
    • சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த முயன்ற போது தீ வீடு முழுக்க பரவியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே பள்ளிவாரமங்கலம் மேலராமநாதபுரத்தில் வசித்து வரும் தமிழரசன் மகன் சிலம்பரசன் தனது வீட்டிலேயே சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். அவரது வீட்டிற்கு எதிர் புறம் மூங்கில் மரங்கள் அதிகம் உள்ளது. இந்த மூங்கில் குத்தில் லேசாக தீ பற்றி எரிந்துள்ளது.

    இதை கவனித்த சிலம்பரசன் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவக்கூடிய அபாயம் இருப்பதால் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கலாம் என்கிற அடிப்படையில் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று ஊராட்சி மன்றத் தலைவருக்கு தொலைபேசி எண்ணை வாங்கி தகவல் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் மூங்கில் மரங்களில் பரவிய தீப்பொறி காற்றில் பறந்து சிலம்பரசன் வீட்டின் கூரையில் பட்டு கூரை எரியத் தொடங்கியுள்ளது. அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிலம்பரசனின் மகள் லியாஸ்ரீ (வயது6) அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிலம்பரசன் குழந்தையை காப்பாற்றினார்.பிறகு தனது சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த முயன்ற போது தீ வீடு முழுவதுமாகப் பரவி உள்ளது. அங்கிரு ந்தவர்கள் தீயை அனைத்து பார்த்துள்ளனர். அதற்குள் வீடு முழுவதும் எரிந்து பொருட்கள் தீயில் கருகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அருகிலிருந்த மகேந்திரன் என்பவர் வீட்டின் கூரையிலும் தீ பரவியது.

    சிலம்பரசன் வீட்டில் இருந்த சவுண்ட்சர்வீஸ் பொருட்களானஸ்பீக்கர், ஆம்ப், ஹாரன் உள்ளிட்ட பொருட்கள் முழுவதுமாக தீயில் கருகின. அதேபோ ன்று வீட்டிலுள்ள குளிர்சாத னப்பெட்டி டிவி கிரைண்டர் மிக்ஸி உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் என மொத்தம் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சிலம்பரசன் வீட்டில் சேதமடைந்துள்ளது.

    மகேந்திரன் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகின. மேலும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ அடுத்தடுத்து வீடுகளுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    இது குறித்து வைப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகல் நேரத்தில் இந்த ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை ரூ. 91.90 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். #gajacyclone #salemcollectorrohini #relief

    சேலம்:

    சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ரூ16.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை கலெக்டர் ரோகிணி நேற்று அனுப்பி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இதுவரை ரூ. 91.90 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிக்கு பொதுமக்கள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் பெறும் மேஜையில் வழங்கலாம்.

    மேலும் ரொக்கப்பணம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்புவோர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் ராஜேஸ் குமாரின் செல்போன் எண்ணிற்கும் 97901-86569 மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் அறை எண்.132-ல் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை பிரிவில் உள்ள 0427-2452202 தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கலாம்.

    வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை, பற்று அட்டையின் மூலமாக இணையதளம் வழியாக செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்களது பங்களிப்புகளை குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக அரசு துணை செயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச்செயலகம், சென்னை 600 009, என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சேலம் மாநகராட்சி சார்பில் நேற்று 2-ம் கட்டமாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்ளை மாநகராட்சி கமி‌ஷனர் சதீஷ் அனுப்பி வைத்தார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் கட்டமாக ரூ.3 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டது. #gajacyclone #salemcollectorrohini #relief

    முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் பெரம்பலூர் கிளை சிறையில் இயங்கும் சட்ட உதவி மையத்திற்கு கணினி உள்ளிட்ட பொருட்களை கிளை சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.
    பெரம்பலூர்:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிதியிலிருந்து பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பெரம்பலூர் கிளை சிறையில் இயங்கும் சட்ட உதவி மையத்திற்கு கணினி, மேஜை, நாற்காலி மற்றும் சட்ட புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பாலராஜமாணிக்கம் தலைமை தாங்கி பேசுகையில், “இந்த பொருட்களை சிறை வாசிகள் நல்லமுறையில் பயன்படுத்தி கொண்டு தங்களது குறைகளை உடனுக்குடன் சட்டப்பணிகள் ஆணைக் குழுவிற்கும், சிறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சட்ட புத்தகங்களை படித்து தங்களது திறமைகளை வளர்த்து கொண்டால் குற்றங்கள் குறையும். சிறைவாசிகளின் நலனுக்காகவே மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது.

