

வேதாரண்யம்:
வேதாரணியம் சேதுர ஸ்தாவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 67). இவர் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலின் அருகில்மே லமட வளாகத்தில் 40 ஆண்டுகளாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு இவரது ஓட்டலின் பின்பக்கம் உள்ள கீற்று சமையல் கூடம் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது தீ மளமள என்று பரவி சமையல் கொட்டகை முற்றிலும் எரிந்து சாம்பலானது.
தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத் துறையினர் மேலும் பரவாமல் அணைத்தனர். டிஎஸ்பி முருகவேல் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வந்து பார்னவையிட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாயின.