search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமிஷனர்"

    • 2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.
    • மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் என்ற 4 மண்டலங்கள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.

    இந்த வார்டுகளில் வசிக்கும் மக்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை சேவைக் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள், கடைகளின் வாடகை போன்ற வைகள் ஆண்டுதோறும் மார்ச் 31-ந்தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும்.

    அந்த வகையில் 2023-2024-ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான காலம் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.

    ஆனால் இதுவரை பலர் வரிகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் மாநகராட்சிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த மாதத்திற்குள் வரியை வசூலிக்க ஆலோசிக்கப்பட்டது.

    பெரும்பாலானோர் பணிக்கு செல்பவர்கள் வீடு திரும்ப நேரம் ஆகிவிடுவதால், அவர்கள் வரியை கொண்டுவந்து மையங்களில் செலுத்துவதற்கு நேரம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கருத்து எழுந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நூதன உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    அதன்படி அனைத்து மண்டலங்களிலும் உள்ள வரிவசூல் மையங்களும் கூடுதல் நேரம் செயல்பட அறிவுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக வரித்தொகைகளை செலுத்திட ஏதுவாக வருகிற 31-ந்தேதி வரை மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை விடுமுறையின்றி செயல்படும் என கமிஷனர் தெரிவித்தார்.

    அதன்படி அனைத்து வரிவசூல் மையங்களும் நேற்று முதல் கூடுதல் நேரம் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு சில மையங்களில் நேற்று இரவு நேரத்திலும் பெரும்பா லானோர் தங்களது வரி களை செலுத்தினர். இதனை பயன்படுத்தி 2023-2024ம் ஆண்டிற்கான வரித் தொகைகளை உடனடியாக செலுத்தி உரிய ரசீது பெற்று கொள்ள கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.

    • சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மோகனாவுடன் குணசேகரன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதுடன் சந்தேகப்பட்டு தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். பின்னர் மோகனாவின் சொந்த ஊர் ஓமலூர் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிரந்தர கமிஷனர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
    • அப்துல்ஹாரீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பின் நகராட்சி கூட்டங்களில் பிரச்சினை, கூச்சல், குழப்பம் நிலவி வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி கடந்த 2021-ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து நகராட்சி கமிஷனராக முகமது சம்சுதீன் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவருடைய செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு திருப்தி அளிக்காததால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து அவர் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு, பவானி கமிஷனராக இருந்த தாமரை திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒருசில நாட்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில், மருத்துவ விடுப்பில் சென்றார். இதையடுத்து காங்கயம் நகராட்சி பொறுப்பு கமிஷனராக இருந்த பன்னீர்செல்வமும், அதைத்தொடர்ந்து வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மோகன்குமாரும் திருமுருகன்பூண்டிக்கு பொறுப்பு கமிஷனராக பணியாற்றினர். வாரத்தில் ஒருசில நாட்கள் மட்டுமே அவர்கள் வந்து சென்றதால் அலுவல் பணிகள் தடைபட்டது.

    இதையடுத்து நிரந்தர கமிஷனர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அப்துல்ஹாரீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார். ஆனால் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து நகராட்சி கூட்டங்களில் பிரச்சினை, கூச்சல், குழப்பம் நிலவி வந்தது. இதனால் கவுன்சிலர்களும், பொதுமக்களும் கடும் அதிருப்திக்குள்ளாகினார்கள். இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் ஹாரீஸ் சிவகங்கை மாவட்டத்திற்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    அவருக்கு பதிலாக திட்டக்குடி நகராட்சி கமிஷனர் ஆண்டவன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனராக ஆண்டவன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் குமார் தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.

    • மே1 தொழிலாளர் தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
    • கம்யூனிஸ்டு, தி.மு.க., தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆண்டுதோறும் மே1 தொழிலாளர் தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தி.மு.க., கம்யூனிஸ்டு, அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தொழிற்சங்கங்கள் சார்பில் பொதுக்கூட்டம், பேரணி நடத்தப்பட உள்ளது. கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் அரிசிக்கடை வீதியிலும், தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருப்பூர் ராயபுரத்திலும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. அ.தி.மு.க. சார்பில் பெரிச்சிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் திருப்பூர் மாநகர போலீசில் அனுமதி கேட்டு மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து கம்யூனிஸ்டு, தி.மு.க. தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தெற்கு போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர். ஆனால் கூட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    இதனால் அதிருப்தி அடைந்த திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,குணசேகரன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வக்கீல் அணி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து கமிஷனர், தெற்கு உதவி போலீஸ் கமிஷனர் கார்த்திக்கேயனை தொடர்பு கொண்டு அ..தி.மு.க. தொழிற்சங்க கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாததற்கான காரணங்கள் குறித்து விளக்கங்கள் கேட்டார். பின்னர் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கமிஷனர் தெரிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து சென்றனர். அனைத்து கட்சிகளின் மே தின பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ள நிலையில், அ.தி.மு.க. தொழிற்சங்க கூட்டத்திற்கு அனுமதி அளிக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    • 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம்.
    • இன்னும் 10 சதவீத வரி மட்டுமே வசூல் செய்ய வேண்டியது உள்ளது.