    எனவே அதனை நல்லமுறையில் சிறைவாசிகள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். இதையடுத்து முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் சட்ட உதவி மையத்திற்கு கணினி உள்ளிட்ட பொருட்களை கிளை சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) மஸ்ஹரிடம் வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளிதரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதி யுமான வினோதா, வக்கீல்கள் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, செயலாளர் சுந்தர ராஜன், அட்வகெட் அசோசியேசன் சங்க தலைவர் முகமது இலியாஸ், முன்னாள் அரசு சிறப்பு வக்கீல் பால்ராஜ், வக்கீல் ஜீவானந்தம், கிளை சிறை உதவி கண்காணிப் பாளர் ராமர், சக்திவெல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கரூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியின் தேவைக்காக ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீர்வரிசையாக பொதுமக்கள் வழங்கினர்.
    கரூர்:

    கரூர் அருகேயுள்ள மண்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவியாம்பாளையம் எனும் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் பலர் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். பள்ளியானது சிறிய கட்டிடத்தில் இயங்கிய போதிலும் மாணவர்களின் கல்வியையும், அவர்களது தனித்திறமையையும் மேம்படுத்துவதில் ஆசிரிய- ஆசிரியைகள் ஆர்வமாக செயல்படுகின்றனர். மேலும் மாணவர்களிடத்தில் உள்ள நிறை- குறைகளை அவர்களது பெற்றோரிடத்தில் எடுத்து கூறி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால் ஊர் பொதுமக்களும், மாணவர்களின் பெற்றோரும் இந்த பள்ளியை மேம்படுத்துவதற்காக தங்களால் இயன்ற உதவியை அவ்வப்போது செய்து வருகின்றனர். இதன் காரணமாக பெற்றோர்- ஆசிரியர்களிடத்தில் சரியான புரிதல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் 2018-19-ம் கல்வி ஆண்டில் சிவியாம் பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்வி சீர்வரிசையாக கொடுக்க பொதுமக்கள் முடிவு எடுத்தனர். அதன்படி நேற்று ஊரில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்தும் நோட்டு புத்தகம், பேனா-பென்சில் பாக்கெட்டுகள், சாக்பீஸ் பெட்டிகள், கடிகாரங்கள் உள்பட ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பெற்றனர். பின்னர் திருமண சீர்வரிசை கொண்டு வருவதை போல தாம்பூல தட்டுகளில் அந்த பொருட்களை வைத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை பெமினா விழிமலரிடம் அந்த பொருட்களை கல்வி சீர்வரிசையாக ஒப்படைத்தனர்.

    அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நதியா வரவேற்று பேசினார். ஊரின் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கிராம கல்விக்குழு தலைவர் மகேஷ் மற்றும் இந்திராணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து தலைமை ஆசிரியை பெமினா விழிமலர் பேசினார்.

    இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தினை போன் மூலம் தொடர்பு கொண்ட மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி சாமியப்பன், பொதுமக்கள்- பள்ளி ஆசிரியர்கள் நல்லுறவு தொடர வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் சிவியாம்பாளையத்தில் தொடக்க பள்ளி முடிந்ததும் அடுத்த கட்ட கல்வி பயில சில கிலோ மீட்டர் தூரம் மாணவர்கள் செல்ல வேண்டியிருக்கிறது. சரியான பஸ் வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தினமும் காலை, மாலை வேளையில் பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×