search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devannakoundanur"

    • தேவண்ணக்கவுண்டனுாரில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு மக்களுக்கு பயன ளிக்கும் வகையில் அரசு நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, கிடையூர்மேட்டூர் கிராம சேவை மைய கட்டிட வளாகத்தில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. சங்ககிரி ஆர்.டி.ஓ சவும்யா தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ. முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில், வேளாண்மை துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, கால்நடை துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு பயன ளிக்கும் வகையில் அரசு நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பின்னர், இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, சாக்கடைவசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட 74 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் ஆர்.டி.ஓ.விடம் வழங்கினார்கள்.

    அந்த மனுக்களை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி

    வைத்து நடவடிக்கை எடுக்கப்ப டும் என கூறினார். முகாமில், சங்ககிரி தாசில்தார் பானுமதி, தேவண்ணக்கவுண்டனுார் ஊராட்சி மன்ற தலைவர் சாரதாபழனியப்பன், மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார் உட்பட பல்துறை அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×