    திருப்பூர் :

    திருமுருகன்பூண்டி நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் மார்ச் 31-ந் தேதியுடன் நிதியாண்டு நிறைவடைவதையொட்டி 3 மாதங்களுக்கு முன்பே நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவசூல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் இந்த நிதியாண்டு நிறைவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் வரிவசூலை தீவிரப்படுத்தி வருகிறது. நகராட்சி அலுவலகம் மற்றும் வரி வசூல் மையங்களில் பொதுமக்கள் தங்களது சொத்துவரி, குடிநீர் வரி, சாக்கடை கால்வாய் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தி வருகின்றனர்.

    இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அப்துல் ஹாரிஸ் கூறுகையில், நகராட்சியில் இதுவரை 90 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 சதவீத வரி மட்டுமே வசூல் செய்ய வேண்டியது உள்ளது. இதுவரை வரி செலுத்தாதவர்கள் இன்று மாலைக்குள் வரியினங்களை செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றார்.

    கடலுார் மாவட்ட திட்ட இயக்குனராக இருந்த பவன்குமார், திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனராக பவன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த கிராந்திகுமார், கோவை கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    அவருக்கு பதிலாக, கடலுார் மாவட்ட திட்ட இயக்குனராக இருந்த பவன்குமார், திருப்பூர் மாநகராட்சியின் புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, தாராபுரம் சப்-கலெக்டராக பணியாற்றியவர். இவர் இன்னும் ஒரு சில தினங்களில் திருப்பூர் மாநகராட்சியின் கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார்.

    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு 5 கமிஷனர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
    • திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.

    அனுப்பர்பாளையம்:

    திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் இன்னும் நகராட்சிக்கு தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மேலும் நகராட்சிக்கு நியமிக்கப்பட்ட முதல் கமிஷனர் முகமது சம்சுதீனுக்கு பிறகு இதுவரை நிரந்தர கமிஷனர் நியமிக்கப்படவில்லை.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு 5 கமிஷனர்கள் பொறுப்பேற்றுள்ளனர். தற்போது வெள்ளக்கோவில் நகராட்சி கமிஷனர் மோகன்குமார் திருமுருகன்பூண்டிக்கு பொறுப்பு கமிஷனராக இருந்து வந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி புதிய கமிஷனராக அப்துல் ஹாரிஸ் நியமனம் செய்யப்பட்டுளளார். திருத்துறைப்பூண்டி கமிஷனராக பணியாற்றி வந்த இவர், திருமுருகன்பூண்டிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாளை (திங்கட்கிழமை) திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக அப்துல் ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.

    • முகம்மது சம்சுதீன் தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
    • பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என்று தெரிவித்தார்.

       அனுப்பர்பாளையம்  : 

    திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக இருந்த முகம்மது சம்சுதீன் தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி கமிஷனராக இருந்த தாமரை நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தாமரை திருமுருகன்பூண்டி கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் குமார், துணைத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.

    புதிய கமிஷனராக பொறுப்பேற்ற தாமரை, மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என்று தெரிவித்தார். முன்னதாக தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப் பட்ட கமிஷனர் முகம்மது சம்சுதீனுக்கு வழியனுப்பு விழாநடைபெற்றது .

    இதில் தலைவர் குமார் தலைமையில் துணைத் தலைவர்,கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். அனைவருக்கும் கமிஷனர் முகம்மது சம்சுதீன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    • தேவண்ணக்கவுண்டனுாரில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு மக்களுக்கு பயன ளிக்கும் வகையில் அரசு நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, கிடையூர்மேட்டூர் கிராம சேவை மைய கட்டிட வளாகத்தில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. சங்ககிரி ஆர்.டி.ஓ சவும்யா தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ. முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில், வேளாண்மை துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, கால்நடை துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு பயன ளிக்கும் வகையில் அரசு நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பின்னர், இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, சாக்கடைவசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட 74 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் ஆர்.டி.ஓ.விடம் வழங்கினார்கள்.

    அந்த மனுக்களை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி

    வைத்து நடவடிக்கை எடுக்கப்ப டும் என கூறினார். முகாமில், சங்ககிரி தாசில்தார் பானுமதி, தேவண்ணக்கவுண்டனுார் ஊராட்சி மன்ற தலைவர் சாரதாபழனியப்பன், மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார் உட்பட பல்துறை அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாநகர, மாவட்ட போலீஸ் என இரு பிரிவுகளாக உள்ளது.
    • ஸ்டேஷன் போலீசாரின் நடவடிக்கையை கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது வழக்கம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர போலீசில், நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த போலீசாரை இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். திருப்பூர் மாவட்டத்தில் மாநகர, மாவட்ட போலீஸ் என இரு பிரிவுகளாக உள்ளது. மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் நிலையம் வாரியாக நுண்ணறிவு பிரிவு போலீசார் பணியாற்றி வருகின்றனர். அந்தந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம், சட்டவிரோத செயல்கள், ஸ்டேஷன் போலீசாரின் நடவடிக்கை உள்ளிட்டவற்றை கண்காணித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது வழக்கம்.

    இப்பிரிவு முழுமையாக, போலீஸ் கமிஷனரின் கட்டுப்பாட்டில் செயல்படும்.நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் போலீசாரை இடமாற்றம் செய்ய சமீபத்தில் பட்டியல் தயார் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தது.இச்சூழலில், ஐ.எஸ்., பிரிவில், அலுவலக, ஸ்டேஷன் பணியை மேற்கொண்டு வந்த நிவாஸ் சக்கரவர்த்தி, ரகுபதி, கணேஷ்குமார், பிரபு, பிரகாஷ், குப்புசாமி, ஜான் பிரவின், சத்யமூர்த்தி, சார்லி என 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து தெற்கு, திருமுருகன்பூண்டி, வீரபாண்டி, நல்லூர், அனுப்பர்பாளையம், வடக்கு ஆகிய ஸ்டேஷன்களை சேர்ந்த பூபதி, கார்த்திகேயன், ஜெயசந்திரன், பாலசுப்ரமணியன், குமார், நாகேந்திரன், சதீஷ்குமார் ஆகியோரை ஐ.எஸ்., பிரிவுக்கு மாற்றி கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

    • மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்களை மதுரை போலீஸ் கமிஷனர் வழங்கினார்.
    • ராஜேஷ்கண்ணன் (ஆயுதப்படை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கரிமேடு, தெற்குவாசல், மதிச்சியம் ஆகிய பகுதிகளில் உள்ள சிறுவர் மன்றத்துக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகம் இலவசமாக வழங்குவது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக ஷட்டில் பேட், பந்துகள், டென்னிஸ் பால், கிரிக்கெட் பேட் மற்றும் பந்துகள், கேரம் போர்டுகள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை கொள்முதல் செய்து ஆணையர் அலுவலக பண்டகப்பிரிவில் இருந்தது.

    மாநகர ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இலவச பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசபெருமாள் (தெற்கு), மோகன்ராஜ் (வடக்கு), தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜேஷ்கண்ணன் (ஆயுதப்படை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாநகர பகுதியில் 8 சட்ட ஒழுங்குபோலீஸ் நிலையங்கள், 2அனைத்து மகளிர் நிலையங்கள், 2போக்குவரத்து போலீஸ் நிலையங்கள்செயல்பட்டு வருகின்றன.
    • குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரப்பகுதியில்உள்ள போலீஸ் நிலையங்களில் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு ஆய்வு மேற்கொண்டார்.திருப்பூர் மாநகர பகுதியில் 8 சட்ட ஒழுங்குபோலீஸ் நிலையங்கள், 2அனைத்து மகளிர் நிலையங்கள், 2போக்குவரத்து போலீஸ் நிலையங்கள்செயல்பட்டு வருகின்றன. இதில் அனுப்பர்பாளையம், கொங்கு நகர், கே.வி.ஆர். நகர், நல்லூர் என 4 சரகமாக பிரிக்கப்பட்டு 4 உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெளி மாநில,மாவட்ட மக்கள் அதிகம் தங்கி பணியாற்றும்திருப்பூர் மாவட்டத்தில்கொலை, கொள்ளை,ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள்அடிக்கடி நடைபெறுகிறது.

    இந்நிலையில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, அனுப்பர்பாளையம்,வடக்கு, தெற்கு, நல்லூர்போலீஸ் நிலையங்களில் திடீரென ஆய்வுமேற்கொண்டார். அப்போது அங்கிருந்தபொதுமக்களிடம் தங்கள்கோரிக்கைகள் குறித்துகேட்டறிந்தார். மேலும், போலீசாரிடம் போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். அேதபோல் நீண்ட நேரம்போலீஸ் நிலையங்களில் யாரையும் உக்கார வைக்காமல் ெபாதுமக்களின் குறைகளை கேட்க வேண்டும். குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். லாக்கப் மரணம் நிகழாமல் பார்த்துக்ெகாள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். 

    ×